<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-32554211</id><updated>2011-10-21T04:45:07.543-07:00</updated><title type='text'>யுகபாரதி</title><subtitle type='html'>கவிதைகளும் கவிதை சார்ந்த பகிர்வுகளும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>43</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-7008352884844791842</id><published>2008-09-07T04:18:00.000-07:00</published><updated>2008-09-07T04:19:06.891-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள் - 21</title><content type='html'>&lt;strong&gt;தொ&lt;/strong&gt;ன்னூறுகளில் (90) ஐயாயிரம் ரூபாய் என்பது எங்கள் வாழ்நிலையைப் பொறுத்தவரையில் பெரிய தொகை. அது தொகையாக அல்லாமல் நம்பிக்கையாகத் தெரிந்தது. மேலும் கொஞ்ச காலம் சென்னைப் பட்டிணத்தில் வாழ்வதற்கு தேவையான உந்து சக்தியைக் கொடுத்தது. காசோலையாகக் கிடைத்த ஐயாயிரம் ரூபாயை ரொக்கமாக மாற்றுவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.&lt;br /&gt;சென்னை முகவரி நிரந்தரம் இல்லாத பட்சத்தில் ஒவ்வொரு வங்கியும் எங்களிடம் எதிர்பார்த்த தரவுகள் எதுவும் இல்லாததால் ஒரு வங்கியிலும் கணக்கு தொடங்க முடியவில்லை. பேசாமல் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினரிடமே காசோலையைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாமா என யோசித்தோம். அதுவும் சரியாகப் படவில்லை. பிறகு வேறொரு நண்பரின் உதவியோடு காசோலை பணமாகக் கிட்டியது.&lt;br /&gt;சென்னைக்கு வந்த நாங்கள் இருவரும் சம்பாதித்த முதல் தொகை என்பதால் அப்பணத்தை செலவழிக்க மனமே வரவில்லை. புத்தம் புதுத் தாள்களை முகர்ந்து கொண்டே மகிழ்ச்சி அடைந்தோம். காசோலை பணமாக மாறும்வரை இடைப்பட்ட நாள்களில் அடிப்படைத் தேவைகளுக்காக காசோலையைக் காட்டி நண்பர்களிடம் கடன் பெற்றிருந்தோம். பணம் இருக்கிறது என்கிற தைரியம் செலவுகளை அதிகப்படுத்திவிடுகிறது. சாதாரணமாக ஆகின்ற செலவைக் கூட கொஞ்சம் கூடுதலாக ஆக்கிக் கொள்ள துணியும் தருணங்கள். நல்ல ஓட்டல்களில் போய் உபசரிப்பாளனின் கண்களை உற்றுப்பார்த்து கர்வத்தோடு வேண்டியதைக் கேட்டுச் சாப்பிட்டோம். டிப்ஸ் என்ற கொச்சையை அதிக ரூபாய் வைத்து பரிமாறி அவனை ஆச்சரியப்படுத்தினோம். நன்றாகப் போயின இருபது நாட்கள்.&lt;br /&gt;அந்த இருபது நாட்களில் எனக்கும் சம்பளம் வந்தது. ஆயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய். ஐயாயிரம் போல அச்சம்பளம் ஆனந்தப்படுத்தவில்லை. என்றாலும் அடையாளம் கிடைத்ததே எனும் நிறைவு. வாழத் தகுதியுடைய ஒருவனாக எங்களைத் தயார்படுத்திக் கொண்டோம் என்பது மாதிரியான பிரமை. நானும் சரவணனும் சென்னையில் நன்றாக வாழ்கிறோம் என்பதை எங்களது வீடுகளுக்குத் தொலைபேசியில் சொல்லியபோது அவர்களிடமிருந்து அதை மகிழ்வாக ஏற்றுக்கொண்ட தொனியை காணாமல் இருந்தோம். பிள்ளைகள் இரண்டும் சென்னை நகரத்தில் பராரியாகவே திரிகின்றன என அவர்கள் உள்மனம் எங்கள் தொலைபேசி உரையாடலை உணர்ந்திருக்கலாம். இருவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குக் கொஞ்சம் பணம் அனுப்பினால் நிச்சயம் நாம் நலமாகவே இருக்கிறோம் என நம்புவார்கள் என்பதாகப் பேசிக் கொண்டோம்.&lt;br /&gt;நமக்கு பணம் அனுப்பும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்களே எனும் பெருமிதத்தில் சந்தோஷப்படுவார்கள் என அப்படியொரு முடிவை எடுத்தோம்.&lt;br /&gt;எடுத்த முடிவுபடியே பணமும் அனுப்பினோம். ஆனால் அனுப்பிய பணம் என் வீட்டில் ஏற்கப்படாமல் திரும்பவும் என் முகவரிக்கே வந்து சேர்ந்தது. கூடவே அம்மாவின் கடிதம்.&lt;br /&gt;"தம்பி..., உன் தேவைக்கேற்ப வாழ்ந்து பழகு. எனக்குப் பணம் அனுப்ப வேண்டும் எனச் சிரமப்படாதே...! உனக்குப் பொறுப்பு உண்டு என்பதை அறிவேன். இந்தப் பணத்தையும் நல்ல புத்தகமோ ஆடையோ வாங்கிக்கொள்ள பயன்படுத்து. அன்புடன் அம்மா" என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.&lt;br /&gt;கடிதத்தின் மொழிநடை என்னால் இப்போது கிரகித்துக் கூறப்பட்டுள்ளது. அம்மாவின் கடிதம் இன்னும் வெளிப்படையான அன்பால் மட்டுமே எழுதப்பட்டிருந்ததாக நினைவு. அம்மாவின் கையெழுத்து கிச்சடி அரிசியைப் போல ·ள·ளமாக இருக்கும்.&lt;br /&gt;கையில் கிடைத்த ரூபாயை வைத்து நானும் சரவணனும் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கத் தீர்மானித்தோம். நாங்கள் தற்காலிகமாக தங்கியிருந்த அம்பேத்கர் விடுதிக்கு அருகிலேயே ஒரு மேன்சனில் அறை கிடைத்தது. சரவணனுக்கு அந்த மேன்சன் ரொம்பவும் பிடித்தது. அடிப்படையிலேயே சரவணனுக்கு சினிமா ஆர்வம் இருந்ததால் எங்களுக்கு அறை எடுக்க ஏற்பாடு செய்தவர் அந்த மேன்சனில்தான் இயக்குனர் விக்ரமனும் நடிகர் விஜயகாந்தும் ஆரம்பத்தில் வசித்ததாகச் சொன்னார். துண்டு துக்கடா கதாபாத்திரங்களில் இன்றுள்ள பலபேர் இங்கிருந்துதான் வெள்ளித்திரைக்குப் போனார்கள் என்று தெரிந்ததும் சரவணன் தங்கினால் அந்த மேன்சனில் தான் தங்குவது என்று பிடிவாதம் பிடித்தான். எனக்குப் புரிந்து போனது. வேறு அறை தேடி அலைந்து திரிவதைவிட அந்த அறையே போதும் என்று பட்டது.&lt;br /&gt;முதல் நாள் இரவே விடுதி நண்பர்களிடம் பரஸ்பரம் சொல்லிக்கொண்டு ஏதோ புதுவீடு கட்டி குடிபுகுவதுபோல தடபுடலாகக் கிளம்பினோம். ஆளுக்கு ஒரு பையைத் தவிர வேறு விசேஷமாக எங்களிடம் ஒன்றுமில்லை. ரகுபதியும் பாலாவும் யாரோ ஒரு தொலைபேசி ஜோதிடரிடம் நல்ல நேரம் கேட்டு, விடியற்காலையில் போவது உசிதம் என்றனர். அதேமாதிரி ஒரு விடிகாலையில் அப்சரா மேன்சனுக்கு நண்பர்கள் சூழப் புறப்பட்டோம்.&lt;br /&gt;மேன்சனுக்கு நுழைந்தால் ஒரே புழுதி!&lt;br /&gt;படிக்கட்டுகளில் மூலை முடுக்கெல்லாம் திட்டுத்திட்டாக பான்பராக் மற்றும் எச்சில் கறை. வெகுநாட்களாக ஒட்டடை அடிக்கப்படாத சுவர்கள். கட்டில் எனும் பெயரில் செய்து போடப்பட்டிருந்த பலகை. தேங்காய் நாரில் செய்த மெத்தை. அதிலும் அங்கங்கே கிழிசல். சரவணனையும் என்னையும் ரகுபதி பாவத்தோடு பார்த்தான்.&lt;br /&gt;'மூட்டைப்பூச்சி இருக்கும்போல' என பாலா பதிலுக்கு பாவப்பட்டான்.&lt;br /&gt;மனசுக்குள் அதிருப்தி குடியேறிக்கொண்டது. ஆனாலும் வாய்த்ததை ஏற்கும் பக்குவத்தில் பேசாமல் இருந்தோம். விடிந்தது. நண்பர்கள் விடைபெற்றார்கள். ஏழு மணிவாக்கில் எங்கள் அறைக்கதவை படபடவென்று யாரோ தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டு திறந்தோம். திறந்தால் மேன்சன் ரூம் பாய் நின்றிருந்தான்.&lt;br /&gt;'சார்... தண்&amp;shy;ர் வருகிறது... பிடித்துக் கொள்ளுங்கள்' என்றான்.&lt;br /&gt;'தண்&amp;shy;ர் வருகிறது. பிடித்துக் கொள்ளுங்களா...? ஏன் எப்போதும் தண்&amp;shy;ர் வராதா?'&lt;br /&gt;'வராது சார்... எட்டு மணி வரைதான வரும். அதற்குள் குளித்து துவைத்துக் கொள்ளுங்கள்' என்றான்.&lt;br /&gt;எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. சரவணனைப் பார்த்தேன்.&lt;br /&gt;'விக்ரமனும் விஜயகாந்தும் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியிருக்காங்க இல்ல...' என்றேன்.&lt;br /&gt;என்னை அடிப்பதுபோல் சிரித்துக் கொண்டே கையை ஓங்கினான்.&lt;br /&gt;வாளியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குப் போனோம். அங்கே போனால் மேன்சனில் இருக்கும் அத்தனை சிகாமணிகளும் வரிசையில் நின்றிருந்தார். நிற்கிற வரிசைக்கும் குளியலறை எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. நிற்பது இருபது பேர். ஆனால் மூன்றே மூன்று குளியல் அறை. இருபது பேரும் குளித்து முடிப்பதற்குள் தண்&amp;shy;ர் நின்றுவிடும்.&lt;br /&gt;'உன்னை நினைத்து' என்றொரு திரைப்படம். அதில் காட்டப்படும் மேன்சனின் பெயரும் அப்சரா தான்.&lt;br /&gt;அப்படத்தை இயக்கிய விக்ரமன், தன் ஆரம்பகால மேன்சன் வாழ்க்கையைத்தான் காட்டியிருக்கிறார் போல!&lt;br /&gt;அந்த மேன்சன் வாழ்வு எங்களை ரொம்பவே படுத்தியது. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவிதமான மனிதர்கள். நகரத்திற்குப் பிழைக்க வந்த கிராமத்து மனிதன் முதல் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் இரவுப் பாடகன் வரை எத்தனையோ விதமான கதாபாத்திரங்கள்.&lt;br /&gt;சொந்த சோகங்களை மனசுக்குள் புதைத்துக் கொண்டு வேஷ சிரிப்பில் வெளி உலகத்தை தரிசிப்பவர்கள். எங்கள் அறைக்குப் பக்கத்தில் ஒரு இளைஞர் தங்கியிருந்தார். அப்போது ஐ.ஏ.எஸ். படிப்புக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். எப்போதும் அவர் கையில் புத்தகம் இருந்துகொண்டே இருக்கும்.&lt;br /&gt;இன்று ஏதாவது ஒரு வடக்கத்தி மாநிலத்தில் அவர் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கக்கூடும். அவர் அறைக்கும் எங்கள் அறைக்கும் நேரெதிரே அமைந்த அறையில்தான் சதா குடியில் நட்சத்திர ஓட்டலில் இரவுப் பாட்டுப் பாடும் பாடகன் குடியிருந்தான். அவனுக்குப் பாட்டுதான் சகலமும். ஏதாவது ஒரு சங்கதி, ஏதாவது ஒரு கமகம், ஏதாவது ஒரு சுருதி, ஏதாவது ஒரு பேஸ், ஏதாவது ஒரு அடடா... அவன் அறையிலிருந்து வெளிவந்து கொண்டே இருக்கும்.&lt;br /&gt;ஒரு தெறித்துப்போன ஆர்மோனியத்தில் எப்போதும் இந்திப் பாடலை இசைத்தபடி ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பான்.&lt;br /&gt;படிக்கிறவனுக்கு பாட்டு இடையூறு. பாடுகிறவனுக்கு மௌனம் இடையூறு!&lt;br /&gt;இந்த இரண்டு பக்கமும் இடிபட்டுக்கொண்டே கனவுகளுடன் நாங்கள்!&lt;br /&gt;இந்த வாழ்க்கை சுவாரசியங்கள் நிரம்பியது?&lt;br /&gt;- பயணம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-7008352884844791842?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/7008352884844791842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=7008352884844791842&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/7008352884844791842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/7008352884844791842'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/09/21.html' title='நடைவண்டி நாட்கள் - 21'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-3582754061193912341</id><published>2008-09-07T04:16:00.000-07:00</published><updated>2008-09-07T04:17:03.209-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள் - 20</title><content type='html'>&lt;strong&gt;ந&lt;/strong&gt;ந்தக்குமாரிடம் நான் கேட்க விரும்பிய கேள்விகளில் ஒன்று, ஏன் எல்லோரையும் போல் இல்லாமல் தனித்தீவாக ஒதுங்கி வாழ்கிறீர்கள் என்பது. சந்தர்ப்பம் வாய்க்கும் போது தான் இம்மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டும். நம்மோடு நெருங்கிப் பழகாதவரை, ஒருவர் மீது நமக்கு உள்ள விமர்சனத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தக் கூடாது. அப்படி வெளிப்படுத்துவதால் எதிராளியின் இதயம் காயம் பட்டுவிடும் என்பதோடு நம் அறிமுகத்தையே அவர் துண்டிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் அமைதி காத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லப் போனால் நந்தக்குமாரிடம் அக்கேள்வியைக் கேட்பதற்காகவே, அவரிடம் கூடுதல் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பினேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது சந்திப்பது என்றில்லாமல் அவரை சந்திப்பதற்காகவே சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொள்ள முனைந்தேன். எப்போது சந்தித்தாலும் அவரிடம் எனக்கு சிலாகிக்க சில விஷயங்களாவது கிடைத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வை தத்துவ தரிசனத்தோடு பார்க்க அவர் எங்கிருந்து கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. அவர் பிற மாணவர்களிடம் காட்டிக்கொண்ட முகமல்ல அவருடைய அசல் முகம். அசல் முகம் வெகுளியானது. வெளிப்படையானது. காதல் தோல்விக்காரர் போல தன்னை பறைசாற்றிக் கொள்வது அவர் ஏற்படுத்தி சந்தோஷம் காணும் நாடகத்தனம். தன்னைப்பற்றிப் பிறர் பேசுவதற்கு ஏற்ப இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஒருமுறை அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். அவர் பேச்சுக்கும் செயலுக்கும் இருந்த பாரிய வித்தியாசத்தை விமர்சிக்க வேண்டும் போலிருக்கும். தன்னைப் பற்றி பிறர் பேச வேண்டும் என்பதற்காக தன்னை கோமாளியாக்கிக்கொள்ள வேண்டுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கோமாளித்தனம் தான். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அரசியலில், இலக்கியத்தில், சினிமாவில் இப்படியான கோமாளிகள் தான் கோலோச்சுகிறார்கள். நாம் சந்தைப் பொருளாக வேண்டுமானால், நமக்கு அடையாளமும், நம்மைப் பற்றி பிறர் அறிந்தும் இருக்க வேண்டும். ஒரு சாமியார் எதற்காக தொலைக்காட்சியில் தோன்றிப் பேட்டி அளிக்கிறார். ஆன்மீகம் அல்லது தியானம் உயர்ந்தது என யாவருக்கும் தெரியும். ஆனாலும், விளம்பரப்படுத்திக் கொண்டாலன்றி போய்ச்சேராது. அப்படித்தான் இதுவும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தொடக்கத்தில் அவர் பேசுவன யாவும் குழப்பத்தையே கொண்டு வந்தன. காலப் போக்கில் அவர் மீது ஈர்ப்பு ஏற்படவே, அவர் சொல்வன யாவும் வேதம் போல் மாறி விட்டது. செய்தித்தாள்களை வாசித்துவிட்டு காலை உணவுக்காக விடுதிக்குப் போகும் போது அவருடன் விவாதிப்பேன். பேசுவார்.. பேசுவார்.. பேசிக்கொண்டே இருப்பார். என்னையும் அவருக்குப் பிடித்திருந்தது. என்னுடன் உரையாடுவதை, விவாதிப்பதை பெருமையாகக் கருதுவதாகக் கூறுவார். ஆவுடையார் கோயில், தார்ச்சாலை, புளியமரங்களுக்கு வாயிருந்தால் நந்தக்குமாரின் உரையாடல்களைச் சொல்லும். புளியம்பூ படர்ந்த அச்சாலையில் நீளமான நடையோடு அவர் சிகரெட் புகைத்துக் கொண்டே பேசிய பேச்சுகள் ஒரு தலைமுறைக்குப் போதுமான பேச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக் கல்வி முறை அவருக்கு அறவே பிடித்திருக்கவில்லை. "மனப்பாடம் செய்து தாளிலே வாந்தியெடுப்பதற்கு பெயர் கல்வியா.." என்று பொருமித் தீர்ப்பார். "அது எப்படின்னா.." என்று இரண்டு வாக்கியங்களுக்கு இடையே ஒருமுறையாவது சொல்வார். அது எப்படி? என்ற கேள்விதான் அவரை எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள தூண்டியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பள்ளிச் சூழல், குடும்பச் சுழல் போல கல்லூரிச் சூழலும் இனியதாகவே மாறிக்கொண்டிருந்தது. பாடத்திற்கு அப்பாலும் நான் கற்க வேண்டியது நிறைய இருந்தன. அவ்வப்போது என் கவிதை, இலக்கியப் பேச்சுக்கு தீனி போடுவது போல் ஆள் கிடைத்து விடுவது ஆச்சர்யமாகவே படுகிறது. கல்லூரியில்  மாணவர் தேர்தல் நடந்தது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தான் தலைவருக்குப் போட்டியிட முடியும். நந்தக்குமார் போட்டியிட்டால் எளிதாக வெற்றியடைவார் என்று சொல்லிக் கொண்டார்கள். உண்மை அதுதான் என்றாலும், நந்தக்குமாருக்கு அதில் பெரிதாக ஈடுபாடு இல்லை. மாணவர் தேர்தலென்பது மடச்செயல். இந்தக் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக நடக்கும் அநியாயங்களை இந்தத் தேர்தல் தட்டிக்கேட்க உதவாது. தேர்தல் என்றால் அதிகாரங்களைக் கைப்பற்றுவது. அதிகாரங்களைக் கைப்பற்றி, துஷ்பிரயோகங்களை நிறுத்துவது. ஆனால், இங்கே என்ன நடக்கிறது? துஷ்பிரயோகம் செய்வதற்காகவே, அதிகாரங்களைக் கைப்பற்றுகிறார்கள். மாநிலத் தேர்தல் ஆனாலும்,  மத்தியத் தேர்தல் ஆனாலும், மாணவர் தேர்தல் ஆனாலும் இதுதான் நிலைமை என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதியில் நிறைய சீர்கேடுகள் நடந்து வந்தன. விடுதிக் காப்பாளர், பொய்க்கணக்கு காட்டி மாணவர்களின் தொகையை சுவீகரித்துக் கொண்டிருந்தார். உணவு, அரசுக் கல்லூரிகளுக்கே உரிய நிலையை விட படுமோசமானதாக இருந்தது. ஒரே மாதிரியான பதார்த்தங்களும், ஊசிப்போன வாடையடிக்கும் உணவையும் விடுதி நிர்வாகம் வழங்கிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் சீர்படுத்துவதாகச் சொல்லியே இரண்டு மூன்று பேரில் தமிழ்ச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்ச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது நாள் கல்லூரியே அமளி துமளிப்பட்டது. தமிழ்ச்செல்வன், நந்தக்குமாரைத் தாக்கி விட்டதாகவும், நந்தக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கதறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்தக்குமார் என்னைப்போல பலரையும் ஈர்த்திருக்கிறார் என்ற செய்தி மருத்துவமனையில் தான் தெரிய வந்தது. ஒரு மாணவருக்காக கல்லூரியின் மொத்த மாணவர்களும், கூடி நின்றது ஒருவிதமான உணர்வு தளத்தை எட்டி விட்டது. தமிழ்ச்செல்வன் எதற்காக நந்தக்குமாரை காயப்படுத்தினார் என்பது அப்போதைய பெரும் மர்மமாக பேசப்பட்டது. ஆயினும் தமிழ்ச்செல்வனுக்கும் நந்தக்குமாருக்கும் எவ்வித உட்பகையும் இருந்ததாக எங்களால் ஊகிக்க முடியவில்லை. பிறகு எதற்காக நந்தக்குமார் , தமிழ்ச்செல்வனால் தாக்கப்பட்டார் என்று மாணவர்கள் தங்கள் தங்கள் யூகத்திற்கேற்ப பேசிக்கொண்டார்கள். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சந்திரபாபு, "வாமய்யா.. தமிழ்ச்செல்வனைப் போய் நாலு சவுட்டு சவுட்டிட்டு வருவோம்.." என்றார். சவுட்டுதல் எண்றால் தூத்துக்குடி பாஷையில் அடிப்பது என்று பொருள்.  "நிலையிழந்து விடக்கூடாது பாபு.. நீங்கள் சொன்னால் மாணவர்கள் எதற்கும் தயாராகி விடுவார்கள்.. எனவே, நீங்கள் தான் கவனத்தோடு செயல்பட்டு அவர்களை வழிநடத்தி அமைதிப்படுத்த வேண்டும் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை, கல்லூரிக்கு போலீஸ் வந்தது. கல்லூரிகளின் வரலாற்றில் காம்பஸுக்குள் போலீஸ் வருவதற்கு எந்தக் கல்லூரி நிர்வாகமும் அனுமதிப்பதில்லை. ஆனால், தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் மாணவர் தலைவராக இருப்பதால் விசாரணைக்காக போலீஸ் வரவே, முதல்வரும் விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர ஒத்துக் கொண்டார். மாணவர்கள் ஒரே நாளில் நந்தக்குமாருக்கு எதிராக திரும்பி விட்டார்கள். மாணவர்களுக்குள் ஆயிரம் பிரச்னை. இருந்தாலும், அதை காவல்துறையிடம் போய்த்தான் தீர்வு காண வேண்டுமா? கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழ்ச்செல்வன் நம் கல்லூரியின் மாணவர் தலைவர். அவருக்கெதிராக செயல்படுவது அபத்தம். நந்தக்குமாருக்கும் தமிழ்ச்செல்வனுக்கும்  இடையே உள்ள தனிப்பட்ட பிரச்னைக்கு ஒட்டுமொத்த மாணவர்களும் போலீஸ் விசாரணைக்கு உட்பட வேண்டுமா என்றார்கள். மாண்வர்கள் கொதிநிலையில் இருப்பதைப் புரிந்து கொண்ட முதல்வர் விசாரணையை கல்லூரிக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள் எனப் பின்வாங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும், சந்திரபாபுவும், நந்தக்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த மருத்துவமனைக்குப் போனோம். பாபு, நந்தக்குமாரை கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்&lt;br /&gt;தார். தொடர்ந்து மாணவர்களின் மனநிலையையும், படுக்கையிலிருந்த நந்தக்குமாருக்கு விளக்கப்படுத்தினார். எல்லாவற்றையும் அமைதியோடும், கூர்ந்தும் கேட்டுவிட்டு நந்தக்குமார், எனக்கும் போலீஸ் வருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை பாபு என்றார். நான் கீழே விழுந்து அடிபட்டதாகத்தான் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறேன். தமிழ்ச்செல்வன் என்னைத் தாக்கியதற்குக் காரணம். அவர் விடுதிக் காப்பாளரோடு சேர்ந்து மது அருந்தியது. மாணவர்கள் நலனைப் பாதுகாக்காமல், மாணவருக்கு எதிராக செயல்படும் விடுதிக் காப்பாளரோடு சேர்ந்து கூத்தடிக்கிறாயே.. மாணவர்களை ஏமாற்றுகிறாயே.." என்று கேட்டதற்காகத்தான் குடிவெறியில் என்னைத் தாக்கினார். மற்றபடி தனிப்பட்ட பகை என்ன இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஏன் நீங்கள் மாணவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றார் பாபு. நான் அமைதியாக கைக் கட்டிக்கொண்டு தூணில் சாய்ந்து நின்றிருந்தேன். தெரிவித்தால் என்ன ஆகும்? ஒட்டுமொத்த மாணவர்களும், தமிழ்ச்செல்வனுக்கு எதிராகத் திரும்பி, அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவார்கள். வேறென்ன நடக்கும்? நிர்வாகம், அவரைக் கல்லூரியை விட்டு விலக்கி வைக்கும் அல்லது வெளியேற்றி விடும். என்போல, உங்கள் போல மிக எளிய குடும்பத்திலிருந்து படிக்க வந்த ஒரு மாணவன் வேறு வேறு காரணங்களுக்காக படிப்பை இழக்க வேண்டுமா என்ன? எல்லாம் சரியாகிவிடும் பாபு என்று எங்களை நந்தக்குமார் ஆறுதல் படுத்துகையில் என் கண்கள் கசிந்திருந்தன. அவர் காயப்பட்டபோது கூட அழத் துணியாத நான், இன்னா செய்தாருக்கும் நன்மை நினைக்கும் அவர் கருணையை, மாண்பைக் கண்டு விக்கித்துப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வருவதற்குள்ளாகவே, தமிழ்ச்செல்வன் காவல்துறையினரிடம் சிக்கியதற்குக் காரணம் அவர் குடியிருக்கும் வீட்டுக்கருகே உள்ள ஒரு பெண்ணிடம் விடியற்காலையில் தவறாக நடந்து கொள்ள முயன்றதற்காக எனத் தெரிய வந்தது. மேலும், நந்தக்குமார் சொன்ன விவரங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். நாள்கள் ஓடின. தமிழ்ச்செல்வன், கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். விடுதிக்காப்பாளர், வேறு கல்லூரிக்கு மாற்றல் செய்யப்பட்டார். எப்பவும் போல கல்லூரியின் வெளிப்புறம் உள்ள மரத்தடியில் நந்தக்குமார் வழக்கமான தனது மூன்று வாசகங்களோடு சிகரெட் பிடிக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்..)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-3582754061193912341?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/3582754061193912341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=3582754061193912341&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/3582754061193912341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/3582754061193912341'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/09/20.html' title='நடைவண்டி நாட்கள் - 20'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-8770712048733565700</id><published>2008-08-12T03:28:00.000-07:00</published><updated>2008-08-12T03:29:36.692-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள் - 19</title><content type='html'>&lt;strong&gt;இ&lt;/strong&gt;தயத்துடிப்பு ஏகத்துக்கு எகிறிக் கொண்டிருந்ததால், முதல் சுற்று முடிந்ததே தெரியவில்லை. கண்களும் கைகளும் பரபரக்க, தயாரித்துக் கொண்ட தகவல்களை நல்ல தமிழில் நயம்பட உரைத்தான் சரவணன். ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப தனது குரலில் ஸ்தாயையையும், முகபாவனையையும் கவரும்படியே அமைத்துக்கொண்டான். முதல் சுற்றில் அறுபது பேருக்கு மேல் தேர்வு செய்யப்பட்டதாய் அறிவித்தார்கள். சரவணனின் பெயர் அதில் நாற்பத்து இரண்டாவது இடத்திலோ, முப்பத்து ஆறாவது இடத்திலோ இருந்ததாக நினைவு.&lt;br /&gt;போர்க்களத்தில் நிற்கிற தன்னந்தனியான படை வீரனைப் போல, உடம்பு தொப்பலாக வியர்க்க, அவன் நின்ற கோலம், ஆண்டு பலவாகியும் என் அடிநெஞ்சில் அப்படியே பசுமையாகப் பரவிக் கிடக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவனும், அப்படிப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. வேறு யார் பேசுவதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டவில்லை.&lt;br /&gt;என் தோழமை சற்றே வெறி நிரம்பியது. கொஞ்சுவதும் கோபிப்பதும் ஒரே மாதிரியான உரிமையை அல்லது உரிமை மீறலை என்னை அறியாமல் காட்டிவிடுவேன். அடுத்த சுற்றுக்கு கால்மணி நேரம் இருந்தது. நான் வேகவேகமாக வெளியே ஓடிப்போய் பெட்டிக்கடையை தேடினேன்.&lt;br /&gt;அவன் ஏதோ ஒரு வெறியில் உழல்வதை மேடையை விட்டு வரும்போதே கவனித்துவிட்டேன். கீழே அமர்ந்து அடுத்த சுற்றுக்கான செய்திகளைக் குறிப்பெடுத்த காகிதத்தை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இரண்டு சிகரெட்டையும் வெட்டுக்கிளி தீப்பெட்டியையும் வாங்கிக் கொண்டு அரங்கத்திற்குள் நுழைந்தேன். அரங்கத்தின் கழிவறை அமைந்திருந்த இடத்திற்குப் பின்பு ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தின் மறைவில் நின்றுகொண்டு விழா ஏற்பாட்டாளர்கள் சிகரெட் புகைத்ததைப் பார்த்தபடியால், சரவணனனை அவ்விடத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் புகைக்கச் சொல்லி சிகரெட்டைக் கொடுத்தேன். சரவணனுக்கு அது பிடிக்கவில்லை. எத்தனை நெருக்கமான நட்பு என்றாலும், இதுமாதிரியான அன்பை நான் காட்டுவதில் அவனுக்கு விருப்பம் இருந்ததில்லை.&lt;br /&gt;'எனக்காக · எதற்கு சிகரெட் வாங்கின?, நான் போய் வாங்கிக்மாட்டேனா? இனிமே இப்படிச் செய்யாத...' எனச் செல்லமாய் கடிந்து, சிரித்துக் கொண்டான்.&lt;br /&gt;பின் புகையின் இடையில் அடுத்த சுற்றுக்கான தயாரிப்பு பேச்சு. முதல் சுற்றில் அவன் கைகளை அதிகமாக ஆட்டிப் பேசிய விதத்தை மேற்கோள் சொல்லும்போது சிற்சில இடத்தில் தவறியதையும் குறிப்பிட்டு திருத்திக் கொள்ளச் சொன்னேன்.&lt;br /&gt;என் பெருமிதத்தை விடவும், சரவணன் நான் கூறும் திருத்தங்களில் அதிக கவனம் செலுத்துவான். இரண்டாவது சுற்றில் ஏறக்குறைய பலபேர் பின்வாங்கி ஓடத்தொடங்கினார்கள். இரண்டாவது சுற்றிலும் நம்பிக்கை தூண்டிலில் மீன்களை அள்ளிவந்தான் சரவணன். இரண்டாவது சுற்றில் பதினேழு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதிலும் சரவணனின் பெயர் இருந்தது. மீதமிருக்கும் சிகரெட்டையும் புகைக்க ஆசைப்பட்டான். மரத்தடிக்குப் போனோம்.&lt;br /&gt;'பதினேழு பேரில் ஆறுதல் பரிசாவது கிடைக்காமலா போகும்? ஐநூறு ரூபாயுடன்தான் திரும்புவோம். பதற்றம் அடையாதே...' என்றான்.&lt;br /&gt;சிரித்துக் கொண்டேன்.&lt;br /&gt;உணவு இடைவேளை. விழா ஏற்பாட்டாளர்களே உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு இதுவே போதும் போலத்தான் தோன்றியது.&lt;br /&gt;மூன்றாவது சுற்று பத்மஸ்ரீ கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெறும் என்றார்கள்.&lt;br /&gt;'சார், வந்துடுவாங்க... சாரைப் புகழ்ந்து பேசினா பரிசு கிடைக்கும்னு நினைக்காதீங்க... சாருக்குப் புகழ்வது அறவே பிடிக்காது' என்று பத்ரி அரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பொதுவான குரலில் முழங்கிவிட்டு சரவணன் அருகில் வந்து தோளை தட்டிவிட்டுப் போனார். நான் திருமதி நாசரின் முகபாவனையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக சரவணன் பேசும்போது அவர்கள் முகத்தில் எனனென்ன சம்பாஷனை பரவுகிறது எனக் கவனித்துக் கொண்டிருந்தேன். பதினேழு பேரில் முகத்திலும் அப்படியொரு பதற்றம், நடுக்கம், லேசான தவிப்பு, வெளிசொல்ல முடியாத வெறி உணர்வு.&lt;br /&gt;கூட்டம் 'ஹோ'வென அலறி எழுந்தது. கலைஞானி வந்துவிட்டார். 'ஆழ்வார்பேட்டை ஆண்டவனே' எனக் கூட்டம் பெருங்குரலெடுக்க, கமல்ஹாசன் மெல்லிய கோபத்தோடு அவர்களைப் பார்த்து 'வேண்டாம்' என்பதுபோல சைகை காட்டினார். கூட்டம் அமைதியானது.&lt;br /&gt;இறுதிச் சுற்று ஏகத்தடபுடலாக ஆரம்பமானது. ஒருவர் ஒருவராகப் பேசப்பேச, கைத்தட்டு அரங்கமே இடிந்துவிடும் அளவுக்கு இருந்தது. ஆரவாரம்.&lt;br /&gt;இறுதியாக சரவணன், சரவணனுக்கு பயமும் தெளிவும் ஒருசேரக் கலந்துவிட்டது. பிடிவாதமான தைரியத்தோடு பேசத் தொடங்கினான்.&lt;br /&gt;'மனிதநேயம் மாண்டுவிட்டதா?' என்பதுதான் இறுதிச்சுற்றுக்கான தலைப்பு.&lt;br /&gt;அந்த மாதத்தில் முதல் வாரத்தில் பத்திரிகைகளில் தானு என்ற பள்ளிச்சிறுமையைப் பற்றி செய்திகள் வெளிவந்திருந்தன. அந்தச் சிறுமியின் ஆசிரியர் சாதி சொல்லி திட்டியதாகவும், கண் காயப்படும் அளவுக்கு தாக்கியதாகவும் பத்திரிகையில் செய்திகள் பரபரப்பாக இருந்தன. அது நிமித்தம் ஒவ்வொரு கட்சியும் அறிக்கை வெளியிட்டு ஆசிரியரைக் கண்டித்திருந்தன. கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பாக அச்சிறுமிக்கு உரிய ஆறுதலும் கண் சிகிச்சைக்காக தொகையும் வழங்கப்பட்டதை சரவணன் பேச்சில் இடையே குறிப்பிட்டான்.&lt;br /&gt;மேத்தா ஒரு இடத்தில் சொல்கிறான். பாரதி ஒரு இடத்தில் சொல்கிறான். தணிகைச்செல்வன் ஒரு இடத்தில் சொல்கிறான். தாஸ்தாஒஸ்கி ஒரு இடத்தில சொல்கிறான் என மேற்கோள் மழையாகப் பொழிந்துவிட்டு, மனிதநேயம் மாளாது, மாண்டால் பூமி வாழாது என்றான். அரங்கம் சரவணனுக்கு கைதட்டவே இல்லை. அவன் பேசிய தொனி கைதட்ட மறந்து கூட்டத்தின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டன போல!&lt;br /&gt;இறுதியாக கமல் பேசும்போது, முழுதுமாக சரவணனை ஒட்டியே பேசினார். பிரபல கவிஞர்களை படைப்பாளர்களை ஒருமையில் பேசியதைக் குறிப்பிட்டு, 'அன்பு கூடினால் மரியாதை குறைந்துவிடும். நெருக்கம் அதிகமாக வேண்டுமானால் நேயம் முக்கியம்' என்பதுபோல பேசியபடியே பின் இருக்கையில் அமர்ந்திருந்த சரவணனை உற்சாகத்தோடு பார்த்தார். சரிதானே சரவணன்? என்றும் இரண்டொரு இடத்தில் குறிப்பிட்டார்.&lt;br /&gt;கூட்டம் மொத்தமும் சரவணனைக் கொண்டாடியது. பின் பரிசுப் பட்டியலை திருமதி நாசர் அறிவிக்கத் தொடங்கினார். ஆறுதல் பரிசு பெறுவோரில் சரவணன் பெயர் வரவில்லை. இரண்டாம் மூன்றாம் பரிசு பெறுவோர் பட்டியலிலும் சரவணன் பெயர் வரவில்லை. சரவணன் முகம் இருண்டு போனது. எனக்கும் சோகம் கவ்வத் தொடங்கியது. என்னைப் பார்த்து 'ஒ.கே. வா போகலாம்...' எனக் கையைப் பிடித்து இழுத்தான். நானும் எழுந்து வாயில் வரை போனேன்.&lt;br /&gt;அந்நேரம் பெரிய கைதட்டலுக்கு இடையே, 'முதல் பரிசு இரா. சரவணன்' என்று அறிவித்தார்கள். மெய்யாகவே பறப்பதுபோல் இருந்தது. சுளையாக ஐயாயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. ஊரிலிருந்து சென்கைக்கு வரும்போது கூட இத்தனை ஆயிரத்தைக் கொடுத்து அனுப்ப எங்கள் குடும்பங்களுக்கு இயலவில்லை. ஆனால் சமூகம் எங்களைக் காப்பாற்றிவிட்டது.&lt;br /&gt;மாலை கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் பரிசளிப்பு விழா என்று அறிவித்தார்கள். பத்ரி ஓடிவந்து சரவணனை இறுகத் தழுவினார்.&lt;br /&gt;'வாழ்த்துக்கள். பெரிசா வருவீங்க... வாங்க...' என்றார். அவர் காட்டிய பிரியத்தின் விலை அன்றைக்கு ஐயாயிரம் ரூபாய். நினைக்க நினைக்க பெருமிதமும் உற்சாகமும் கூடும் சம்பவமாகவே அது எனக்குப் படுகிறது. எந்தச் சலனமும் இல்லாமல் இந்த வாழ்வை மிகச் சாதாரணமாக எதிர்கொண்டுவிட முடியும். தேவைக்கேற்ப பணமும் புகழும் வசதியும் வந்துவிடும். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உழைப்பு! இடையிராத உழைப்பு! செல்லும் திசை நோக்கிய தெளிவான உழைப்பு!&lt;br /&gt;மாலைதான் விழா என்றாலும் போவதற்கு எங்களுக்கு வேறு இடம் இல்லாததால், கடற்கரைக்கே போய்விடுவோம் என நடந்துபோய் கடல் ரசித்தோம்.&lt;br /&gt;கைக்காசு மீதம் பத்து ரூபாய் அறுபது காசு இருந்தது. அதனால் ஆட்டோவிலோ பேருந்திலோ போகவேண்டாமென பேசிக் கொண்டே நடந்தோம். கடும் வெயிலும் எங்களைச் சுடவே இல்லை.&lt;br /&gt;இடையில் இரண்டொரு பிச்சைக்காரர்களுக்கு தானம் செய்தோம். அதான் ஐயாயிரம் ரூபாய் வரப்போகிறதே... வேறென்ன கவலை!&lt;br /&gt;விழா மேடை சந்தோஷம் அளித்தது. சரவணனின் பெயர் அழைக்கப்பட்டது. சரவணன் கையில் கவரை வாங்கியதும், நான் இருக்கும் திக்கை நோக்கிப் பார்த்தான். அந்தக் கூட்டத்தில் அவன் கண்கள் என்னை மட்டுமே தேடின. அவனுக்கு விழுந்த கைதட்டல்களில் என் கைதட்டல் மட்டுமே அவனுக்கான, அவனுக்குத் தெரிந்த கைதட்டல்.&lt;br /&gt;மேடையை விட்டு இறங்கியதும், கையில் கவரோடு என்னை வெளியே கூப்பிட்டான். உடனே கவரைப் பார்க்கும் ஆர்வம். திறந்து பார்த்தால், ஐயாயிரம் ரூபாய்க்கான காசோலையை 'அக்கவுண்ட் பே' என்ற வகையில் கொடுத்திருந்தார்கள். ஐயாயிரம் இருந்தும் அக்கவுண்ட் இல்லாத எங்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போலிருந்தது. எனினும் மகிழ்ச்சி பொங்க கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே அறையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.&lt;br /&gt;பெரிய நம்பிக்கை, பெரிய வெளிச்சம். வாகனங்களின் நெரிசல்களுக்கு நடுவே ஒருவரையொருவர் பாராட்டி சிரித்துக்கொண்டோம்.&lt;br /&gt;'சிகரெட் வேணுமா?' என்றேன். 'வாங்கு' என்றான்.&lt;br /&gt;- பயணம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-8770712048733565700?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/8770712048733565700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=8770712048733565700&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8770712048733565700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8770712048733565700'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/08/19.html' title='நடைவண்டி நாட்கள் - 19'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-8541421840401627187</id><published>2008-08-12T03:25:00.000-07:00</published><updated>2008-08-12T03:27:23.845-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள் - 18</title><content type='html'>&lt;strong&gt;க&lt;/strong&gt;ல்லூரியில் சேர்ந்துவிட்ட முதல் வாரத்தில் இருந்து என் நடவடிக்கையில் கொஞ்சம்போல நம்பிக்கை பரவிவிட்டிருந்தது எனவே சொல்லத் தோன்றுகிறது.&lt;br /&gt;வாழ்வை அதன் போக்கிலேயே விட்டுவிட்டால், அந்தப் பாதை நம்மை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டு போகிறது.&lt;br /&gt;இடமே கிடைக்க வாய்ப்பில்லாமல் இருந்த எனக்கு, கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தது விசுவநாதன் அண்ணன் சொன்னதுபோல 'செருப்படி சாமி'யின் கிருபையாகவே இருந்தாலும்கூட, அது அது நடக்க வேண்டிய காலத்தில் நடந்தே தீருகிறது.&lt;br /&gt;கல்லூரியில் பெரும்பாலான மாணவர்களுக்கு நான் கவிதை எழுதுகிறவனாக அறிமுகமானபடியால் எனக்காகவே அவர்கள் இதழ்களில் புதுவிதமான சிரிப்பு ஒன்று இருந்தது. செல்லமான, சினேகமான அந்தச் சிரிப்பை இன்னதென்று விவரிக்க முடியாது. நடைவழியே என்னைக் கடக்கும்போதெல்லாம் அந்தச் சிரிப்பை உதிர்ப்பார்கள். அச்சிரிப்பை என் எழுத்துக்குக் கிடைக்கும் கௌரவமாகக் கருதிக்கொள்வேன். என் முதல் வாரம் முழுக்க எங்கள் கல்லூரியில் வியத்தகு மனிதர் ஒருவரைப் பற்றிய பேச்சுதான் பிரதானமாக இருந்தது. இரண்டாம் ஆண்டு படிக்கும் நந்தகுமார்தான் அந்த வியத்தகு மனிதர். ராகிங் செய்வதில் வினோதமான ஒரு முறையை அவர் கையாண்டார்.&lt;br /&gt;கல்லூரி வாயிலில் எதிர்ப்புறத்தில் இருக்கும் புளியமரத்தடியில்தான் அவர் சதா அமர்ந்திருப்பார். கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை பேராசிரியர்கள் வரும்போதுகூட மரியாதைக்காக மறைக்கமாட்டார். அவர் கல்லூரிக்கு உள்ளே இருக்கின்ற நேரத்தைவிடவும் கல்லூரிக்கு வெளியே அமர்ந்திருக்கும் நேரம்தான் அதிகம்.&lt;br /&gt;அவருடைய சொந்த ஊர் ஈரோடு என்று பின்னால் தெரியவந்தது. முகம் முழுக்க தாடி, ஏறு நெற்றி, வžகரிக்கும் கண்கள், எதையோ இழந்துவிட்டதைப்போன்ற சோக ரேகை அவர் முகத்தில் காட்சியளிக்கும். அவர் ரேகிங் செய்யும் முறையைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் மூன்று வாசகங்களை எங்களிடம் சொல்வார். அந்த மூன்று வாசகத்தையும் ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஐநூறு முறை எழுதி வந்து மறுநாள் தர வேண்டும். அந்த வாசகங்கள் வேறொன்றுமில்லை. ஒன்று - 'லவ் இஸ் டேஞ்சரஸ்', இரண்டு - 'லவ் இஸ் இன்ஜூரியஸ்', மூன்று - 'லவ் இஸ் ஸ்வீட் பாய்சன்'.&lt;br /&gt;இந்த மூன்று வாசகங்களை முதல்நாள் இரவு முழுக்க விடுதியில் மாணவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். நான் அவர் பார்வையில் சிக்காததால் தப்பித்தேன். ஆனால் அவர் கண்ணில் தட்டுப்படும் அன்று மண்டகப்படி இருக்கிறது என்று மாணவர்கள் கிண்டல் அடித்தார்கள். நந்தகுமார் ஒரு காதல் தோல்விக்காரர் என்றும் அதனால்தான் மாணவர்களை இவ்வாறு எழுதச் சொல்கிறார் என்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பேசிக் கொண்டார்கள். உண்மையை நான் அறியேன்!&lt;br /&gt;முதலாண்டு மாணவர் விடுதிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் விடுதிக்கும் அறை கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். விடுதி மாணவர்களுக்கான உணவறை இரண்டாம் ஆண்டு விடுதியிலேயே அமைந்திருக்கும். உணவு நேரத்தில் கூட்டாகக் கிளம்பி கையில் தட்டுடன் இரண்டாம் ஆண்டு விடுதிக்குப் போக வேண்டும். முதல் ஆண்டு மாணவர்கள் பகல் நேரத்தில் தட்டை எடுத்துக்கொண்டு அந்த அரை கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க கூச்சப்படுவார்கள். அந்த அரைகிலோ மீட்டர் தார்ச்சாலையில் அரசுப் பேருந்தும் செல்வதால், மாணவர்களுக்கு என்னவோ போல் இருப்பதாகக் கருதி, தலையைக் குனிந்து கொள்வார்கள். கைதிகளைப்போல தார்ச்சாலையைக் கடக்க வேண்டியிருக்கிறதே எனப் புலம்புவார்கள்.&lt;br /&gt;ஆனாலும் வேறு வழியில்லாமல் ஒரு வாரத்தை எதிர்கொண்ட பிறகு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பழகவே, அவர்களின் அறையில் தட்டை வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. அப்படியும் என்போன்ற சில பயந்த சுபாவம் உடையவர்கள் தட்டை தூக்கிக்கொண்டே போக வேண்டியிருந்தது.&lt;br /&gt;என் அசூயையைப் புரிந்துகொண்ட சந்திரபாபு, என் தட்டையும் வாங்கிக்கொண்டு தனக்குத் தெரிந்த ஒருவரின் அறையில் வைப்பதாகக் கூறினார். நான் வேண்டாம் என்று மறுத்தேன். ஆனாலும் அவர் வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டு போனார். சந்திரபாபு மட்டும்தான் ராகிங்கில் இருந்து முழுதாகத் தப்பித்தவர். அவர் உடல்வாகு அப்படி. பெரிய மனிதரைப் போல இருப்பார். இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அவரை மூன்றாம் ஆண்டு மாணவர் என்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அவரை இரண்டாம் ஆண்டு மாணவர் என்றும் நினைத்து விட்டுவிடுவார்கள். முதல் நான்கைந்து நாளில் நானே அவரை மூன்றாம் ஆண்டு மாணவர் என நினைத்து, பயத்தோடு வணக்கம் சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;சந்திரபாபு அச்சுஅசல் தூத்துக்குடி பாஷை பேசும் ஆள். இரண்டாவது சந்திப்பிலேயே யாருடனும் நெருக்கமாகிவிடும் இயல்புடையவர். அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கொஞ்ச காலம் விவசாயம் பார்த்துவிட்டு பின் படிப்பைத் தொடர, கல்லூரியில் சேர்ந்திருந்தார். கரடுமுரடான அவரது பேச்சுக்கு பேராசிரியர்களே சில சமயம் பணியும் நிலை வந்திருக்கிறது. அவர் நந்தகுமாரின் அறையில்தான் தன் தட்டை வைக்க அனுமதி பெற்றிருந்தார். நந்தகுமாரின் அறையில்தான் சந்திரபாபுவின் அன்பால் என் தட்டும் வைக்கப்பட்டது.&lt;br /&gt;நந்தகுமார், 'இது யாருடைய தட்டு?' எனக் கேட்க, 'நம்ம கவிஞருடையது' என்று சொல்லியிருக்கிறார். உடனே, 'கவிஞரா... நான் பார்க்க வேண்டுமே?' என்று மறுநாள் உணவறைக்கே வந்துவிட்டார்.&lt;br /&gt;அவர் தன் இடது காலை தாங்கித்தாங்கி நேராக என்னைப் பார்த்து வந்ததும், வரிசையாக அமர்ந்திருந்த மாணவர்கள் கொல்லெனச் சிரித்தார்கள்.&lt;br /&gt;அவர்கள் சிரித்தது, எனக்கு வேதனையையும் நந்தகுமாருக்கு வெறுப்பையும் ஏற்படுத்தின!&lt;br /&gt;நந்தகுமார் அவர்களைத் திரும்பி ஆவேசமாக முறைத்துவிட்டு என் பக்கம் திரும்பினார். என் அருகில் அமர்ந்திருந்த சந்திரபாபு, என் தொடையை நிமிண்டி, எழுந்து கொள்ளச் சொன்னார்.&lt;br /&gt;'· கவிஞனா?' என்றார் நந்தகுமார். நான் மௌனமாக 'இல்லை' என்பதுபோல தலையைசைத்தேன்.&lt;br /&gt;'ஆமாம்... · கவிஞன்தான் என்று சந்திரபாபு சொன்னானே?' என்றார்.&lt;br /&gt;'சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு வா' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எனக்கு ஐநூறு முறை எழுத வேண்டிய பயம் கவ்வத் தொடங்கியது.&lt;br /&gt;அன்று சாப்பிடவே இல்லை!&lt;br /&gt;பாபு எவ்வளவோ சொல்லியும் எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை!&lt;br /&gt;'· பேசாம சாப்பிடுமய்யா... நான் கூட வாரேன்... ·ர் எதுக்கு தயங்குறீர்...' எனத் தூத்துக்குடி அன்பை அவர் பொழிந்தபோதும், என்னால் ஒருவாய் கூட சாப்பிட முடியவில்லை.&lt;br /&gt;உணவறையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அத்தனை பேரும் என்னைப் பாவத்தோடும் கவலையோடும் பார்ப்பதுபோல் தோன்றியது.&lt;br /&gt;பாபு எனக்காக வேகவேகமாகச் சாப்பிட்டுவிட்டு, 'வாமய்யா... போய்ட்டு வருவோம்...' என்றார்.&lt;br /&gt;நந்தகுமாரின் அறைக்குள் நுழைந்தபோது, என் அடிப்பாதங்கள் வியர்த்துவிட்டன. கைகள் நடுங்கின.&lt;br /&gt;'வணக்கம் அண்ணா' என்றேன்.&lt;br /&gt;'வணக்கம் சொல்லுப்பா....' என்றார் நந்தகுமார்.&lt;br /&gt;நான் மடமடவென்று அவருடைய புகழ்பெற்ற வாசகங்களான 'லவ் இஸ்' என்று ஆரம்பித்தேன்.... 'உனக்கும் தெரிஞ்சு போச்சா... ஹா ஹா ஹா' என இதழ் மலர்ந்து சிரித்தார்.&lt;br /&gt;என்னை, '·யும் பயந்துட்டியாப்பா... சும்மா இதெல்லாம் ஒரு விளையாட்டுக்கு... · இதெல்லாம் சொல்ல வேணாம். · இதெல்லாம் எழுதவும் வேணாம். · பெரிய கவிஞராச்சே... நிக்க வெச்சே பேசறேன் பார்... உட்கார் உட்கார்...' என்றார்.&lt;br /&gt;சந்திரபாபு நந்தகுமார் சொல்வதற்கு முன்பாக உட்கார்ந்து கொண்டார்.&lt;br /&gt;'நம்ம கவிஞர் நிறைய பத்திரிகையில் எழுதிக்கிட்டிருக்காரு... அவர் பேர் வராத பத்திரிகைகளே இல்லை' என்று அள்ளிவிடத் தொடங்கினார்.&lt;br /&gt;கல்லூரியில் வியத்தகு மனிதர் என்னை வியப்போடு கண்களை உருட்டி பார்த்துக் கொண்டே நகைத்தார்.&lt;br /&gt;'நம்ம கவிஞர்... பெரிய ஆளா வரப்போறாப்ள...' என்றார் சந்திரபாபு.&lt;br /&gt;பாபுவைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தகுமார் என் பக்கம் திரும்பி, 'ஏய்ம் (AIM) என்ன?' என்றார். 'அதாம்பா... லட்சியம் இலக்கு' என்று மீளவும் கேட்டார்.&lt;br /&gt;'இலக்கு வேறு, லட்சியம் வேறு அண்ணா' என்றேன்.&lt;br /&gt;'எப்படி எப்படி?' என்று ரஜினிகாந்த் கேட்பதுபோல் கேட்டார்.&lt;br /&gt;'இலக்கு என்பது நாம் எட்டிவிடக் கூடியது. லட்சியம் என்பது நாம் எட்ட முடியாததை எட்ட முனைவது' என்றேன்.&lt;br /&gt;'ஓ... · கவிஞராச்சே... உன்கிட்ட தப்பிக்க முடியாது. நான் கேட்க வந்தது... உன்னுடைய எதிர்கால ஆசை கவிஞராவதா... இன்ஜினியராவதா...?' என்றார்.&lt;br /&gt;நான் உடனே 'கவிஞர் ஆவது ஃபுரொஃபெஷனல் இல்லையே' என்றேன்.&lt;br /&gt;'சரிதான்... அப்புறம் எதற்கு கவிஞர் என்ற அடைமொழியை மறுத்தாய்?' என்றார்.&lt;br /&gt;நான் மௌனமாய் இருந்தேன். முதல் அறிமுகத்தில் அவருடன் மேலும் மேலும் விவாதம் புரியும் துணிவு எனக்கு ஏற்படவில்லை. அவர் நிறைய பேசினார். அவரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவர் ஏதோ மாணவர்கள் மத்தியில் நையாண்டிப் பேர்வழி என்பதாக வெளிப்பட்ட விமர்சனத்திற்கு அவர் பொருத்தமற்றவராக இருந்தார். அவரால் 'க்ஷண' நேரத்தில் மனப்பாடமாக பல புகழ்பெற்ற கவிதைகளைச் சொல்ல முடிந்தது. அறிவியல், தத்துவம், அரசியல் என்று தாவித்தாவி பல திக்குகளுக்கும் அவர் உரையாடல் சென்றது. கம்மியான தொனியில் ஒரே žரான நேர்க்கோட்டில் அவர்போல பேசும் இன்னொருவரை இப்போதும் என்னால் நினைக்க முடியவில்லை.&lt;br /&gt;அவரிடம் கேட்பதற்கு என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தன.&lt;br /&gt;- பயணம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-8541421840401627187?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/8541421840401627187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=8541421840401627187&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8541421840401627187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8541421840401627187'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/08/18.html' title='நடைவண்டி நாட்கள் - 18'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-4878181565702964517</id><published>2008-07-21T20:36:00.000-07:00</published><updated>2008-07-21T20:45:52.233-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: பதினாறு</title><content type='html'>&lt;strong&gt;மு&lt;/strong&gt;தல் நாள் பள்ளிக்கூடத்தைப் போல முதல்நாள் கல்லூரியும் எனக்கு அச்சமே மூட்டியது.&lt;br /&gt;வீட்டை விட்டுப் பிரிந்து வாழப் போகிறேன் என்ற தயக்கமே அச்சத்தின் முதல் காரணம் என்றாலும், அந்தக் காரணத்தை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் கிளம்பினேன்.&lt;br /&gt;முதல் நாள் கல்லூரி ஆசிரியர் பெற்றோர் சந்திப்போடு தொடங்கியது. வழக்கமான பல்லவிகள்தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கூடுதல் அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும் என்று ஆசிரியர்களும், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைக் கூடுதல் அன்போடு நடத்த வேண்டும் எனப் பெற்றோரும் மாறிமாறி உரையாற்றி முடிக்க, மதியம் ஆகிவிட்டது.&lt;br /&gt;உணவு முடித்து விடுதியில் தங்கிக் கொள்ளும் படிவங்களை வழங்கினார்கள். அறைக்கு மூவர் எனும் கணக்கில் வெளியூர் மாணவர்கள் தங்கிக்கொள்ள அந்த விடுதி போதுமானதாகவே இருந்தது. நல்ல கட்டிடம். காற்றும் சூரிய வெளிச்சமும் ஜன்னல் வழியே ஊடுருவும். குறைந்த அளவே பெண்கள் என்பதால் அவர்களுக்கு விடுதி ஏற்பாடுகள் இல்லை. தனித்தனியாக அவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் தங்கிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;இன்னும் பெருவளர்ச்சி கண்டிராத அவ்வூரில் இந்தக் கல்லூரி அமைந்திருப்பது கிராமப் பகுதி மாணவர்கள் படிக்க வசதியாக இருக்கிறது. முதல் தலைமுறை படிப்பாளிகளின் உள்ளமும் ஏக்கமும் என்னை அடிக்கடி யோசிக்க வைப்பதுண்டு. தன் படிப்பால்தான் தன் குடும்பமே தலைநிமிரப் போகிறது என்ற எண்ணமே என் அறையில் இருந்த காரை சௌந்தர்ராஜனையும் திருச்சி ரகுபதியையும் என்னைவிட படிப்பில் அதிக கவனம் செலுத்த வைத்தது.&lt;br /&gt;சௌந்தர்ராஜன் அறையைச் சுத்தமாக வைத்திருப்பான். ரகுபதிக்கு பாடப் புத்தகம் போலவே இதர புத்தகத்திலும் ஆர்வம் அதிகம். முதல்வாரம் முழுக்க ராகிங் எனும் வினோத பழக்கத்தில் கழிந்தது. இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ள ராகிங் சரியான வாய்ப்பு என்பார்கள். எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ராகிங் வளையத்தில் சிக்காமல் தப்பிக்க முடியவில்லை. ஆனால் முதல் வாரத்திலேயே கல்லூரி முழுக்க என் கவிதை ஆர்வ செய்தி பரவியிருந்தது. அதனால் இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பெரும்பாலும் ராகிங்கில் என்னிடம் கவிதை சொல் என்றுதான் கேட்பார்கள். நான் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடி அவர்களை மகிழ்ச்சிபடுத்த, இரண்டாவது சந்திப்பிலேயே அவர்களில் பலரும் நண்பர்களாகிவிட்டார்கள்.&lt;br /&gt;வெள்ளிக்கிழமை மதியம் வரைதான் கல்லூரி வாசம். பிறகு ஊருக்குக் கிளம்பிவிடுவேன். அங்கிருந்து இரண்டு மணிநேரப் பயணத்தில் தஞ்சைக்கு வந்துவிட முடியும் என்பதால் அம்மாவும் நான் வாரக்கடைசியில் வீட்டுக்கு வருவதையே விரும்பினாள். இரண்டு வீட்டில் போடாத ஆட்டமெல்லாம் போட்டுவிட்டு மீண்டும் திங்கட்கிழமை அதிகாலை கிளம்பி அறந்தாங்கிக்குப் போய்ச்சேருவேன்.&lt;br /&gt;என்னுடன் தஞ்சையில் இருந்து ராதாகிருஷ்ணனும், சீனிவாசனும் அதே கல்லூரியில் படித்தபடியால், பயணத்தில் மூவரும் நல்ல நண்பர்களாக இருக்க நேர்ந்தது. சீனிவாசனின் தந்தை கண்ணபிரான் என் அப்பாவின் சினேகிதர். நாங்கள் இணைந்தே கல்லூரிக்குப் போய் வருவது, அவருக்கும் அப்பாவுக்கும் ஒருமித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.&lt;br /&gt;என் படிப்பு காலத்தில் நான் தவறவிடக்கூடாத பெயர் ஒன்று இருக்கிறது. என் வாழ்நாளில் நான் தவறியும் அந்தப் பெயரை மறந்துவிடுவேனாயின் என் தேகத்தின் செல்கள் சிதிலமடையும். எளிமையான அன்புதான் எல்லாவற்றிலும் தனித்து நிற்பது.&lt;br /&gt;கல்யாணராமன் எளிமையான அன்பாளர். ஆனால் அவருடைய அன்பு எளிமையானதல்ல. பூச்சந்தை முருகன் கோவில் புரோகிதராகப் பணியாற்றி வந்த அவர், என் அப்பாவின் சொல்லுக்கு எப்போதும் மதிப்பு தருபவர். மதிப்பு என்றால் அப்படியொரு மதிப்பு. சுப்பிரமணிய கடவுளைப் போல அப்பாவை வணங்குவார்.&lt;br /&gt;என்னைவிட ஆறேழு வயதே மூத்தவரான அவர், என்னையும் அவர் தம்பி போலவே நடத்துவார். கோவில் அர்ச்சனை தட்டில் விழும் சில்லறைக் காசுகளை திருநீர் வாடையோடு எடுத்துவந்து, என் கவிதை வெளிவரும் இதழ்களை வாங்கித் தருவார்.&lt;br /&gt;அவர் வாங்கித் தரும் இதழ்கள் பிராமணர்களை மிகக் கேவலாக விமர்சிப்பதாகக் கூட இருக்கும். என்றாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் பெரிதுபடுத்துவதில்லை.&lt;br /&gt;தம்பி கவிதை வந்திருக்கிறது... எனவே அந்தப் பத்திரிகை சிறப்பானது எனக் கொண்டாடுவார்.&lt;br /&gt;ஒருமுறை, வருடம் நினைவில்லை.... ஒரத்தநாடு பகுதியில் தலித் ஒருவரின் கைக் கட்டை விரலைத் துண்டித்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரத்தநாடு தஞ்சையிலிருந்து சில தொலைவில் அமைந்திருக்கும் ஊர்.&lt;br /&gt;பிரச்னை தஞ்சை மாவட்டத்தையே உலுக்கிவிட்டது!&lt;br /&gt;அதைக் கண்டித்து 'தப்போசை' என்றொரு கவிதை எழுதி உண்மை இதழுக்கு அனுப்பி வைத்தேன். கவிதை முதல் பக்கத்தில் அச்சாகியிருந்தது.&lt;br /&gt;உண்மை பத்திரிகை திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடு. அதில் கவிதை வெளிவந்தபடியால், தஞ்சை முழுவதும் என் பெயர் ஒருமுறை அழுந்தப் பதிந்தது. அந்தக் கவிதை வெளிவந்த இதழை தன் தடதடக்கும் மிதிவண்டியில் போய் திரு·று காசில் வாங்கி வந்தவர் கல்யாணராமன்தான்.&lt;br /&gt;எத்தனை அதிசயமான மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள்!&lt;br /&gt;சாதியும் மதமும் சடங்கும் ஆச்சாரங்களும் அவர்கள் அன்பு மனதை எதுவும் செய்துவிடுவதில்லை. நேயமற்ற பெயரால் உணராமல் தினசரி நிகழ்வாகக் கொண்டிருக்கிறார்கள். கல்யாணராமன் பெரும்பாலும் திங்கட்கிழமை அதிகாலை வந்து என்னைக் கல்லூரிக்குப் பயணப்படுத்த உதவுவார்.&lt;br /&gt;தன்னிடம் இருக்கும் திருநீறு ரொக்கத்தை வீட்டில் யாருக்கும் தெரியாமல் என் பாக்கெட்டில் திணிப்பார். வீட்டில் பயணத்திற்கு மட்டுமே பணம் தருவார்கள். இதர செலவுகளுக்கு கல்யாணராமனே கருணை புரிவார். திடீரென்று ஏதாவது ஒரு புதன்கிழமையோ, வியாழக்கிழமையோ மதியவாக்கில் கல்லூரிக்கும் வந்து அதிர்ச்சி தருவார். கைநிறைய பொட்டலங்களோடு அவர் வருவதால் விடுதி முழுக்க கல்யாணராமன் விசேஷ நபராக அறியப்படுவார்.&lt;br /&gt;அவர் அன்பை சிலாகிக்க தொடங்கினால், எத்தனை அத்தியாயம் பிடிக்குமோ?&lt;br /&gt;அவர்களை எல்லாம் நான் இன்றுவரை இழக்கவில்லை. அவர்களும் என் சின்ன உயரம் குறித்த பெருமிதத்தை உள்ளூர ரசித்து வருகிறார்கள்.&lt;br /&gt;கல்லூரியில் எனக்குக் கிடைத்த இன்னொருவர் தேனி கணேசன். அப்போது ஜூனியர் போஸ்டில் அனுசன் என்ற பெயரில் நிறைய எழுதிக் கொண்டு வந்தார். நல்ல சுறுசுறுப்பான எழுத்து அவருக்கு இயல்பாக வாய்த்திருந்தது. இரண்டாம் ஆண்டு மாணவர் என்றாலும், முதலாம் ஆண்டு படித்த என்னுடனேயே அவருடைய பொழுதுகளை அதிகமும் செலவிடுவார்.&lt;br /&gt;பத்திரிகை துறையில் முக்கியமான இடத்தை எட்டவேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. அதற்கான உழைப்பில் சதா உழல்வார். மாணவர்களிடம் கருத்து கேட்டு, பல்வேறு விஷயங்களை பல பத்திகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்.&lt;br /&gt;அவர், அப்படி எழுதி யதேச்சையாக ஒருமுறை எனக்குப் பெண்வேடமிட்ட புகைப்படம் ஒன்று சிறுகதைக் கதிரில் வெளியாகிவிட்டது. கல்லூரியில் பயிலும் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து துப்பட்டாவால், வாய்மூடி சிரித்தது நல்ல நகைச்சுவை.&lt;br /&gt;அந்தச் செய்தியால் பின்வரும் காலங்களில் கல்லூரியில் உள்ள பெண்கள் அத்தனை பேருக்கும் நான் காதலனாகும் வாய்ப்பு ஏற்படாமலேயே போனது. அனுசன் எழுதிய செய்திகளிலேயே மிக முக்கியமான செய்தி போல அது அமைந்துவிட்டது. தினசரி இரவு எங்கள் கல்லூரி விடுதியின் மொட்டைமாடியில், கவிதை விளையாட்டுகள்தான். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை மாணவர்கள் சூழ அமர்ந்து ரசிப்பார்கள். அந்த ரசனைக்கு இடையிடையே துணுக்குகளும் கிண்டல் பேச்சுக்களும் தொடர்ந்தபடி இருக்கும்.&lt;br /&gt;நான்கு ஆண்கள் ஒன்று கூடினால் ஒரு பெண்ணின் அந்தரங்கம் பேசுபொருளாகிறது என்ற கரிகாலனின் கவிதையை நான் சொல்லிக் கொண்டிருக்கையில், கூட்டத்திலிருந்து எழுந்த சந்திரபாபு, எங்கள் விடுதிக் காப்பாளரின் பெண் சினேகித விஷயம் ஒன்றை அவிழ்க்கத் தொடங்கினான்.&lt;br /&gt;- பயணம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-4878181565702964517?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/4878181565702964517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=4878181565702964517&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/4878181565702964517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/4878181565702964517'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/07/blog-post_21.html' title='நடைவண்டி நாட்கள்: பதினாறு'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-4763123109874944549</id><published>2008-07-09T19:19:00.000-07:00</published><updated>2008-07-09T19:32:29.014-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்:பதினைந்து</title><content type='html'>&lt;strong&gt;மா&lt;/strong&gt;த சம்பளக்காரர்களின் மனோநிலையை எத்தனையோ விதமாக நானும் சரவணனும் இன்னும் சில நண்பர்களும் விமர்சித்திருக்கிறோம். சம்பளத்துக்காகக் குஞ்சு பொறுக்கும் ஊதியக் கோழிகள் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் கிண்டலடித்திருக்கிறோம். ஆனால், அந்த கிண்டலுக்கும் கேலிக்கும் நானும் உரியவனாகிப் போனதைப் போல உள்ளூர சிறு வருத்தம். என்ன செய்வது... வயிறும் மனதும் ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிப்பதில்லையே.&lt;br /&gt;நண்பர்களை மாலை காத்திருக்கச் சொல்லிவிட்டு அலுவலகத்துக்கு வந்த என்னை உடனே மதுரைக்கு கிளம்ப வேண்டும் என ஆசிரியர் பணித்தார். கம்யூனிஸ்ட் கட்சி பெண் கவுன்சிலர் தோழர்.லீலாவதி சாராய வியாபாரிகளால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தீப்போல் பரவியிருக்கவே அது குறித்த செய்தி சேகரித்து வரும்படி மதுரைக்கு கிளம்பச் சொன்னார். ஒரு பத்திரிகையாளனாக என் கடமை ஆசிரியர் இடும் கட்டளைக்கு அடிபணிவதே அன்றி மாற்று அபிப்ராயத்தை கூறுவதல்ல என்பதால் உடனே கிளம்புவதற்கு ஆயுத்தமானேன். நண்பர்கள் காத்திருப்பார்களே என்று உள்ளுக்குள் ஒரு கவலை வந்து என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. சம்பளம் கிடைத்தவுடன் கம்பி நீட்டிவிட்டான் பாரு என்று சொல்லிவிடக் கூடாதென்று அரவிந்தன் மூலம் தகவலை நண்பர்களுக்கு சொல்லச் சொல்லிவிட்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்தேன்.&lt;br /&gt;மதுரை நகர் முழுவதும் அமைதியாயிருந்தது. சிவப்பு நிற போஸ்டர்களால் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி கண்டனங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனாலும் ஆளும் கட்சிக்காரர்களின் அட்டூழியங்களை வெளிச்சமிட்ட அச்சுவரொட்டிகள் தோழர். லீலாவதிக்கான அஞ்சலியை செலுத்தவும் தவறவில்லை. செய்தி சேகரிப்பதற்காக எல்லா மட்டத்து பிரமுகர்களையும் சந்தித்து பேசினேன். அங்கு பாகுபாடு இல்லாமல் ஒவ்வொருவரும் நடந்த கொலையை கண்டித்தும் தோழர் லீலாவதியைப் புகழ்ந்தும் சிலர் பணியை சிலாகித்தும் பேசினார்கள். பொதுவாழ்வில் ஈடுபடுகிற ஒரு பெண் இப்படியான முறையில் வெட்டிச் சாய்க்கப்பட்டால் இந்த நாட்டில் எந்தப் பெண் தைரியமாக பொதுவாழ்வில் ஈடுபட முன்வருவாள் என நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;தோழர் லீலாவதியின் வீட்டுக்குப் போனேன். எனக்கு உதவியாக எங்கள் பத்திரிகையின் மதுரை பகுதி விநியோகிஸ்தர் வந்திருந்தார். மிகச் சின்ன வீடு. பத்துக்கு இருபது அடி மட்டுமே உள்ள ஒண்டிக்குடித்தன வீடு. அதை வீடு என்பதைவிட சற்றே பெரிய அறை என்றுதான் சொல்ல வேண்டும். அறையின் இடது பகுதியில் விசைத்தறி இருந்தது. தோழரின் தொழில் தறிநெசவு என்பதும் அப்போதுதான் தெரிய வந்தது. கொஞ்சம் அலுமினிய பாத்திரங்கள். இந்த சின்ன அறையின் வலது மூலைச் சுவரில் புத்தக அலமாறி. இந்தச் சின்ன வீட்டில் இரண்டு வயதுக்கு வந்த பெண் குழந்தைகளோடு எப்படி வாழ்ந்தார்கள் என்பதே ஆச்சர்யமாயிருந்தது. தறிக்கு அருகில் சின்ன மாடம் இருந்தது. அந்த மாடத்தில் மண்ணால் செய்யப்பட்ட பாரதியாரின் உருவ பொம்மை இருந்தது. கையடக்க பாரதி. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை. திமிர்ந்த ஞானச் செருக்கை தோழர் லீலாவதிக்கு உணர்த்திய பொருளை அச்சிலை என்னை கசிய வைத்தது. வீட்டிலிருந்து வெளியேறினோம்.&lt;br /&gt;விநியோகஸ்தர் அடுத்த யாரை, எங்கு பார்க்க வேண்டும் என கேட்டபடி தனது இரண்டு சக்கர வாகனத்தை முடுக்கினார். பார்ட்டி ஆபீஸ”க்கு போங்கள் என்றேன். பார்ட்டி ஆபீஸுக்கு என்றதும் அவர் விளங்காமல் என்னது என்றார். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு போங்கள் என்றேன். பார்ட்டி என்றதும் குற்றம் சாட்டப்டட்வரின் ஆபீஸுக்கு என்று புரிந்துகொண்டார் போல. எங்களுடன் ஒரு புகைப்படக்காரர் வந்தால் சௌகர்யமாக இருக்கும் என்றேன். அவரே ஏற்பாடும் செய்தார். அந்த புகைப்படக்காரர் என்னிலும் சின்னவன் என்பதால் விளையாட்டுத்தனமாக கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தான்.&lt;br /&gt;கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்ததும் சற்றே காத்திருக்கும்படி சொன்னார்கள். தோழர்கள் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து விவாதித்துக் கொண்டிருப்பதாகவும் கூட்டம் முடிந்தவுடன் சந்திப்பதாகவும் கூறினார்கள். காத்திருந்தோம். தே·ர் அருந்த கடைத்தெருவுக்கு வந்தபோது புகைப்படக்காரர் சென்னை அலுவலகத்தில் வந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஆசிரியரிடம் பேசி பதில் சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டான். சரி என்பதுபோல சிரித்துவைத்தேன். தேநீர் கடைக்கே ஓடிவந்து ஒரு தோழர் எங்களை அழைக்கிறார்கள் என்றார். பாதித் தேநீரோடு அலுவலகம் திரும்பினோம்.&lt;br /&gt;அலுவலகம் என்றால் அது ஏதோ ஆளுயர கட்டிடம் என்றோ அண்ணாந்து வியக்கும் கட்டிடம் என்றோ நினைத்துவிடாதீர்கள். கூரை கொட்டகையைத்தான் ஊர்தோறும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமாகக் கொண்டிருக்கிறது. என் அப்பாவும் அதே கட்சியின் தஞ்சை நகரச் செயலாளராக இருக்கிறபடியால் தோழர்களின் மொழி எனக்கு அத்துபடி. வயது வித்தியாசமில்லாமல் கட்சி உறுப்பினர்கள் தோழர் என்று அழைப்பதையே விரும்புவார்கள். தோழமை பாராட்டும் அவர்களிடம் கள்ளமோ கபடமோ யாரும் அறிந்திருக்க முடியாது. அரசியல் வணிகமாகிவிட்ட இக்காலத்திலும் கூட அவர்கள் வணிக அரசியலுக்கு எதிரானவர்களாகவே இருந்துவருகிறார்கள்.&lt;br /&gt;அலுவலகத்தில் வெற்றுமார்போடு எங்களைச் சந்தித்தவர் மாவட்டச் செயலாளர் மோகன். சம்பவத்தின் முழு விவரத்தையும் தோழர் லீலாவதியின் தியாக மாண்புகளையும் பகிர்ந்துகொண்டார். பிறகு தோழர் நன்மாறனும் தோழர் ஜோதியும் கூடுதல் விபரங்களை வெளிப்படுத்தினார்கள். அலுவலகத்தில் உள்ள மின்விசிறி சப்தம் எழுப்பவே நிறுத்திவிடுவோமா என்றார் இன்னொரு தோழர். மின்விசிறியைக் கூட பழுது பார்க்க இயலாமல் மக்களின் பழுதுகளை போக்க துடிக்கும் தோழமை நிரம்பியவர்கள்தான் கம்யூனிஸ் கட்சியின் வீரஞ்செறிந்த உறுப்பினர்கள். தற்போது மதுரைத் தொகுதியில் தோழர் மோகன் எம்.பி. ஆகி மக்கள் பணியைத் தொடர்ந்து வருகிறார். தோழர் நன்மாறனும் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இரவு வெகு நேரமாகிவிட்டபடியால் உடன் திரும்ப முடியவில்லை. விடிகாலை கிளம்பி அன்று மாலையே சென்னைக்கு வர முடிந்தது. வந்தவுடன் சேகரித்த தகவல்களை எழுதி முடிக்க நள்ளிரவு நகர்ந்துவிட்டதால் அலுவலகத்திலேயே தங்கிவிட்டேன்.&lt;br /&gt;சம்பளம் கிடைத்ததும் பிரியாணி வாங்கித்தருவதாக நண்பர்களிடம் சொல்லிய எனக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தில்லியில் இருக்கும் பத்திரிகை நிறுவனர் வேறு சில சிக்கல் காரணமாக சென்னை அலுவலகத்திற்குப் பணம் அனுப்ப முடியாமல் போய்விட்டதாம். ஆதலால் சம்பளம் கையில் கிடைக்க பத்து நாள் பிடிக்கும் என்றார்கள். கையில் ஐம்பதே ரூபாயோடு விடுதிக்கு திரும்பினேன். நண்பர்கள் யாரிடமோ சென்று கடனாக முந்நூறு ரூபாய் வாங்கி வைத்திருந்தார்கள். சம்பளம் வந்ததும் கொடுத்துவிட்டால் ஆகிறது என்றார்கள். இரண்டு நாள் அலைச்சலில் எனக்கு உடல் நோவு கண்டுள்ளதாகக் கூறி நாளை கடைக்குப்போய் உணவருந்துவோமா என்றேன். நண்பர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மறுநாளும் உடல் சரியாகவில்லை. அவர்களாகவே திட்டத்தை கைவிட்டு அந்த முந்நூறு ரூபாயை என் மருத்துவத்திற்கு செலவிட்டார்கள். நான் கண்&amp;shy;ணீரில் குளித்து கரையேறும் போதெல்லாம் நண்பர்கள் கைகுட்டையோடும் ஆறுதலோடும் காத்திருந்தார்கள். மாதச் சம்பளக்காரனின் மனவலியை உணர அந்த சம்பவங்கள் பயன்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;-(பயணம் தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-4763123109874944549?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/4763123109874944549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=4763123109874944549&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/4763123109874944549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/4763123109874944549'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/07/blog-post_09.html' title='நடைவண்டி நாட்கள்:பதினைந்து'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-4949980792925414945</id><published>2008-07-09T19:08:00.000-07:00</published><updated>2008-07-09T19:19:16.244-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: பதினான்கு</title><content type='html'>&lt;strong&gt;ஒ&lt;/strong&gt;ன்றை எதிர்பார்த்துக்காத்திருப்பதைப் போன்ற அவஸ்தை எதுவுமில்லை. கிடைக்குமோ கிடைக்காதோ என்ற கவலை ஏற்படுத்தும் குழப்பம் காத்திருப்பை நரக வேதனையாக்கிவிடுகிறது. மீண்டும் வியாழக்கிழமை கல்லூரிக்குப்போய்ச் சேரும்போது, வளாகத்திலுள்ள மரங்கள் வசீகரிக்க வில்லை உள்ளத்தில் ஒளியின்றிப்போயின் உலகமே சூனியமென உணர முடிந்ததது.&lt;br /&gt;காத்திருப்போர் பட்டியலில் இன்றும் என் பெயர் அழைக்கப்படும் என்ற நிச்சயமில்லை. ஆனாலும் ஒரு குருட்டு நம்பிக்கை. நம்பிக்கை எனக்கு அறவே இல்லாத போதும் அப்பாவுக்கும் அப்பாவின் நண்பர் விஸ்வநாதனுக்கும் அதிகமாய் இருந்தது. விஸ்வநாதன் ஏற்கனவே கொஞ்சகாலம் அறந்தாங்கிப் பகுதியில் வசித்தவர். தற்போது தஞ்சையில் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருந்து வருகிறார். சிறிய அளவில் மளிகை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்பா கேட்டுக்கொண்டதற்காகவும் என் மீதுள்ள அன்பின் காரணமாகவும் உடன் வந்திருந்தார்.&lt;br /&gt;நானும் அப்பாவும் முதல்முறை காத்திருந்த கல்லூரி வளாக அறையில் உட்கார்ந்து கொண்டோம். குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் வந்திருக்கவில்லை. நாங்கள் சற்று முன்பாகவே வந்துவிட்டோம். விஸ்வநாதன் எங்கோ அவசரமாக கிளம்பினார். அரைமணியில் வந்துவிடுகிறேன் என்று அப்பாவிடம் கூறினார். நான் எதுவும் செய்ய முடியாதவனாக ஜன்னலை வெறுமனே வெறித்துக்கொண்டிருந்தேன். பேராசிரியர்கள் வந்தார்கள். அப்பா என் மதிப்பெண் விபரங்களைக் காட்டி உடைந்த குரலில் பேராசிரியர்களோடு உரையாடத் தொடங்கினார்.&lt;br /&gt;இரண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது சார், ஆனால் உங்கள் பையன் மூன்றாம் இடத்தில் இருக்கிறான். அவர்களில் யாரேனும் வரத் தவறினால் உங்கள் பையனுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். அவர்கள் வந்துவிட்டால் எங்களால் எதுவும் செய்ய முடியாது.&lt;br /&gt;அந்த இரண்டு பேரும் வரக்கூடாது என்று மனசுக்குள் பிரார்த்திக்க வேண்டியிருந்தது. பாவம் அந்த இரண்டு பேரும். எனக்காக வராமல் இருந்தால் என் ஆயுசுக்கும் அவர்களை நினைத்து வழிபடுவேன். அந்த இரண்டு பேரில் ஒருவருடைய பெயர் சாமிநாதன் என்பதாக பேராசிரியர் கூறிப்போக சாமிநாதா எனக்காக உன் வாழ்வை விட்டுக்கொடு. எனக்காக உன் ஆர்வத்தை விட்டுவிடு. எனக்காக உன் எதிர்காலத்தை மறந்துவிடு என்றெல்லாம் முணுமுணுத்தேன். வராந்தாவில் அப்பா குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவரால் நிலைகொள்ள முடியவில்லை மூன்று நான்கு முறைக்கு மேல் வெற்றிலையை அதக்குவதும் துப்புவதுமாய் இருந்தார். அதிக முறை வெற்றிலையை அப்பா பயன்படுத்தினால் அவரது மனநிலை பதட்டமாக இருக்கிறதென்று பொருள். அப்பாவின் மனநிலையையும் முகத்தையும் பேராசிரியர்கள் புரிந்து கொண்டார்கள். அப்பாவின் முகத்தில் தென்படும் உண்மையின் ரேகைகள் அவர்களை உறுத்தியிருக்கவேண்டும் .&lt;br /&gt;பன்னிரண்டு மணிவரை காத்திருக்கச் சொன்னவர்கள் பத்தேமுக்காலுக்கு எங்களை அழைத்துவிட்டார்கள். உங்கள் உணர்வு எங்களுக்குப் புரிகிறது. ஒன்று செய்யலாம் உங்கள் படிவங்களை எங்களிடம் கொடுங்கள் நாம் எதிர்பார்க்கும் அந்த இருவரும் வர வாய்ப்பில்லை அப்படியே வந்துவிட்டாலும் தாமதமாக வந்த காரணத்தை சொல்லி சமாளித்துக்கொள்ளலாம். இது, உறுதியான முயற்சி அல்ல உங்களுக்காக நாங்கள் செய்யும் சகாயம். உங்கள் பையனுக்காக அளிக்கப்படும் இவ்வாய்ப்பு உங்கள் பண்புக்காகவும் நடத்தைக்காகவும் வழங்கப்படுகிறது. இவ்வாய்ப்பை அவன் சிறப்பாக பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்றார்கள். அப்பா,அவனிடமே உங்கள் அறிவுரையை சொல்லுங்கள் என்றார். அதீத சோகம் படர்ந்த முகத்தோடு அவர்கள் முன் நிற்பது எனக்கு அவமானமாக இருந்தது. பிறகு கல்லூரியில் சேர்வதற்கான வழிமுறைகளில் ஒன்றான என் மதிpப்பொண் சான்றிதழ் பரிசோதனையையும் இதர செயல்களையும் அரங்கேற்றினார்கள் இந்த நடைமுறைகள் ஈடேறுவதற்குள் விஸ்வநாதன் வேர்க்க விறுவிறுக்க நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் நெற்றி மீதிருந்த திருநீறுக்கீற்று வேர்வையில் புரண்டிருந்தது.&lt;br /&gt;வந்ததும் வராததுமாக அப்பாவிடம் என்ன ஆச்சு தோழர் என்று கேட்டார். அப்பாவை தோழ்ர் என்றே அவர் அழைக்கப்பழகியிருந்தார். விஸ்வநாதன் கட்சித் தோழர் இல்லையென்றாலும் அவர் அப்படி அழைப்பதையே அப்பாவும் பெருமையாக் கருதுவார் நடந்தவற்றையெல்லாம் முழுதாக அப்பா அவரிடம் விளங்கப் படுத்தினார். எல்லாம் சாமியின் கருணை என்றார் விஸ்வநாதன் ஆமாம் சாமிநாதனின் கருணை தான் என்றார் அப்பா. இல்லைத்தோழர் கல்லூரிக்கருகிலேயெ ஒரு கோயில் இருக்கிறது இந்தப்பகுதி மக்களால் சக்திமிக்க கோயிலாகவும் அது கருதப்படுகிறது "செருப்படி சாமி" என்று அழைப்பார்கள். அந்தக் கோயிலுக்குப்போனால் திரும்பும்போது செருப்பை அங்கேயே விட்டு விட்டு வரவேண்டும். வேண்டுதலை சொல்லி காலில் அணிந்திருக்கும் செருப்பை கழற்றி மாடம்போல் இருக்கும் இடத்தில் இரண்டு தட்டுத்தட்டி வீசிவிட்டு வரவேண்டும் அந்த சாமியின் கருணைதான் தம்பிக்கு கல்லூரியில் இடம்கிடைக்க உதவி செய்திருக்கிறது என்றார். அப்பாவுக்கு மெல்ல சிரிப்பு அரும்பியது.&lt;br /&gt;அப்போ செருப்பு கண்டுபிடிப்பதற்கு பிறகு உருவான சாமின்னு சொல்லுங்க. செருப்பில்லாதவர்கள் அந்த சாமியை வேண்டிக்கொளள் இயலாது அப்படித்தானே இப்போ என்காலுக்கு செருப்பு வேணும்னு வேற ஒரு சாமிகிட்ட வேண்டிகிட்டு இந்த சாமிக்கிட்டவந்து செருப்பை விட்டுடணும். எனன் விஸ்வநாதன் தொண்ணூறுகளில் போய் இதெல்லாம் நம்பிக்கிட்டிருக்கீங்க என்றார். அப்பா எப்பவும் இப்படிப்பேசுவார் என்று விஸ்வநாதனுக்குத் தெரியும் எனவே எந்த சலனமும் இல்லாமல் தலைகுனிந்து தன்இடுப்பு வேட்டியில் மடித்து வைத்திருந்த திருநீறை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டார். நோயில் இருந்து மீண்டது போல என்னையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. தனியாக ஒருமுறை கல்லூரி முழுக்க உலவினேன்.&lt;br /&gt;யாரோ ஒருவரின் உண்மையான பிரார்த்தனை யாரோ இன்னொருவரின் வாழ்வுக்கு உதவுகிறது என்பதை நான் நம்புவதைப்போல அப்பா நம்புவதில்லை.யாரோ ஒருவரின் உழைப்பை வேறு யாரோ ஒரு முதலாளி சுரண்டும் செயல்போலவே பக்தியையும் அதற்கான சடங்கு சம்பிரதாங்களையும் மறுத்துக்கொண்டிருப்பார். ஆனால் பிறர் மனம் நோகுமளவுக்கு அவர் வாதம் ஒருபோதும் போனதில்லை.&lt;br /&gt;அன்று முதல் அறந்தாங்கித் தொழில் நுட்பக் கல்லூரிக்கும் எனக்குமான உறவு தொடங்கியது. இந்தக்கல்லூரி உன் மேற்படிப்புக்கு ஏதுவானது. விஸ்தாரமான பிரமிக்கத்தக்க இந்தக் கட்டிடங்களை நீ படிப்பதற்காக மட்டுமே செலவிடவேண்டும் என்றார் அப்பா. ஒரு வாரம் கழித்துத்தான் வகுப்புகள் தொடங்க இருக்கிறது என்பதால் ஊருக்கு கிளம்பலாம் என்றார் அப்பா. விஸ்வநாதன் அவருடைய உறவினர் வீட்டிற்கு அழைத்துப்போனார். என்னை அவர்களிற்கு அறிமுகம் செய்வித்தார் தம்பிக்கு என்ன தேவை என்றாலும் செய்து கொடுங்கள் அன்பொழுக அவர்கள் பழகிய விதம் என்னையும் கவர்ந்தது. ரொம்பவே கவர்ந்து விடுகிறவர்களிடம் உதவி கேட்கக் கூடாது என்பதால் மூன்றாண்டு கல்லூரி வாழ்வில் அவர்களிடம் நான் என் தேவை எதற்காகவும் அவர்களைச் சிரமப் படுத்தவில்லை. அவ்வப்போது அவர்களை சந்திப்பதும் நலம் விசாரிப்பதுமாக அந்த உறவை கௌரவப்படுத்தினேன். அந்த வீட்டில் அன்புசெலுத்த ஓர் அழகான பெண்ணும் இருந்தாள்.&lt;br /&gt;வீட்டுக்கு வந்தததும் எங்கள் முகத்தைப்பார்த்து கல்லூரியில் இடம் கிடைத்த விசயத்தை தானாகவே அம்மா புரிந்து கொண்டாள் "எப்ப காலேஜ் தொடங்குது" என்றாள். விலாவாரியாக அப்பா சொல்லி முடித்தார். விஸ்வநாதன் வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்த மஞ்சனத்தி மரத்தருகே உட்கார்ந்து கொண்டார். அப்பா தொடர்ந்து, வசந்தி வர்ற திங்கக் கிழமை நீயும் காலேஜுக்கு வா தம்பிய அங்க விட்டுட்டு ஹாஸ்டல் ஏற்பாடெல்லாம் செய்து கொடுத்திட்டு திரும்பி வருவோம் அப்புறம் கிளம்புறப்போ மற்ந்திராம இரண்டு ஜோடி செருப்பெடுத்துக்கோ என்று குபீர் சிரிப்போடு வெளிப்படுத்த, விஸ்வநாதன் அண்ணன் பேசத்தொடங்கினார்.&lt;br /&gt;செருப்படிசாமியின் சேம பலன்களை பற்றியெல்லாம் விபரிக்க விபரிக்க அப்பா கொட்டாவி விடவும் அம்மா வியந்து கேட்கவும் சூழல் நெகிழ்ந்து போனது. செருப்பை வைத்து ஆட்சி செய்ததை நம்புகிற சமூகத்தில் அம்மா மாதிரியானவர்கள் அந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பதால் எந்த தீங்கும் வந்து விடப்போவதில்லை நம்பிக்கை செருப்பு சார்ந்ததாக இருந்தாலும். சிறப்பு சார்ந்தததாக இருந்தாலும் அது இருப்பு சார்ந்த நம்பிக்கை என்பதால் அம்மாவுக்கு பக்தி பரவசப்படுத்தியது.திரு நள்ளாறுக்குப் போய் அணிந்திருக்கும் சட்டைத்துணிகளை ஆற்றிலே விடுவதைப்போல இந்த சாமிக்கு செருப்பை தரவேண்டும் என்பதை புரிந்து கொண்டாள். அது முதல் ஒவ்வொரு தேர்வு சமயத்திலும் தேர்வுக் கட்டணத்தோடு புதிதாக வாங்கப்போகும் செருப்புக்கான கட்டணமும் அம்மாவால் எனக்கு வழங்கப்பட்டது. இப்போதும் நண்பர்கள் நீ செருப்படி வாங்கப் போகிறாய் என செல்லமாய்த்திட்டும் போது சாமியாகிவிட்டதைப்போல நினைக்கத் தோன்றும். இன்னொரு முறை அறந்தாங்கிக்குப் போய் வரவேண்டும்.&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-4949980792925414945?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/4949980792925414945/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=4949980792925414945&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/4949980792925414945'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/4949980792925414945'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/07/blog-post.html' title='நடைவண்டி நாட்கள்: பதினான்கு'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-6964273495866435466</id><published>2008-06-26T10:06:00.000-07:00</published><updated>2008-06-26T10:07:45.581-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள் : பதிமூன்று</title><content type='html'>&lt;strong&gt;எ&lt;/strong&gt;ந்தப் பிரயத்தனமும் இல்லாமல் எனக்கு வேலை கிடைத்ததுபோல் தோன்றினாலும், கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ள இயலுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.&lt;br /&gt;எந்த வேலை என்றாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று கருதுகிறவன் நான். பத்திரிகை துறை குறித்த முன் அனுபவம் ஏதும் இல்லாமல் மீதமுள்ள காலங்களை எப்படி நகர்த்திக் கொண்டு போவேனோ என்ற அச்சம் தொற்றியது.&lt;br /&gt;என்னை நான் தேற்றிக்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வேன். அல்லது நல்ல நண்பர்கள் என்னை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். யோசித்துப் பார்த்தால் அந்தந்த காலகட்டத்தில் என்னை நல்வழிப்படுத்தியவர்களும் நல்ல வழி நோக்கி மடைமாற்றி இருப்பவர்களும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.&lt;br /&gt;அம்பேத்கர் விடுதியில் கிடைத்த நண்பர்களைப் போல பத்திரிகை துறையிலும் நல்ல நண்பர்கள் வாய்த்தார்கள். பத்திரிகை துறையில் வெறியோடு செயல்படும் பலரும் எனக்கு நட்பின் சுவையை உணர்த்தினார்கள். பத்திரிகை அலுவலகம், முற்றிலும் வித்தியாசமான களம்.&lt;br /&gt;அலுவலகப் பயனிலிருந்து பத்திரிகை நிறுவனர் வரை அத்தனை பேரின் எண்ணமும் ஒன்றாக ஒருமித்து இருந்தாலன்றி அப்பத்திரிகை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற இயலாது.&lt;br /&gt;என் பத்திரிகை ஆசிரியர் வித்யாசங்கர் ரொம்பவே பத்திரிகை துறையின் நுட்பங்களை அறிந்தவர். ஏற்கனவே நக்கீரன் என்ற பத்திரிகையை பெரும் வெற்றிக்கு இட்டுச் சென்ற அனுபவம் மிக்கவர். புலனாய்வு இதழின் அரிச்சுவடியை நன்கு கற்று அதைப் பலமடங்கு உயர்த்தியும் காட்டியவர். தன்னை நிரூபிக்க   அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அவர் கண்களில் தெறிக்கும். அலுவலகத்திற்கு வருகிறவர்கள் சொல்லும் எந்தக் கருத்தையும் உதாžனப்படுத்தாமல் உள்வாங்கிக்கொண்டு அதைச் சாதுரியமாக வெளிப்படுத்தும் இயல்பை அவர்போல வேறொருவரிடம் நான் கண்டேனில்லை. அதிக பத்திரிகைகளில் நான் பணியாற்றியதில்லை. எனினும் அவர் ஒருவரே சகலத்திலும் கெட்டிக்காரர்போல எனக்குத் தோன்றுவதுண்டு.&lt;br /&gt;'ராஜரிஷ’' பத்திரிகையில் நான் அறிவிக்கப்பட்ட உதவி ஆசிரியராக ஆனதும் ஆசிரியர் எனக்குக் கொடுத்த முதல் 'அசைன்மென்', வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜானிடம் சென்று கேள்வி, பதில் வாங்க வரவேண்டும்.&lt;br /&gt;வாசகர்களின் கேள்விக்கு வலம்புரியார் பதில் சொல்லும் பொறுப்பை ஏற்றிருந்தார். கட்டுக்கட்டாய் வரும் தபால் அட்டைகளை கையில் எடுத்துக் கொண்டுபோய், அவரிடம் ஒவ்வொரு கேள்வியாக வாசித்தால் வலம்புரியார் உடனுக்குடன் பதில்களைத் தருவார். அதை எழுதிக்கொண்டு வந்து செப்பனிட்டு, நான்கு பக்கங்களை தயாரிக்க வேண்டிய பணி என்னுடையது.&lt;br /&gt;கிரியேட்டிவ் ஆக அந்தப் பக்கங்களில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆசிரியர் குறுக்கிடமாட்டார். அந்த வருடத்தில் அகில இந்திய ரீதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைக்க மறுத்ததால் அவ்வாய்ப்பு மூப்பனாருக்குக் கிடைக்காமல் போனது.&lt;br /&gt;அப்போது தமிழ் மாநில காங்கிரசில் கொள்கைப் பரப்புச் செயலாளராக வலம்புரியார் இருந்தார். வாய்ப்பு மூப்பனாருக்குக் கிடைக்காமல் போனதுபற்றி வாசகர்களிடமிருந்து கேள்வியை எதிர்பார்த்தேன். ஒருவரும் கேட்டிருக்கவில்லை. நானே ஒரு கேள்வியை தயாரித்து முதல் கேள்வியாகக் கேட்டேன்.&lt;br /&gt;'மூப்பனார் பிரதமராக முடியாததற்கு யார் காரணம்?'&lt;br /&gt;வலம்புரியாரின் வீட்டை பிரமிக்காமல் அவ்வழியைக் கடக்க முடியாது. அத்தனை பிரமாண்டமான வீடு அது.&lt;br /&gt;அறை நிரம்ப நூல்கள். பத்து பல்கலைக்கழகத்துக்கு தேவையான நூல்களும் அங்கே இறைந்து கிடக்கும். புத்தகக் கட்டுகளுக்கு நடுவேதான் அவர் அமர்ந்திருப்பார். மெல்லிசான மேலாடையில் காட்சி அளிக்கும் அவர் என்னைப் பாரதி என்ற பெயருக்காக ரொம்பவே மதிப்பார். அவர் கீழே அமர்ந்துகொண்டு என்னை இருக்கையில் அமரப் பணிப்பார். நாகரிகம் கருதி ஒருமுறை நானும் கீழே அமர முற்படும்போது, 'பாரதி யாருக்காகவும் தன்னைச் சுருக்கிக் கொண்டதில்லை. ·யும் அப்படியே இரு' என்று தோள்களைத் தட்டி, 'கம்பீரம் வேண்டாமா பாரதிக்கு' என்று கடவாய் புன்னகையோடு கடிந்து கொண்டார்.&lt;br /&gt;மூப்பனார் பிரதமர் ஆக முடியாததற்கு யார் காரணம்? என்ற கேள்வியை எழுப்பியதும், அது வசிஷ்டருக்கும் விசுவாமித்தரருக்கும் இடையே நிகழும் யுத்தம். காலம் தர வேண்டிய பதிலுக்கு கடைக்கோடி மனிதன் காத்திருக்கிறான் என்றார்.&lt;br /&gt;பதிலைச் சொல்லிவிட்டு, 'பதில் புரிகிறதா?' என்றார்.&lt;br /&gt;'புரிகிறது' என்றேன்.&lt;br /&gt;'வசிஷ்டர், விசுவாமித்திரர் ஒப்புமை அற்புதம்' என்றேன்.&lt;br /&gt;'· கெட்டிக்காரன். வயது என்ன ஆகிறது?' என்றார்.&lt;br /&gt;சொன்னேன்.&lt;br /&gt;'அப்ப அரசியல் ஈடுபாடு உடையவரா?' என்றார்.&lt;br /&gt;'ஆமாம்' என்றேன்.&lt;br /&gt;'இது உன் கேள்விதானே, நல்லது. அடுத்த என்ன கேள்வி?' என்றார்.&lt;br /&gt;எனக்கு தூக்கிவாரிப்போட்டது.&lt;br /&gt;கேள்வியை நான் தயாரித்தது அவருக்கு எப்படி தெரிந்தது என்ற குழப்பம் புறமிருக்க, அலுவலகத்தில் இதனால் என் மீது ஏதாவது பிராது ஏற்படுமோ எனவும் அஞ்சினேன்.&lt;br /&gt;காரணம் பத்திரிகை நிறுவனர், தமிழ் மாநில காங்கிரஸ் அனுதாபி. மூப்பனாரின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.&lt;br /&gt;வலம்புரியார் என்னை மெச்சியது மகிழ்ச்சியாய் இருந்தது. அவரிடம் எதுபற்றியும் கேட்கலாம். அண்டத்தில் உள்ள அத்துனை விஷயங்களையும் அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்து வைத்திருப்பவர். புள்ளி விவரம் என்று நாம் பேச்சுக்கு சொன்னால், புள்ளிக்கு எத்தனை விபரங்கள் இருக்கின்றன என சொல்லத் தொடங்குவார்.&lt;br /&gt;கவிஞர்களின் காதலனாகவும் அவரே கவிஞனாகவும் இருந்ததால், வித்யாசங்கரையும் என்னையும் நேசிப்பார். அவ்வப்போது தனக்குத் தோன்றும் மின்னல் பொறிகளைப் பகிர்ந்து கொண்டு கருத்து கேட்பார்.&lt;br /&gt;வார்த்தைகள் அவரது கட்டளைக்குக் காத்திருக்கும்.&lt;br /&gt;'பாரதி, மின்னலை விழுங்கி மின்சாரத்தை கொப்பளித்தவன்' என்று மிகை உணர்ச்சி வார்த்தைகளை மிக இயல்பாக உதிர்பார். ஆச்சரியமாக இருக்கும்.&lt;br /&gt;அவரைக் கொடியில் தொடங்கி அம்மாவின் தொப்புள் கொடி வரை அவரால் தொடர்புபடுத்தி வார்த்தைகளைப் பரிமாற முடியும். வெறும் எதுகை மோனை விளையாட்டு இல்லாமல் அவ்வார்த்தைகளுக்கு இடையே கருத்துக்களையும் கவனமாகக் கோர்க்கும் வித்தை அவருக்குக் கைவந்த கலையாய் இருந்தது.&lt;br /&gt;பத்திரிகை துறையில் முதல் மாதத்தை ஓட்ட நான் பட்ட சிரமம்தான் வாழ்வில் நான் அறிந்து பட்ட பெரும் சிரமம்.&lt;br /&gt;சம்பளம் வாங்குவதற்குள்ளான ஒரு மாதத்தை ஓட்ட, நான் பட்டபாடு, நாய் பட்ட பாடு!&lt;br /&gt;காலையில் விடுதி நண்பர்கள் யாராவது என் உடுப்புகளை அவர்கள் காசில் அயர்ன் செய்து தருவார்கள். தலைக்கு எண்ணெய், žப்பு என்றைக்காவது முகத்துக்குப் பவுடர் எதுவும் என்னிடம் இருக்காது. எல்லாம் உபயதாரர்களின் செலவுதான். வாழ்க்கையே இன்னொருவரின் உழைப்பில் என்னும் அளவுக்குப் போய்விட்டது. சரவணனிடம் மனம்விட்டுப் பேச முடியாத அளவு பணிச்சுமை வேறு!&lt;br /&gt;பத்திரிகை துறையில் முன் அனுபவம் எதுவும் இல்லாமல் சேர்ந்த ஒருவனுக்கு நேரும் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தேன்.&lt;br /&gt;பொது இடத்தில் ஒரு பத்திரிகையாளன் நடந்து கொள்ள வேண்டிய அடிப்படை கூட தெரியாமல் திக்குமுக்காடினேன். இன்னொரு புறத்தில் லௌகீக கஷ்டம்!&lt;br /&gt;அம்மாவுக்கு விடுதி முகவரியிலிருந்து ஒரே ஒரு கடிதம் எழுதினேன். நன்றாக இருப்பதாக பொய்யாக நான் எழுதிய கடிதத்துக்கு அம்மா எழுதிய பதில் கடிதம் கண்&amp;shy;ரை வரவழைத்தது.&lt;br /&gt;அலுவலகத்தில் எனக்குப் பூரண சுதந்திரம் இருந்தது. அரவிந்தன் என் வயது ஒத்த உதவி ஆசிரியர். அவன் அன்பை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துவான். என் வறுமை அவனுக்குத் தெரிய வந்த நாளிலிலிருந்து தினசரி மதிய உணவை அவன் வீட்டிலிருந்தே எடுத்து வரத் தொடங்கினேன். காலையும் இரவும் வேறு யாராவது கவனித்துக் கொள்வார்கள். அவர்கள் கவனிக்க மறக்கும் நாளில் மதியம் மட்டும் அரவிந்தன் அன்பில் நெகிழ வேண்டியிருக்கும். எங்கு போனாலும் கால்நடைதான். கண்களில் வெறியும், கால்களில் ஆணவமும் நிரம்பிய ஒரு பரதேசியைப் போல என் செயல்கள் அமைந்திருந்தன.&lt;br /&gt;ஒருமாதம் முடியப் போகிறது. நாளை சம்பளம்!&lt;br /&gt;விடுதி நண்பர்களிடம் இரவே சொல்லி வைத்திருந்தேன். நாளை எல்லோரும் நல்ல கடைக்குப் போய், பிரியாணி சாப்பிடுவோம்!&lt;br /&gt;- (பயணம் தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-6964273495866435466?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/6964273495866435466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=6964273495866435466&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/6964273495866435466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/6964273495866435466'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_26.html' title='நடைவண்டி நாட்கள் : பதிமூன்று'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-8330214224953705716</id><published>2008-06-24T05:00:00.000-07:00</published><updated>2008-06-24T05:04:52.717-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள் : பனிரெண்டு</title><content type='html'>&lt;strong&gt;நா&lt;/strong&gt;ம் இன்னொருவரால் விரட்டப்படுகிறோம் எனும் உண்மை, மூளையை உந்தித் தள்ளும்போது கை, கால்கள் தனக்குரிய சக்தியை மேலும் கூட்டிக் கொள்கின்றன.&lt;br /&gt;அரண்மனை வளாகத்திற்குள் பதுங்கியிருந்த என்னை, விரட்டிக் கொண்டு வந்தவர்கள் திரும்புவதை கைதூணுக்குப் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;எதேச்சையாக எனக்குக் கிடைத்த துண்டுக் காகிதம் தனக்குக் கிடைக்காமல் போன துக்கம் வலது ஓரத்தில் இருந்தவனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் என்னைத் துரத்த வைத்தது.&lt;br /&gt;மற்றபடி என்னைத் துரத்தியோ, அல்லது துன்புறுத்தியோ அவர்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. அன்று அதிகாலையில் இருந்து எனக்கு எல்லாமே நினைத்தபடி அல்லாமல் இன்னொரு சந்தர்ப்பத்தை நினைக்கத் தக்கனவாக மாறிப் போயின.&lt;br /&gt;தேர்வை வெற்றிகரமாக முடித்துவிட்ட தைரியத்துடன் வீட்டுக்குப் போக, மதிய வெயில் உச்சிக்கு ஏறிவிட்டது. இயல்பாய் இல்லை. மனது குற்ற உணர்வில் புரண்டது.&lt;br /&gt;முகத்தில் கவ்வியிருந்த பதற்றத்தை பார்த்து அம்மா எதுவும் கேட்கவில்லை. தேர்வை சரியாக எழுதவில்லை என்பதுபோல கருதியிருக்கலாம். சலனமே இல்லாமல் யாரோடும் பேசாமல் படுக்கையில் போய் சுருண்டு கொண்டேன்.&lt;br /&gt;žனு அண்ணன் வந்து எழுப்பினார். மாலை இருள் கவியத் தொடங்கியிருந்தது. நடந்தவற்றை அழுகையோடு அவரிடம் கூறினேன். அவரும் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டார். என் மீது அவருக்குக் கோபம் மூண்டதை கண்களில் வெளிப்படுத்தினார்.&lt;br /&gt;பள்ளி விடுமுறை. இரண்டொரு நாள் தேர்வு மனநிலையில் அல்லாடிய மனது விடுமுறைக்குத் தயாரானது. கவிதைதான் எனக்கு விடுமுறை கொண்டாட்டம். செல்லகணேசனின் வீட்டுப் புத்தக அலமாரியே எனது பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;இல்லை, போக்கிக் கொண்டிருக்கவில்லை, ஆக்கிக் கொண்டிருந்தன!&lt;br /&gt;நீண்ட நெடிய வாசிப்பு!&lt;br /&gt;ஆழமும் ஆசையும் கூடின வாசிப்பு!&lt;br /&gt;வால்காவிலிருந்து கங்கைவரை என்பதைப் போல வானத்திலிருந்து பூமிவரை என் வாசிப்பு வேறு வேறு திசைகளை திக்குகளை நோக்கி விரிந்தன.&lt;br /&gt;என் வயதுக்குப் பிடிபடாத பல விஷயங்களை வாசிப்பு மூலம் எட்டிப்பிடிக்க ஆசை கொண்டவனாய் இருந்திருக்கிறேன்.&lt;br /&gt;எழுதுவதில் கூட எனக்கு சோர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் வாசிப்பதில் ஒருபோதும் சோர்வு ஏற்பட்டதில்லை. ஒரு நூலை வாசித்துவிட்டு அந்த நூலை வாசித்த வேறொருவரோடு விவாதிப்பதிலும் நாட்டம் உடையவனாக அலைவேன். விவாதம் மேலும் என்னைச் செம்மைப்படுத்தும் என்பதை நம்புவேன். குறிப்பிட்ட நூலில் கவனிக்கத் தவறியதை பிறர் சொல்லும்போது அதை ஏற்கவும் இதயத்தில் வாங்கிக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவேன்.&lt;br /&gt;கவிதை நூல்களில் ஆரம்பத்தில் என் கவனம் முழுவதும் மரபுக் கவிதைகள் பக்கமே இருந்தது. ஓசைகளை உள்வாங்கி பெரும் ஆவேசத்தோடு அவற்றை உச்சரித்து எனக்குள் போதை ஏற்றிக் கொள்ளும் வெறியோடு செயல்படுவேன்.&lt;br /&gt;நாவல்கள் என்றால் தொடக்கத்தில் ரஷ்ய நாவல்கள்தான்!&lt;br /&gt;அழகான அழகான அச்சில் வெளிவரும் அந்நூல்களின் விலை மிகமிக மலிவாக இருக்கும். உயர்ந்த விஷயம் மலிவாகக் கிடைக்கும் ஆச்சரியம் நூல்கள் மீது அதீத அன்பைக் கூட்டிவிடும்.&lt;br /&gt;கிளைகிளையாக விரிந்து, என் ஆர்வச் சிறகுகள் வாசிப்பு சுகத்தை வான்வரை முட்டத் தொடங்கின!&lt;br /&gt;வீட்டில் உணவுக்காக மட்டுமே என் பேச்சிருக்கும்! மற்றபடி வாசிப்பு மட்டுமே என் முழுநேரத் தொழிலானது.&lt;br /&gt;தேர்வு முடிவு வந்தது.&lt;br /&gt;அப்போதுதான் வீட்டில் அடுத்து நான் பதினொன்றாவது படிக்கப் போகிறேனா அல்லது பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேரப் போகிறேனா என்ற கேள்வியும் சர்ச்சையும் பிறந்தன.&lt;br /&gt;எனக்குத் தொழில்நுட்பக் கல்வியில் சேரவே விருப்பம். பதினொன்றாம் வகுப்பு முடிந்து பனிரெண்டு சென்றதும் மீண்டும் பொதுத் தேர்வு பிரச்னை இருப்பதால் தொழில்நுட்பக் கல்வியில் சேர்ந்தவிட்டால் கல்லூரிபோல பாடங்களை செமஸ்டர்களாக எழுதிக் கொள்ளலாம் என எண்ணினேன்.&lt;br /&gt;அம்மாவுக்கு என் முடிவு பிடித்திருந்தது. அப்பாவுக்குப் பெரிதாக நாட்டமில்லை.&lt;br /&gt;படிப்பை நான் அனுபவித்தேன். ஆனால் அது பாடப்புத்தகப் படிப்பாக இல்லாமல், பரந்து விரிந்த சிந்தனைப் புத்தகங்களாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.&lt;br /&gt;ஒருவழியாக அப்பாவும் சம்மதித்தார். என் மேற்படிப்பு விஷயத்தில் அப்பா விதித்த நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். மேற்படிப்புக்காக தனியார் கல்லூரிக்கு லட்சம் லட்சமாகப் பணம் கொடுத்து வாய்ப்பு பெறக்கூடாது. அரசுக்கு கல்லூரிகளில்தான் என் படிப்பு தொடர வேண்டும்.&lt;br /&gt;அம்மாவுக்கு உள்ளூரில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பணம் கொடுத்தாவது சேர்ப்பிக்க ஆசை. ஆனால் எத்தனை சொல்லியும் அப்பா அம்மாவின் ஆசைக்கு இணங்க மறுத்தார்.&lt;br /&gt;அறந்தாங்கி அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தது. காத்திருப்போர் பட்டியலில் என் பெயர் இருபத்து இரண்டாவது இடத்தில் இருந்தது. வாய்ப்பு மிகக் குறைவு என்பதால் žனு அண்ணன் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியை அணுகலாம் என்றார்.&lt;br /&gt;žனு அண்ணன் ஆலோசனையைக் கூட அப்பா புறந்தள்ளினார். அப்பா ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டால் பிறகு அதிலிருந்து பின்வாங்குவதை இழுக்காகக் கதுருபவர்.&lt;br /&gt;அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்குப் புறப்படடோம். விடியற்காலையில் கிளம்பி அறந்தாங்கிக்கு போய்ச் சேர இரண்டு மணிநேரம் பிடிக்கும். நெற்றியில் அம்மா திரு·ரைக் கொண்டு வந்து பூசிவிட்டாள். அப்பாவுக்குச் சிரிப்பு வந்தது.&lt;br /&gt;தன் தோளில் கிடந்த ஊதா நிற சால்வையை பொத்திக் கொண்டு வாயிலிருந்து வந்த சிரிப்பை மறைத்ததை தம்பி பார்த்துக் கொண்டிருந்தான். ஓடிவந்து இறுக அணைத்து என் நெற்றியில் முத்தமிட்டான்.&lt;br /&gt;கட்டாயம் இடம் கிடைக்கும் என்றான்.&lt;br /&gt;பேருந்திலா கல்லூரியிலா? என அப்பா சிரித்துக் கொண்டே கேட்டார்.&lt;br /&gt;கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த மாத்திரத்திலேயே அந்த இடம் ரொம்பவும் பழகிய இடம்போல் இருந்தது.&lt;br /&gt;கல்லூரியின் அமைப்பு மட்டுமில்லாமல் அங்கிருந்த மரங்களும் அருகிலிருந்த கிராமங்களும் என்னை வெகுவாக ஈர்த்தன. கல்லூரியின் வழியேதான் ஆவுடையார் கோவில் போக வேண்டும். ஆவுடையார் கோவில் சிறப்புமிக்க சிவஸ்தலங்களுள் ஒன்று. கல்லூரி வளாகத்தில் நிறைய மாணவர்கள் என்போலவே தன் பெற்றோருடன் நின்றுகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;எல்லோருடைய முகத்தில் சின்னதாய் ஏக்கம் தென்பட்டது. சிலர் முகத்தில் மகிழ்ச்சி.&lt;br /&gt;மகிழ்ச்சியான முகங்கள் இடம் கிடைத்த திருப்தியை வெளிக்காட்டின.&lt;br /&gt;எக்கமான முகங்கள், காத்திருப்போர் பட்டியல் முகங்கள் என்பதை யார் சொல்லாமலும் புரிந்துகொள்ள முடிந்தது.&lt;br /&gt;காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஒவ்வொருவராக அழைக்கப்பட்டார்கள். பெரிய கூடத்தில் இறுத்தி வைக்கப்பட்டு ஒவ்வொருவராக அழைக்கப்படும் போதெல்லாம் என் பெயர் அழைக்கப்படாத என்றிருக்கும்.&lt;br /&gt;இதயம் கூடுதலாக இயங்குவதைப் போலவும், பதற்றம் பல மடங்கு அதிகமாவது போலவும் தோன்றும். இன்று காத்திருப்போர் பட்டியலிலிருந்து பதினெட்டு பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். மீதமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் யாரேனும் தொடர விருப்பம் இல்லாது விடுபட்டால் அன்றி சேரும் வாய்ப்பு குறைவு என்று குழுவிலிருந்த பேராசிரியர் நிகழ்ச்சி நிரலை முடிக்கும் தொனியில் கூறினார்.&lt;br /&gt;அப்பாவுக்கு முகம் வெளிறிப் போனது!&lt;br /&gt;என் கண்ணில் இருந்து மடமடவென கண்&amp;shy;ர் பெருகி வழிந்தது.&lt;br /&gt;அப்பாவை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல் குனிந்து கொண்டே பின்தொடர்ந்தேன். ஒரு கோழையின் தோல்வியைப் போல!&lt;br /&gt;அப்பாவுக்கு என்னைத் தேற்றுவது பெரும்பாடாகிவிட்டது.&lt;br /&gt;இன்னும் பத்து மதிப்பெண் அதிகமாகப் பெற்றிருந்தால் இப்படி அழத் தேவையில்லை எனக் கண்டிக்கக்கூட இல்லை.&lt;br /&gt;அப்பா பெரிய மனிதர்! எனக்கு ஆறுதலை உற்பத்தி செய்தார்.&lt;br /&gt;'இங்கில்லை என்றால் என்ன, தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் பணம் கொடுத்தாவது வாங்கிக் கொள்ளலாம். · கவலைப்படாதே' என்றார்.&lt;br /&gt;ஒரு தகப்பனின் ஸ்தானம் என்பது அதுதான்!&lt;br /&gt;தன் பிள்ளையைத் தேற்றுவதற்காக அவர் எந்த நிபந்தனையையும் மீறத் தயாராகிவிட வேண்டும். எனக்கு வெட்கமாய் இருந்தது. கடைசி நேரத்தில் என் கவனம் கவிதை மீது திரும்பியதால்தான் அப்பாவுக்கு இந்த இக்கட்டு நேர்ந்துவிட்டது.&lt;br /&gt;வரும் வழியெல்லாம் அப்பா என்னை என்னென்னவோ சொல்லி என் சோகத்தை மடைமாற்ற முற்பட்டார். நான் உடைந்த மண்பானையைப் போல ஒட்ட வாய்ப்பே இல்லாது பேருந்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். வீடு வந்து நேர மணி ஆறாகிவிட்டது. அம்மா மகிழ்ச்சியோடு 'கிடைத்துவிட்டதா?' எனக் கேட்டாள்.&lt;br /&gt;'கிடைக்கும்' என்றார் அப்பா.&lt;br /&gt;'கிடைக்கலம்மா' என்று நான் கேவிக்கேவி உடைந்தேன்.&lt;br /&gt;அம்மாவும் தேற்றினாள்.&lt;br /&gt;'வரும் வியாழக்கிழமை போகவேண்டும். அன்று கட்டாயம் கிடைத்துவிடும்' என்றார் அப்பா.&lt;br /&gt;'ஜோசியரிடம் போனேங்க... அவரும் கிடைத்துவிடும் என்றுதான் சொன்னார்' என்றதும் அப்பா காலையில் திரு·று பூசும்போது சிரித்ததைப் போலவே சிரித்தார்.&lt;br /&gt;'ஜோசியம் சமயத்தில் எனக்குச் சாதகமாக அமைந்துவிடுவதால், 'என்னம்மா ஜோசியர் கிடைக்கும்னு சொன்னாரா?' என்றேன்.&lt;br /&gt;அழுகையை மீறி நான் அப்படிக் கேட்டதும் மார்பில் தாங்கிக் கொண்டு, 'கட்டாயம் கிடைக்கும்பா' என்றாள்.&lt;br /&gt;வியாழக்கிழமை கிளம்பினோம்.&lt;br /&gt;-( பயணம் தொடரும)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-8330214224953705716?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/8330214224953705716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=8330214224953705716&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8330214224953705716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8330214224953705716'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_9588.html' title='நடைவண்டி நாட்கள் : பனிரெண்டு'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-956940855433424231</id><published>2008-06-24T04:54:00.000-07:00</published><updated>2008-06-24T05:00:15.648-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: பதினொன்று</title><content type='html'>&lt;strong&gt;நா&lt;/strong&gt;ன் இதற்கு முன் கேள்விப்பட்டிருந்த ஆனால், பார்த்திராத கலவர பூமியாய் சென்னை மாநகரம் மாறிப்போன நாள் அது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதாவின் கைதுக்காக எதிர்கட்சிகளும் பத்திரிகைகளும் செய்தி பரிமாறின. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு. ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுவந்த முன்னாள் முதல்வருக்கு எப்படி இத்தனை கோடி சொத்து சேர்ந்தது? நினைத்தால், அரசியல் சதுரங்கத்தில் மக்கள் வெட்டுப்படும் போதெல்லாம் காய்கள் நகர்த்தப்படுகின்றன.பாலாவோடு அன்று வித்யாசங்கரை சந்திக்க வைத்திருந்த திட்டத்தை சரவணன் மீண்டும் நினைவுபடுத்திக் கிளம்பச் சொன்னான். ஊரே அமளி துமளி பட்டாலும் கூட எங்களுக்கு எங்கள் பிரச்சனை. சொத்து சேர்த்த வழக்கு ஒருவர் மீது தொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகையில் இன்னொரு புறம் சோத்துக்கு வழியில்லாமல் வாழும் ஒருவனின் பிரச்சனை. நடந்தே போய்விடலாம் என்றான் பாலா. அலுவலகம் தி.நகரில் இருந்தது.நாங்கள் போய்ச்சேர்ந்த போது தி.நகரில் உள்ள கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அமைதி, அச்சத்தால் வரவழைக்கப்பட்டிருந்தது. பெரிய பெரிய கடைகள். வியாபார மையமாக இன்று மாறியிருக்கிற தி.நகர் அப்போதுதான் வளர்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்த தருணம். ஊரே மூடப்பட்டிருக்கையில் 'ராஜரிஷி' அலுவலகம் திறந்திருக்குமா என்றேன் பாலாவிடம். அது, பத்திரிகை அலுவலகம். இம்மாதிரியான நேரங்கள் தானே அவர்களுக்கு முக்கியம். எனவே, கண்டிப்பாக திறந்திருக்கும் என்றான்.ராஜரிஷி அலுவலகம், ஒரு குறுகலான சந்தில் முதல் கட்டிடத்தின் மேல்தளத்தில் அமைந்திருந்தது. படிக்கட்டுகளில் ஏறும்போது கொஞ்சம் படபடப்பாகவும் நடுக்கமாகவும் இருந்தது. வரவேற்பறையில் ஆசிரியரைச் சந்திக்க விரும்புவதாக கூறினோம். காத்திருக்கச் சொன்னார்கள். அழைப்பு வந்ததும் உள்ளே போனால் கண்ணாடிக் கூண்டுக்குள் வித்யாசங்கர்.'சந்நதம்' நூல் பின்னட்டையில் ஏற்கனவே நான் பலமுறை பார்த்திருந்த பரவச முகம். முகம் தெளிந்திருந்தது. லேசான் தாடி. நரைகள் ஆங்காங்கே பூத்திருந்தன. ஏறு நெற்றி. புன்னகை சிதற வரவேற்றார். சின்ன அறிமுகம்.பின் என் கையில் இருந்த கவிதை ஆல்பத்தை நீட்டினேன். பரபரப்பில்லாமல் பக்கம் பக்கமாகப் புரட்டிக் கொண்டே என் விபரம் முழுக்க விசாரித்தார். எனக்கு அவர் கவிதைகளை அவரிடம் சொல்லிக்காட்டும் ஆர்வம். அவருடைய கவிதைகள் எனக்குள் எறிந்துவிட்டுப் போயிருந்த எறிகுண்டை எப்படியாவது என் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த துடித்தேன். நமக்கு பிடித்த ஒருவரின் எழுத்தை அவரிடமே உட்கார்ந்து பகிர்ந்து கொள்வது தனி இன்பம். தொகுப்பு முழுக்க எனக்கு மனப்பாடம் என்பதால் அத்தனைக் கவிதைகளையும் வரிசைக் கிரமமாக அவரிடம் ஒப்புவித்தேன். அவர், பெரிதாக எந்த உணர்வையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. ஒரு நிலையை எட்டிவிட்ட பிறகு அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் போல. என்ன செய்கிறீர்கள்? என்றார். அக்கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலாமல் தவித்ததைப் புரிந்து கொண்டார். இடையிடையே என் பேச்சிலிருந்தே என்னைப் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கொண்டார்.செய்தித்தாள் பார்த்திருப்பீர்களே! அதைப்பற்றி எழுதிக் கொடுங்கள் என்றார். கைது பற்றித்தான் சொல்கிறார் என உணர்ந்தும், ஆதரித்தா? எதிர்த்தா? என்று கேட்டேன். என் கேள்வி அவரைப் புன்னகைக்க வைத்தது. நாடே ஆதரிக்கும் ஒரு கைதை எப்படி எதிர்த்து சொல்வீர்கள் என்றார். நீண்ட அமைதிக்குப் பின் நம்முடைய பத்திரிகைக்கு என்று ஒரு பாலிஸி இருக்குமே, அதற்காகக் கேட்டேன் என்றேன். சரிதான் என்பது பொல தலையசைத்தார். கண்ணாடிக்கூண்டுக்கு வெளியே இடுங்கலான ஒரு பகுதியில் சின்ன மேஜை போடப்பட்டிருந்தது. பாலாவுக்கு என் முனைப்பும் அவர் உபசரிப்பும் ரொம்பவே பிடித்துப்போனது. நீ எழுது பாரதி, நான் அமர்ந்து கொள்கிறேன் என வரவேற்பறைக்குப் போய் செய்தித்தாள்களைப் புரட்டத் தொடங்கினான்.முதல் முதலாக பத்திரிகை அலுவலகத்தில் உட்கார்ந்து நான் எழுதிய கட்டுரை அது. ஒரு மாபெரும் அரசியல் கட்சித் தலைவரை காத்திரமான சொற்களால் என்னாலும் கண்டிக்க முடிந்தது. எழுத்தினால் சாத்தியமாகும் கோபத்தை வைத்து சமுதாயத்தை அங்குலமேனும் அசைத்து விடமுடியும் என்ற நம்பிக்கையை அந்த எழுத்தும், அந்த மேஜையும் எனக்குள் ஏற்படுத்தின. கட்டுரையை முடித்து அவரிடம் நீட்டினேன். ஒரே மூச்சில் வாசித்து நிமிர்ந்தார். பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பாராட்டுவது போல சின்ன புன்முறுவல் கூட அவரிடமிருந்து வெளிப்படவில்லை. நாளை வருகிறீர்களா! என்று மட்டும் கேட்டார். ஏன் என்று கேட்குமளவுக்கு துணிச்சல் வரவில்லை. சரியென்று தலையசைத்துவிட்டு பாலாவுடன் விடுதிக்குத் திரும்பினேன். பாலாவுக்கும் குழப்பம்தான். எழுதியதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் எதற்காக நாளையும் வரச்சொல்கிறார் என்பது புதிர்மேல் விழுந்த புதிராக இருந்தது. ஆனாலும், பரவாயில்லை பாரதி, அவர் அழைக்கிறார் நாளையும் வருவோம் என்றான். சரவணனிடம் வித்யா சங்கரைப்பற்றி வாயாலேயே விவரணப்படம் எடுத்தேன். இழுத்து விட்ட புகையோடு அவன் சிலாகித்தான். எழுதிய விஷயங்கள் பற்றியும் அரசியல் கட்டுரைகளின் அவசியம் பற்றியும் பேச்சில் ஆழ்ந்து போனான். பாலாவும், எட்வினும், ரகுபதியும் கூட அவர்கள் அறிந்த அரசியல் கட்டுரைகளைப்பற்றி பகிர்ந்து கொண்டார்கள். ஒரு விளக்கிலிருந்து ஓராயிரம் விளக்குகள் கிளைப்பது போல.மறுநாளும் போனோம். அன்றும் செய்தித்தாள்களைக் கையில் கொடுத்து அதே மேஜையில் அமர்த்தினார். அலுவலகப் பையனை அழைத்து தேனீர் கொடுக்கச் சொன்னார். இரண்டாவது சந்திப்பு பெரும்பாலும் நெருக்கத்தை கூட்டிவிடுகிறது. இணக்கமும், உரிமையும் ஏற்கனவே தெரிந்தவர் என்கிற பாவனையும் கூடுதல் மகிழ்ச்சியை நமக்குள் ஏற்படுத்தி விடுகிறது. வழக்கம்போல பாலா செய்தித்தாள்களைப் புரட்டி களைக்கும் நேரத்தில் எழுதி முடித்து வித்யாசங்கரிடம் காட்டிவிட்டேன். ம்... சரியாயிருக்கு, நாளை வாங்க என்றார். அப்போதும் எனக்குள்ள தயக்கத்தில் தலையசைத்தேன். பாலாவுடன் நடந்து விடுதி திரும்புகையில் கலவரம் குறைந்ததற்கான அறிகுறியை திறந்திருந்த கடைகள் காட்டின. பசி, பணமில்லை ஆனாலும் வாழ்வை நகர்த்திவிட இயலும் என்ற நம்பிக்கை முளைத்தது. நம்மை எழுத வைத்து வாங்கிக் கொள்கிறார். உண்மையில், அது பயிற்சியா, பிரசுரத்திற்காக வாங்கிக் கொள்கிறாரா தெரியவில்லை. என்றாலும் அந்த அனுபவம் ருசிகரமானதாகவே இருந்தது.மேஜையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கையில் நமக்காக ஒருவர் தேனீர் கோப்பையை நீட்டுவதும், எழுதிக்கொண்டே ஜாடையில் வைத்து விட்டுப்போங்கள் என்பதும் கூட நன்றாயிருக்கிறது. சமூகத்திற்காக உழைக்கிறோம். எனவே, சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் நம்மால் பயனைடையப் போகிறான் என்பது போன்ற செல்லக் கர்வம் அது. சுந்தரபுத்தன், நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே ஒரு மேன்சனுக்கு குடிபெயர்ந்திருப்பதாகவும், நாமும் அங்கே தங்கிக் கொள்ளலாம் என்று விருப்பம் தெரிவித்ததாகவும் சரவணன் கூறினான்.அம்பேத்கர் விடுதி பழகி விட்டது. நண்பர்கள் அன்பால் செளகர்யப் படுத்திக் கொண்டிருந்தார்கள். எப்பவும் அரட்டை அடிக்க, படித்ததைப் பற்றி விவாதிக்க யாராவது துணையிருப்பதால் மேன்ஷனுக்குப் போகத்தான் வேண்டுமா? என்றேன். இல்லை பாரதி, நாம் தங்கியிருப்பது சட்ட விரோதம். அதாவது, விடுதி சட்டத்திற்கு விரோதமானது. நண்பர்கள் செய்த உதவிக்கு பதில் மரியாதை அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, இடைஞ்சலாகி விடக்கூடாது என்றான். சரவணன் சாதாரணகப் பேசினாலே சரியாகத்தான் பேசுவான்.. அதுவும், சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பேசினால் சொல்ல வேண்டியதில்லை. மேன்ஷனுக்குப் போவதென்றால் பணம் வேண்டுமே.. அதான் யோசனை என்று முகத்தை இறுக்கினான். மறுநாளும் ராஜரிஷிக்குப் போக வேண்டியிருந்தது. வறுமையோடு போராடி வாழ்வைத் தொலைத்து விடுவோமோ என்ற அச்சம் கூடின அந்த நாட்களை என் இதயத்திலிருந்து அழிக்கவே முடியாது. ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்தில் இருந்தும் என்னைச் சந்திக்க வருகிற நிருபர்கள், உதவி ஆசிரியர்கள், என்னுடைய அந்த நாட்களை நினைத்துப்பார்க்க உதவுகிறார்கள். பணக்கஷ்டம் என்ற சொல்லை முழுதாக நானும் சரவணனும் உணர்ந்து விட்டோம். பணம்தான் எங்களிடம் இல்லையே தவிர கஷ்டம் இல்லாமல் இல்லை. பணமும் கஷ்டமும் வேறு வேறு எனப் புரிந்தது. மேன்ஷனுக்கு நகர வேண்டிய கெடுவும் துரத்திக் கொண்டிருந்தது. ராஜரிஷிக்குப் போவதும் தேனீர் குடித்து திரும்புவதுமாக இடையில் பத்து நாள் கழிந்து விட்டது. அலுவலகத்திற்கு நுழையும் போது ஆசிரியர் சந்திக்கச் சொன்னதாக அலுவலகப் பையன் பதட்டத்தோடு கூறினான். உங்களிடம் பேச வேண்டுமென்றான். நானும் பேச வேண்டும் என நினைத்ததைச் சொல்லவில்லை. அலுவலகத்தில் உங்கள் மீது புகார் கூறுகிறார்கள் என்றார். என்ன புகார் என்றேன். நீங்கள் அலுவலகத்தில் அமராமல் உடனே கிளம்பி விடுகிறீர்களாமே என்றார். நான் ஏன் அலுவலகத்தில் அமர வேண்டும் என்பதுபோலப் பார்த்தேன். வேலைக்குச் சேர்ந்த பத்து நாட்களும் இப்படியே இருந்தால் எப்படி? என்றார். நான் வேலைக்குச் சேர்ந்ததாக இப்போதுதானே சொல்கிறீர்கள் என்றேன். சிரித்துக்கொண்டே கை குலுக்கினார். அலுவலகத் தனியறைக்குள் தனியாக நுழைந்தேன். கை அலம்பும் இடத்திலுள்ள கண்ணாடியில் என்னைப் பார்த்து கண்கள் விரிய பெருமிதத்தோடு தலையைக் கோதிக் கொண்டேன்.&lt;br /&gt;(பயணம்தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-956940855433424231?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/956940855433424231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=956940855433424231&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/956940855433424231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/956940855433424231'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_24.html' title='நடைவண்டி நாட்கள்: பதினொன்று'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-7747607328705660080</id><published>2008-06-12T00:38:00.000-07:00</published><updated>2008-06-12T00:45:18.825-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: பத்து</title><content type='html'>&lt;strong&gt;                                          பொ&lt;/strong&gt;துத்தேர்வுக்கூடத்தில் அமர்ந்து வினாத்தாளை வாங்கி, வாசிக்கத் தொடங்கியதில் இருந்து என்னை எனக்குப் பிடிக்காமல் போனது. கவிதை மீது அல்லது கலைகள் மீதுமாணவப்பருவத்தில் ஆர்வம் செலுத்துபவர்கள் படிப்பில் கோட்டை விட்டுவிடுவார்களென்று சொல்ல்வதைக் காலம் மீண்டும் ஒருமுறை  என்னை நிரூபித்துக் கொள்ளுமோ என்று தோன்றியது&lt;br /&gt;ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் பேரமைதி. காகிதங்கள் புரட்டுப்படும் சரக் சரக் ஓசை. இன்னும் கொஞ்சம் உற்றுக் கேட்டால் இதயத்தின் லப்டப் எகிறும் இரைச்சலைக்உணரலாம். அந்தக் கூடம் நீளமாகவும் விஸ்தாரமாகவும் இருந்தது. முன்வரிசையின்இடது ஓரத்தில் என் இருக்கையும் வலது ஓரத்தில் என்னைப் போலவேஇன்னொருவனின் இருக்கையும் அமைத்திருந்தன.அந்த இன்னொருவனும் என்னைப்போலவே வெகுநேரமாக வினாத்தாளை உற்றுப்பார்த்து மேல்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;அந்த இருக்கை,ஜன்னலோரத்தில் கிடத்தப்பட்டிருந்தது.ஜன்னலைத் தொட்டுக்கொள்ளும்படி புங்கமரமும் வேறொரு மரமும் காற்றை உமிழ்ந்து கொண்டிருந்தன.விட்டும் விடாமலும் மரத்தில் குந்தியிருந்த குயில்கள் மறந்துபோன பாடலை கிறீச்சிட்டன.அந்தக் கிறீச்சிடலின் ஓசை ரசிக்கும்படியில்லை.கத்தும் குயிலோசை காதில் குத்தல் எடுக்கிறது என பாரதி சொல்லியதைப்போல குயில்களின்பாடல்கள் எரிச்சலூட்டின.&lt;br /&gt;தெரிந்த பதில்களைக் கொஞ்சம் போல கிறுக்கத் தொடங்கியதும் அதிகாலை சம்பவம்மெல்ல விலகுவதாகப்பட்டது.மீண்டும் சகஜ நிலைக்கு வந்துவிட இயலும் போலவே தோன்றியது.முதல் மணி அடித்தது.மூன்றாவது மணி அடித்தால் தேர்வு நேரம் முடிவதாக அர்த்தம்.அதன்பிறகும் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் விடைத்தாளை ஆசிரியர்கள் பலவந்தமாக பிடுங்க நேர்வதும் உண்டுதான்.&lt;br /&gt;வருடத்தில் ஏனைய நாள்களில் படிப்பதை விடவும் தேர்வுக்கு முன்வாரங்களில் படிப்பது தேர்வுக்கு உதவி புரியும் என்பதை நான் அறியாதவனல்ல.ஆனாலும்,ஏதோ ஒரு அலட்சியம் என்னில் கடந்த சில வாரங்களாகத் தத்து கொண்டிருந்தது.வகுப்பில் கூட எனக்கு கிடைத்த வெளிச்சம் கவிதை எழுதுவதற்கு பாதி என்றால் மீதம் என் படிப்புக்காக என்பதை ஏனோ மறந்துபோயிக்கிறேன். எனக்கு முன்னால் கவிதை மீது ஆர்வம் கொண்டிருந்த்வர்களையும் இப்படியான அலட்சியம் அல்லது மறதிதான் காயப்பட்டுத்தியதோ தெரியவில்லை.என் சூழல் எனக்களித்த உற்சாகத்தையும் தைரியத்தையும் இந்தப் பொது தேர்வு பொய்யாக்கி விடுமோ என்று உள்ளுக்குள்உதறலெடுத்தது.முதல் மணி அடித்த பிறகு மாணவர்களுக்கு தண்ணீர் வழங்குவார்கள்.ஆசிரியர்களுக்கு தேநீர்த் தரப்படும்.&lt;br /&gt;எல்லாப் பள்ளியிலும் இந்த நடைமுறையில்லை,எங்கள் பள்ளியில் தண்ணீரும் கிடையாது.தேநீரும் கிடையாது.இப்போது தேர்வெழுதும் பள்ளி அரசினர் பள்ளிஎன்பதால் இந்த நடைமுறை புதிதாகப்பட்டது.தண்ணீர் வாளியைத் தூக்கிக்கொண்டு ஒரு வயதானவர் கூடத்துக்கு உள்ளே நுழைந்தார்.கையில் பிளாஸ்டிக் கோப்பைகள்.வேட்டி கட்டும் பழக்கமுடையவர்.சட்டை கசங்கியிருந்தது.தோளில் நாலாக மடித்து கிடத்தப்பட்ட காடாத் துண்டு.&lt;br /&gt;தண்ணீர் கொடுக்க வந்தவரின் கண்கள் இயல்பாக இல்லை. சுழன்றுகொண்டிருந்தன.கலங்கரை விளக்கு போல என வசதிக்காக உவமை கூறலாம்.முன்வரிசையில் நான் இருப்பதால் என்னில் இருந்தே அவர் தண்ணீர் உபசரிப்பை தொடங்கும்படியாயிற்று.&lt;br /&gt;கோப்பையை நீட்டியபடி குமாரா? என்றார்.ஆம், என்றேன். வீட்டில் என்னை குமாரென்றே அழைப்பார்கள்.எனவே குமாரா என்றதும் என் தலை அனிச்சையாய் அசைந்து உதடு ஆம் சொல்லிற்று.வாளியைக் கீழே வைத்துவிட்டு நீரை கோப்பையில் அள்ளுவது போல குனிந்து இடுப்பில் பதினாறாக மடித்து வைத்திருந்த காகிதத்தை டொப்பென்று என் மேசையில் எறிந்தார்.நான் நிமிர்வதற்குள் பின் இருக்கைக்குப் போய்விட்டார்.&lt;br /&gt;எனக்கு பயமும் நடுக்கமும் பரவ, முகம் இறுகி வேர்க்க ஆரம்பித்தது.கூடத்தை திருப்பிப் பார்த்தேன். தேநீர் குடிக்க போன ஆசிரியர்கள் திரும்பியிருக்கவில்லை.காகிதத்தைப் பிரித்துப்பார்க்க கை சில்லிட்டது.முதல் காதல் கடித்ததைப் பிரிப்பதுபார்க்கையில் எப்படி இருக்குமோ அதுமாதியாயென்று வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் கற்பனைக்கு வேறு மாதிரி எதையாவது யூகித்துக் கொள்ளுங்கள், அந்த நொடியை எப்படி விவரிப்பது?&lt;br /&gt;காகிதத்தில் சின்ன சின்ன எழுத்தில் ஒருவரி பதில்கள்.பொது தேர்வில் நாற்பது மதிப்பெண் வாங்கினால் தேர்ச்சி பெற்றுவிடலாம்.அக்காகிதம் நான் தேர்ச்சி பெறுவதற்கான பதில்களை கொண்டிருந்தது.இதற்கு முன்புவரை பிட் அடித்து பழக்கவில்லையாததால், என் சட்டையின் பின்பகுதி தொப்பலாக நனைவதைதவிர்க்க முடியவில்லை.முதுகு பகுதியில் யாரோ தட்டுவதை போல பிரமை ஏற்பட்டது.அத்தனை இக்கட்டிலும் காகிதத்தை பிரித்து வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருந்த விடைகளை ஏற்கனவே நான் எழுதியிருந்த விடைகளோடு ஒப்பிட்ட போதுதான் தெரிந்தன எழுதியிருந்ததில் பெரும்பகுதி பிழையானவையென்று. அவசர அவசரமாக சரி செய்தேன். வலது ஓரத்தில் அமர்ந்திருந்தவன் என்னை முறைத்துக் கொண்டிருந்தான்.துண்டு காகிதத்தைத் தன்னிடம் தர ஜாடையில் மிரட்டினான்.அவன் ஜாடை ஆசிரியரிடம் என்னை காட்டிக் கொடுத்துவிடும் போல எச்சரிக்கை தொனியைவெளிப்படுத்திற்று.வயதானவர் கூடத்தின் நடுவில் நின்றிருந்தார்.&lt;br /&gt;நொடிகள் அச்சத்தோடும் அதீத கவலையோடும் விரைந்து கொண்டிருக்கையில் நடுவில் நின்றிருந்த வயதானவர் மீண்டும் என்னை நோக்கி வருவது தெரிந்தது. முன்வரிசைக்கு வந்து என்னிடம் இருந்த துண்டுக் காகிதத்தை வெகு இயல்பாக வாங்கிக் கொண்டு வலது ஓரத்தில் இருந்து தண்ணீரைக் கொடுக்க ஆரம்பித்தார். யாவும் சில நிமிடங்களில் முடிந்தன. புங்கமரக் காற்றில் என் சட்டை உலரத் தொடங்கியது. குயில்கள் ரசிக்கும்படி பாடல்களை எழுப்பின.&lt;br /&gt;தேனீர் குடித்துவிட்டு ஆசிரியர்கள் கூடத்திற்குள் நுழைந்தார்கள். கூடம் முழுக்க தண்ணீரைக் கொடுத்துவிட்டு துண்டுக் காகிதத்தை வைத்திருந்த வயதானவர் வெளியேறினார். மீண்டும் நிசப்தம் இரண்டாவது மணியடித்தது. வலது ஓரத்தில் எழுதிக்கொண்டிருந்தவன் விடைத்தாளை அப்படியே வைத்துவிட்டு யார் அனுமதியும் கோராமல் விருட்டென்று புறப்பட்டான். மூன்றாவது மணி அடிக்கும் வரை காத்திருந்து, எழுதியவற்றை நிதானமாக சரிபார்த்துவிட்டு வெளியே வந்தபோது வலது ஓரத்தில் அமர்ந்திருந்தவன் தண்ணீர் கொடுத்தவரை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான். அவனோடு நாலைந்து பேர் சூழ்ந்திருந்தார்கள். கடுமையான வார்த்தைகள், பெரியவரைக் குறுக வைத்தன.&lt;br /&gt;“காசை வாங்கி விட்டு கவுத்திட்டியேடா” என்பது போன்ற மரியாதைக் குறைச்சலாக பெரியவரை அவர்கள் நடத்தினார்கள். நான் பிரேம்குமார். அவன் பிரதீப்குமார். இரண்டு பேரும் குமாராகவே வீட்டில் அழைக்கப்படுகிறவர்கள். அவன் தனிப்பயிற்சிப் பள்ளி மூலம் தேர்வெழுத வந்திருந்தவன். ஏற்கனவே விடுபட்ட பாடத்தை எழுதி இம்முறையாவது தேர்ச்சி பெறாலாமென கருதியிருப்பான் போல, அதற்காக பெரியவருக்குப் பணம் கொடுத்து ‘பிட்’டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறான். தனிப்பயிற்சிப் பள்ளி நடத்துபவர்கள், தேர்வு ஆரம்பித்ததும் வெளியில் இருந்து பதில்களை எழுதி தண்ணீர் இடைவெளியில் முதியவரிடம் கொடுத்தனுப்பியருக்கிறார்கள். உள்ளே எழுதிக் கொண்டிருப்பவனைப் பெரியவருக்குத் தெரியாததால், பிரதீப்குமாருக்குச் சேரவேணிடிய துண்டுக் காகிதம் பிரேம்குமாருக்கு வந்து விட்டது. இப்போது பிரேம்குமார் அதிர்ஷ்டக்காரனாகவும், பிரதீப்குமார் துரதிர்ஷ்டக்காரனாகவும் போய்விட நேர்ந்து விட்டது.&lt;br /&gt;எத்தனை முயன்றும் சிலர் தங்கள் வாழ்வை எதிர்கொள்வதில் கோட்டை விட்டு விடுகிறார்கள். சிலர் எதுவும் முயலாமலேயே வாழ்வை இயல்பாக வெற்றி கொண்டுவிடுகிறாரகள். எனக்குப் பெரியவரையோ, ‘பிட்’டடிக்க ஏற்பாடு செய்பவர்களையோ தெரிந்திருக்கவில்லை. ஆனால், இத்தனையும் தெரிந்திருந்த பிரதீப்குமாருக்கு ஏனோ காலம் உதவி செய்ய யோசித்து விட்டது. தேர்வை வெற்றிகரமாக எழுதிவிட்ட திருப்தி இன்றும் எனக்கு ஏற்படுவதில்லை. அதிகாலையில் கவிதை எழுதிவிட்டு பரிட்சைக்கு வந்தவனுக்கு காலம் செய்த உதவியாகவே கருதிக் கொள்வேன். கவிதை என்னை தேர்வுக்கூடத்தில் இருந்தும் எளிதாக தப்பிக்க வைத்தது. நன்றாகப் படித்து என்பதைக் காட்டிலும், நன்றாக அடித்து தேர்ச்சி பெற்றுவிட எனக்கு யார் உதவினார்கள்! தனிப்பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்களா, தண்ணீர் கொடுக்க வந்த பெரியவரா, இல்லை.. என் அம்மாவின் பிரார்த்தனை, அப்பாவின் கருணை, ஆசிரியர்களின் நம்பிக்கை.&lt;br /&gt;கூடத்தில் இருந்து வெளியே வந்த என்னை, வலது ஓரத்தில் இருந்தவன் அடையாளம் கண்டுகொண்டு விரட்டத் தொடங்கினான். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு கண்ணாடி குத்தி காயப்பட்டிருந்த என் கால்கள் உதவவில்லை. ஆனாலும், நகரத்தின் மையத்தில் இருந்து வெகுண்டு ஓடி அரண்மனை வளாகத்திற்குள் பதுங்கினேன். அவர்கள் விரட்டிக்கொண்டே தொடர்ந்தார்கள்.&lt;br /&gt;(பயணம் தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-7747607328705660080?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/7747607328705660080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=7747607328705660080&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/7747607328705660080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/7747607328705660080'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_914.html' title='நடைவண்டி நாட்கள்: பத்து'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-8530955667981972435</id><published>2008-06-12T00:35:00.000-07:00</published><updated>2008-06-12T00:37:12.900-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: ஒன்பது</title><content type='html'>&lt;strong&gt;தி&lt;/strong&gt;ருமண மண்டபத்தில் இருந்து மிதந்து வரும் பாட்டுக்கள், கவலையை குறைப்பதற்கு உதவியதைப்போல மகிழ்ச்சியை அதிகப்படுத்தவும் உதவியிருக்கின்றன. பல நாள்கள் அப்பாடல்களின் கேட்பில் பசியடங்கி உறங்கிப் போயிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வறுமை தள்ளாட வைத்தது. பகல்பொழுதில் சரவணன் கல்லூரி நணபர்களோடு சென்று விடுவதால் நான் கவிதை ஆல்பத்தை தூக்கிக் கொண்டு வேலைக்காக அலையத் தொடங்கினேன். வேலை கிடைத்தாலன்றி மேலும் சென்னையில் வாழ்வைத் தொடர முடியாது என்றாகிவிட்டது. கவிதைக்குப் பத்திரிகை அலுவலகங்களில் வேலை கிடைக்காது எனத் தெரிந்தும் வேறு வழியறியாமல் திணறிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை வெகு நேரமாகியும் சரவணன் வரவில்லை. யாரிடமாவது பணம் பெற்று வருவதாகச் சொல்லியிருந்தான்.  பாலாவும் எட்வினும் ஏதோ ஊரில் விசேசமென்று போய் மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அறையில் என்னுடன் பழனியாப்பிள்ளை மட்டும் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தான். மனம் சும்மாயிருந்தாலும் வயிறு சும்மாயிருப்பதில்லை. இன்றும் நான் பசியோடு கிடக்கும் அவஸ்தையைப் பற்றி எழுதுவதற்கு அந்நாள்கள் உதவிவருகின்றன. உடம்பு முழுக்க சோர்வு அப்பிக்கொண்டது. காலையில் இருந்து சென்னை நகரை குறுக்கும் நெடுக்குமாக தனித்து நடந்ததூன் பாக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;சில பத்திரிகை அலுவலகங்களில் அன்பின் காரணமாக வருகிறவர்களுக்கு தரப்படும் இலவச தேநீரும், தண்ணீரும் தவிர வயிறு வேறெதையும் எடுத்துக்கொள்வில்லை. மனசு  சவால்களை எதிர்கொள்வதில் திருப்தி அடைந்து விடுகிறது. ஆனால்,வயிறு அப்படியில்லையே! வயிறு கருணையற்றது. நிலைமை புரியாமல் நிம்மதி பறிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;பழனியாப்பிள்ளை அறைக்கு வந்த என்னை கவனித்து விட்டு. மீண்டும் படிப்பில் மும்முரமானான். மணி எட்டோ ஒன்பதோ இருக்கலாம.; சரவணன் வரவில்லையா என்று கேட்டான். என்னுடனே சரவணன் பெரும்பாலும் இருப்பதால் அப்படிக் கேட்டிருக்கலாம். இல்லை என்று சொல்லி விட்டு படுத்துக்கொள்ளப் போனேன். என்ன தோழரே உடம்புக்கு ஆகலையா என்றான். மெல்லத் தலையசைத்து விட்டு கொஞ்சம் அசதி என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படுத்துக்கொள்வதென்றால் அம்சதூளிகா மஞ்சத்தில் படுத்துக் கொள்வது போலல்ல. இலவம் பஞ்சு மெத்தையில் இரு கால்களையும் செம்மாந்து நீட்டி படுத்துக் கொள்வது போலல்ல. கோரைப் பாயில் படுத்துக்கொள்வது போலல்ல. வெறும் படுக்கை. செய்தித்தாளை விரித்தோ அல்லது பழைய துண்டை விரித்தோதான் படுக்க வேண்டும். வெளியே மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. அரசு விடுதியின் அத்தனை சுவர்களும் ஈரம் பூத்தன.. ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கிப் போயிருந்த படியால் சாரல் அறைந்தது. குளிர் ஊசியாய் உடம்பில் இறங்கியது. அறைக்குள்ளும் மழை வீச்சமெடுத்தது. பழனியாப்பிள்ளை புத்தகத்தை மூடிவைத்துவிட்டு என்னோடு மழை பார்க்கத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மழையை நான் முதல்முதலாக வெறுத்தது அப்போதுதான். ஒரு நடைபாதைவாசி மழையை என்னென்ன கெட்வார்த்தையில் திட்டுவானோ? அதை நிகர்த்த அல்லது அதற்கு மேலான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு  மழையைச் சபித்தேன். இத்தனைக்கும் மழையை நம்பிய விவசாய பூமியில் இருந்து வந்தவன் நான். “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்ற மழைப்பதிகம் பாடவேண்டிய கவிமனம் வேதனையால் வெதும்பிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;பழனியாப்பிள்ளை என் பசி முகத்தை உணர்;ந்து கொண்டான் போல எனக்கு உணவு தர வேண்டும் எனத்தோன்றியும் அடிக்கும் கடுமழையில் கடைக்குப்போய் எதுவும் வாங்கிவர இயலாத நிலை. விடுதியில் ஒரு விநோதப் பழக்கம் உண்டு. அதாவது, தங்கியிருக்கும் மாணவர்கள் எதன்பொருட்டாவது வெளியே போயிருந்தால் அவர்களுக்காக அறையில் இருக்கும் மாணவர்கள் மெஸ் காலில் இருந்து உணவு வாங்கி வைப்பார்கள். குளியல் வாளியில் சாதத்தையும் குழம்பை மக்கிலும் வாங்கி வைப்பார்கள். கூட்டு இதர இத்தியாதிகளை சாதத்திற்கு மேலோ அல்லது சாதத்தை ஒதுக்கியோ வாங்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் சரவணனும் அந்த உணவைத் தவிர்த்து வந்தோம். கையில் கொஞ்சம்போலிருந்த பணத்தில் ஒருவேளையோ,இருவேளையோ கையேந்திபவனில் உண்டு வந்தோம். கையேந்திபவன் என்றால் வேறொன்றுமில்லை, தள்ளுவண்டியில் வைத்துவிற்கப்படும் உணவு. மீன்குழம்பு, கோழிக்குழம்பு என்று இரண்டொரு மாமிசத் துண்டுகளோடு தரப்படும் உணவின் விலை அப்போது எட்டே ரூபாய்தான். &lt;br /&gt;&lt;br /&gt;பழனியாப்பிள்ளை படிப்பில் கவனம் செலுத்தியதால் உணவு வாங்கி வைக்க மறந்து போயிருந்தான். இருந்தும், வாளியையும் மக்கiயும் கையில் எடுத்துக்கொண்டு மற்ற மற்ற அறையில் வாங்கி வைக்கப்பட்டிருக்கும் உணவில் கொஞ்சம் இரவல் கேட்டுவரப் போனான். ஒவ்வொரு அறையிலும் மீதப்பட்ட உணவை வாங்கி வந்து குளித்தட்டில் வைத்து என்னிடம் நீட்டினான். எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. பிச்சைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட என ;வாழ்வையும் துயரையும் நினைத்து வெகுநேரம் அரற்றினேன். சரவணன் வரவில்லை பழணியாப்பிள்ளை என்னைத்தேற்றுவதில் நேரத்தை இழக்கவேண்டியிருந்தது. பரீட்சைக்குத் தயாராக வேண்டிய சூழலில் எனக்காகப் பரிந்தும் ஆறுதலாகவும் இருக்கவேண்டிய கட்டாயத்தில் உழன்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு செல்லவில்லை. பசி அறவே மரத்துப்போனது. பின் மழை எப்போது விட்டது? எப்போது தூங்கினேன்? என்பது நினைவிலில்லை. அறையில் ஒரு ஓரமாய் ஈரம் கசியாத இடத்தில் படுத்துக்கிடந்தேன். எழுந்தபோது நன்றாக விடிந்திருந்தது. நண்பர்கள் அறைமுழுக்க வழிந்தார்கள். பாலாவும் எட்வினும் வந்திருந்தார்கள். சரவணன் முகம் மழித்துக்கொண்டிருந்தான். தன் கல்லூரித்தோழர் ஒருவர் நூறு ரூபாய் கடன் கொடுத்ததாகச் சொல்லியபடி முழுதும் மழிப்பதற்குள் 90 ரூபாயைக் கையில் திணித்தான். அலமாரியில் கிடந்த என் சட்டையை எடுத்தப்போய அயர்ன் செய்து வைத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாவும் நானும் கவிஞர் வித்யா~ங்கரை சந்திப்பதாக திட்டம். வித்யா~ங்கர்  என் ஆதர்ச கவிஞர்களில் ஒருவர். “சந்நதம்” கவிதைத் தொகுப்பு மூலம் என்னை வெகுவாகக் கவர்ந்தவர். நக்கீரன் புலனாய்வு வார இதழில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவர். நக்கீரனின் முதல் ஆசரியர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. புலவர் செல்லகணேசன் வீட்டில் வைத்து, அவர் தொகுப்பை வாசித்திருந்தேன். முதல் வாசிப்பிலேயே அந்தப் புத்தகம் போல வேறோரு புத்தகம் என்னைக் கவர்ந்ததில்லை. என்றேனும் சென்னைக்குப்போனால் வித்யா~ங்கரை சந்திக்க வேண்டும் என் நினைத்திருந்தேன். மழை மீண்டும் தூற ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாவுக்கு வித்யாசங்கர் தற்போது பணிபுரியும் பத்திரிகை அலுவலகம் தெரிந்திருந்தது. பாலாவுக்கு அண்ணன் அறிவுமதி மூலம், பலரும் அறிமுகமாகியிருந்தார்கள். அண்ணன் அறிவுமதி அறைக்கு எங்களைக் கூட்;டிக்கொண்டு போனதும் பாலாதான். அங்குதான் பழனிபாரதியை முத்துக்குமாரை வாசனை கபிலனை சீமானை தப+ சங்கரை செல்வபாரதியை சுந்தர்.சியை  நான் சந்தித்தேன். வாசன் தஞ்சாவூரில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருந்தபடியாலும் தமிழ்த்தாய் இலக்கியப் பேரவையில் கலந்து கொண்டு கவிதை வாசித்ததாலும் முன்னமே அpறமுகம். கவிஞர் வாசன்தான் அப்போது தமிழ்த்திரை உலகின் முன்னணிப் பாடலாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவாலும் தேவாவாலும் அதிகம் விரும்பப்படுகிற பாடலாசிரியராக இருந்தார். புன்னகையோடு வாசன் நடந்து வரும் அழகும் எளிதாக மெட்டுக்கு வார்த்தைகளை இட்டு நிரப்பும் விதமும் யாரையும் கவர்ந்துவிடும் என்பார்கள். முத்துக்குமார், அண்ணனிடம் பயிற்சியில் இருந்தார். அண்ணன் அறிவுமதி பரந்துபட்ட உறவுகளின் வேடந்தாங்கல். யாரையும் கையிலேந்தி அன்பு செலுத்தும்  ஆண்தாய். உணவுப் பொட்டலத்தில் இருந்து கவிதைப் புத்தகங்கள் வரை எதையும் பகிர்ந்து கொடுத்தே பழக்கப்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை விடாது போலிருந்தது. விடுதியிலேயே பேசிக்கொண்டிருந்தோம். முதல் நாள் வறுமை, வாங்கி வந்த நூறு ரூபாயில் செழுமையாகிவிட்டது. சரவணன் சிகரட்டை விரும்பிப் புகைத்தான். ரகுபதிக்கு டி.ராஜேந்தர் மாதிரிப்பேசுவதில் தனித்திறமை உண்டு. ரகுபதியைப் பேசவைத்து ரசித்துக்கொண்டிருந்தோம். ரகுபதி எம்பில் முடித்து பி.எச்.டிக்கு தயாராகிக்க கொண்டிருந்தார். எனி;னும் சினிமாவில் வரவேண்டும் என்பதே அவர் ஆசையாய் இருந்தது. மழைவிட்டபாடில்லை  வித்யா~ங்கரை நாளை பார்ப்போம் என ஒத்திவைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் முடிந்தது. விடிந்தபோது ஊரே கலவரப்பட்டுக்கொண்டிருந்தது. ஆங்காங்கே கொடிக்கம்பங்கள் சாய்ந்தன. பேரூந்துகள் எரிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;(பயணம் தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-8530955667981972435?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/8530955667981972435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=8530955667981972435&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8530955667981972435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8530955667981972435'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_12.html' title='நடைவண்டி நாட்கள்: ஒன்பது'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-294258248272536587</id><published>2008-06-10T22:43:00.000-07:00</published><updated>2008-06-10T22:46:07.609-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்:எட்டு</title><content type='html'>&lt;strong&gt;ம&lt;/strong&gt;ணிசேகரன் சார், கணக்குப் பாடம் நடத்துகிறவராக இருந்தபோதும், தமிழாசிரியர் நாகேந்திரன் ஐயாவின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக அறியப்பட்டார்.&lt;br /&gt;இரண்டு பேரும் மாணவர்கள் மத்தியில் புகழ் வாய்ந்தவர்கள். அவர்களுடைய வகுப்பு என்றால், சோர்வு தட்டாது என்று உற்சாகமிவிடுவார்கள்.&lt;br /&gt;பாடத்தை முதல் கால்மணி நேரத்திலேயே முடித்துவிட்டு, மீதமுள்ள நேரத்தில் கலை, இலக்கியம் என்று எங்களை சந்தோஷப்படுத்துவார்கள். அவரவர் படித்த விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான வெளியை இரண்டு ஆசிரியர்களும் ஏற்படுத்தி இருந்ததால், இதர ஆசிரியர் வகுப்பிலும் அதே மாதிரியான சுதந்திரத்தை மாணவர்கள் எதிர்பார்த்தார்கள்.&lt;br /&gt;பள்ளி தாளாளர் என் அப்பாவை வந்து பார்க்கச் சொன்ன சேதி, பள்ளிக்கூடம் முழுக்க பரவிவிட்டது. நாங்கள் பயந்ததுபோல, மணிசேகரன் சாருக்கு மெமோவோ பணி·க்கமோ கிடைக்கவில்லை. எப்போதும்போல் அவர் சிரித்துக்கொண்டே வகுப்பறைக்கு வந்தார்.&lt;br /&gt;அப்பாவிடம் தாளாளர் வரச்சொன்னதை அச்சம் கலந்த குரலில் தெரிவித்தேன். ஏதாவது தப்பு செய்தாயா? என்பதுபோல் இருந்தது அப்பாவின் பார்வை.&lt;br /&gt;அப்பாவின் கண்கள் தீட்சண்யம் நிரம்பியவை. எளிதில் யாரையும் சரண் அடைய வைத்துவிடும். அவர் கண்களைப் பார்க்காமல் சொல்லிவிட்டு, வராண்டாவுக்கு ஓடிப்போய்விட்டேன்.&lt;br /&gt;அம்மாவுக்கு தாளாளர் கூப்பிட்டிருப்பது என்ன காரணத்துக்காக என்று அறிந்து கொள்வதில் இருந்த கூடுதல் ஆர்வம் என்னைக் கோபப்படுத்தியது. நான் தவறு செய்ததால் அழைத்திருப்பார் போல என்பதாக அம்மாவின் கேள்விகள் அமைந்திருந்ததால் என் கோபம் அம்மாவையும் கோபப்படுத்தியது.&lt;br /&gt;அடிவாங்கிப் பழக்கமில்லை. ஆனால், அந்த நாள் அடிவாங்குவதற்கான தயாரிப்புகள் நிறைந்ததாய் தோன்றியது.&lt;br /&gt;காலை என்னுடனேயே அப்பா பள்ளிக்கு வந்தார், என்னை வகுப்பறைக்குப் போகச் சொல்லிவிட்டு, தாளாளர் அறைக்கு அப்பா போய்விட்டார். காலை வகுப்புகளில் கவனம் குவியவில்லை. அப்பா விடைபெற்றுப் போய்விட்டாரா என்று முதல் இரு வகுப்புகள் முடிந்ததும் விடப்படும் சிறிய இடைவேளையில் வந்து எட்டிப் பார்த்தேன்.&lt;br /&gt;தாளாளரும் அப்பாவும் கண்ணாடிக் கதவுக்குள் இருந்து பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. பிறகு அப்பா வீட்டுக்குக் கிளம்பிய விவரத்தை தாளாளர் அறைக்குப் பக்கத்து அறையில் இருக்கும் டேவிட் மாஸ்டரிடம் கேட்டுக் கொண்டேன்.&lt;br /&gt;மதிய உணவு இடைவேளையில் அப்பா வந்துவிட்டுப் போனதுபற்றி வகுப்பு தோழர்கள் பகடி பண்ணினார்கள். வீட்டுக்குப் போனதும் முதுகில் விழப்போகிறது என்றார்கள்.&lt;br /&gt;நாளை வந்து முதுகை காட்டு. காயத்தை எண்ணிச் சொல்கிறோம் என்றார்கள்.&lt;br /&gt;எனக்கு அவர்கள் பேசுவது எரிச்சலூட்டவே அங்கிருந்து வேறோரு தனித்த இடத்துக்குப் போய்விட்டேன். கவிதை எழுதி வகுப்பறையில் பாராட்டுதானே வாங்கினேன்? பள்ளிக்கூட வயதில் கவிதை எழுதுவது கூடாத செயலா? என்றெல்லாம் யோசித்து, கவிதை பாம்பு என்னைக் கொத்திவிடுமோ என்று அஞ்சினேன்.&lt;br /&gt;மாலை வீட்டுக்கு விதிர்விதிர்த்த கண்களோடு வாசலை எட்டும்போது அம்மா ஓடிவந்து கட்டியணைத்து முத்தமிட்டாள். அப்படியொரு முத்தத்தை இதற்கு முன்னோ பின்னோ அவள் வழங்கவில்லை என்பது மட்டும் நினைவில் இருக்கிறது.&lt;br /&gt;அப்பா, தாளாளரைப் பார்க்க வந்ததும், அதன் பின் நடந்த காரியங்களும் ஒரு முத்தத்தை தந்திருக்கிறது. ஆனால், அந்த முத்தத்தின் பொருளை அம்மா எனக்கு சொல்லவே இல்லை.&lt;br /&gt;žனு அண்ணனின் விஜயத்திற்குப் பிறகு தெரியவரும் என நானும் கேட்கவில்லை.&lt;br /&gt;"வேறு மாணவர்களிடம் இல்லாத தனித்திறமை உங்கள் மகனிடம் இருக்கிறது. ஆங்கிலப் பள்ளியில் படித்தாலும் அவனுக்கு தமிழ்க் கவிதைகளில் ஈடுபாடு வந்திருப்பது நல்ல விஷயம். படிப்பிலும் அவன் சோடையில்லை. எனவே வீட்டில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லி அவனைக் கண்டிக்க வேண்டாம். அவன் இயல்பிலேயே நல்ல மாணவன். நல்ல கவிஞனாகவும் வரக்கூடும். என் ஆசை அவனுக்கு எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக வீட்டுச் சூழலை வைத்துக் கொள்ளுங்கள்."&lt;br /&gt;இதுதான் தாளாளர் அப்பாவிடம் சொல்லி அனுப்பியது.&lt;br /&gt;நான் முன்பே சொல்லியதுபோல, வேறொரு கவிஞனுக்கு இப்படியான சூழல் வாய்த்திருக்காது. தாளாளர் தொடங்கி தகப்பனார் வரை எல்லோரும் என் கவிதை ஆர்வத்தை வளர்த்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் என் கவிதைக்கு கேடு வராதபடி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;இப்பவும் நான் நெகிழ்ந்து போகும் சம்பவங்களில் ஒன்றாக தாளாளரின் அணுகுமுறையைத்தான் கருதுகிறேன். என் எல்லா வெற்றிக்கும் முதல் காரணமாகக்கூட அவரை வணங்குகிறேன்.&lt;br /&gt;ஹாரின் எனும் பெயரை உடைய அவரைப் பற்றி தஞ்சை மாவட்டத்தில் இன்றும் பலர் பேசிக் கொண்டிருப்பதற்கு காரணம் அவருடைய இப்படியான நடவடிக்கைகள்தான். அந்தப் பள்ளியை குறிப்பிடத்தக்க பள்ளியாக்கிய பெருமை அவரையே சாரும்.&lt;br /&gt;பள்ளியில் நடைபெறும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் ஹாரிஸ் சார் முன்னிலையில் என் கவிதை அரங்கேறும். அவர் பேச வரும்போது என் கவிதையை உதாரணம் காட்டி பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார். என் பேச்சில் அல்லது கவிதையில் உதாரணம் காட்டும் பகுதிகள் இல்லையென்றாலும் கூட என்னை தவறாமல் பாராட்டுவது போல தன் பேச்சை அமைத்துக் கொள்வார்.&lt;br /&gt;மூளையில் சலங்கை கட்டிவிட்டதுபோல இருக்கும்.&lt;br /&gt;வீட்டில், பள்ளியில், செல்லகணேசனின் அன்பில் என என் கவிதை பறவை கால்முளைத்து, கை முளைத்து, சிறகுமுளைத்து பறந்துகொண்டே இருந்தது.&lt;br /&gt;வருடங்கள் கடந்தன. பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டிய கட்டம்.&lt;br /&gt;என்னதான் கவிதை எனக்கு இன்பமளிப்பதாக இருந்தாலும்கூட, தேர்வை உதாžனப்படுத்த முடியாது இல்லையா?!&lt;br /&gt;அந்த வருடத்தில் என் கவனம் முழுக்க படிப்பிலும், தேர்வுக்கான தயாரிப்பினும் என்பதாக மாறியது.&lt;br /&gt;மனசளவில் படிப்பை நேசித்த போதிலும், அவ்வப்போது கவிதையும் எழுதிக்கொண்டுதான் இருந்தேன்.&lt;br /&gt;அன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து அம்மா எழுப்பிவிட்டாள். அறிவியல் பரீட்சை!&lt;br /&gt;எழுந்துபோய் உள் அறையில் படிக்கப் பண்ணினாள். அந்த அறைக்கதவு அலுவலகக் கதவுபோல் சதுர வடிவில் நடுவில் கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும். உள்ளே நடப்பவற்றை வெளியில் இருந்து கவனிக்கலாம்.&lt;br /&gt;காபி எடுத்துக் கொண்டு அம்மா அறைக்கு அம்மா வரும்போது நான் எழுதிக் கொண்டிருந்தேன். படிக்காமல் எழுதுவது அம்மாவுக்கு வருத்தம் அளித்திருக்க வேண்டும். தேர்வுக்கு 'பிட்' எழுதுகிறேனோ என்று அம்மாவுக்குச் சந்தேகம் என்றுதான் நினைக்கிறேன். உண்மையில், நான் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;அம்மாவுக்கு எழுதியது என்ன என்று அறியும் ஆவலில் புத்தகத்தைப் பிடுங்கினாள். உள்ளே கவிதை கிறுக்கி வைத்திருந்ததைப் பார்த்ததும் அவளுக்கு மடமடவென்று கண்&amp;shy;ர் கொட்டியது.&lt;br /&gt;'· கவிதை எழுதுவதற்குத் தடையில்லை. ஆனால் பரீட்சை நேரத்தில் கூட இப்படிச் செய்யலாமா?' என்பதுபோல அந்தக் கண்&amp;shy;ரை நான் புரிந்து கொண்டேன்.&lt;br /&gt;படிப்பதற்கான சூழலை நானாக கெடுத்துக் கொண்டேன் என்றே தோன்றியது. அப்பாவின் கண்கள்போல அம்மாவின் கண்&amp;shy;ரும் என்னை எளிதாகச் சலனப்படுத்தியது.&lt;br /&gt;குற்ற உணர்வை அம்மாவின் கண்&amp;shy;ர் என் மீது திணித்துவிட்டது. அம்மாவுக்கு வார்த்தைகள் தடித்து விழுந்தது.&lt;br /&gt;கொஞ்சம் அதிகமான திட்டுதான். மேலும், சூழல் கலவர கதிக்கு மாறுவதற்குள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வேறு அறைக்கு ஓடிவிட்டேன். உள்ளே போய் கதவை இறுக தாளிட்டு அமைதியானேன்.&lt;br /&gt;எக்கேடும் கெட்டுப்போ என அம்மா மீண்டும் காபியை எடுத்து வரவே இல்லை.&lt;br /&gt;தேர்வுக் கூடத்திற்குப் போனபிறகும் காலையில் நான் நடந்துகொண்ட விதம் என்னை உறுத்தியது. படித்தது ஒன்றுகூட வினாவாக கேட்கப்படாததுபோல் இருந்தது. மூளையை முழுதாக கழுவிப் போட்டதுபோல வெள்ளைக் காகிதங்கள், வெள்ளைக் காகிதங்களாகவே வெகுநேரம் இருந்தன. பள்ளிக்கு பொதுத்தேர்வு நடத்தும் அனுமதி கிட்டாதபடியால் அந்த வருடம் வேறு ஒரு பள்ளியில்தான் தேர்வு நடந்தது.&lt;br /&gt;அது அரசினர் உயர்நிலைப்பள்ளி. தனிப்பயிற்சி மாணவர்களும் எங்களோடு பரீட்சை எழுத வந்திருந்தார்கள். வினாத்தாள், நான் பொதுத்தேர்வில் தேர்ச்சிபெறப் போவதில்லை என்பதை சொல்லாமல் சொல்லியது. ஆனால்?&lt;br /&gt;- பயணம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-294258248272536587?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/294258248272536587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=294258248272536587&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/294258248272536587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/294258248272536587'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_5779.html' title='நடைவண்டி நாட்கள்:எட்டு'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-5472538076384209263</id><published>2008-06-10T22:40:00.000-07:00</published><updated>2008-06-10T22:42:40.874-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: ஏழு</title><content type='html'>&lt;strong&gt;மு&lt;/strong&gt;ந்தின நாள் இரவு எங்களுக்கு சகாயம் செய்த வாட்ச்மேனை என்ன காரணத்துக்காக தாக்குகிறார்கள் என்ற மர்மத்தோடு வாயிலுக்குள் நுழைந்தோம்.&lt;br /&gt;நுழையவே அச்சமாய் இருந்தது.&lt;br /&gt;ஒருவேளை அத்துமீறி எங்களை விடுதியில் தங்க அனுமதித்ததால் தாக்கப்படுகிறாரோ என்றும் எண்ணத் தோன்றியது.&lt;br /&gt;தாக்குகிறவர்கள் கொச்சை வார்த்தையில் வாட்ச்மேனை திட்டினார்கள்.&lt;br /&gt;விடுதியில் தங்கியிருப்போர் பலரும் குழுமியிருந்தார்கள். கூட்டத்தில் யாரோபோல நாங்களும் நின்றிருந்தோம்.&lt;br /&gt;பிறகு புத்தனின் வருகைக்காக விடுதியின் வெளி வாயிலில் நிமிர்ந்திருந்த நெட்லிங்க மரத்தின் அருகே காத்திருக்கும்படி ஆயிற்று. வாட்ச்மேன் தாக்கப்பட்ட விவகாரம் அங்கிருந்தவர்களுக்குப் பேசுபொருள் ஆனது.&lt;br /&gt;இரவு நேரங்களில் வாட்ச்மேன் விடுதியின் பின்புற அறை வழியாக தகாத பெண்களை அனுமதிப்பதாகவும், டடுதியை வேறு காரியங்களுக்கு காப்பாளர் இல்லாத சமயத்தில் பயன்படுத்துவதாகவும் எழுந்த சிக்கலுக்காகத்தான் வாட்ச்மேன் தாக்கப்பட்டிருந்தார்.&lt;br /&gt;பெருங்குரல் எடுத்து வாட்ச்மேன் அலறினாரே தவிர, அப்படியேதும் நடக்கவில்லை என்றோ, அல்லது தனக்கு தெரியாது என்றோ அவர் கூறவில்லை.&lt;br /&gt;பிரச்னை முடிந்து அடித்தவர்களே வாட்ச்மேனை மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருக்க வேண்டும். கிசுகிசுப்பு மட்டும் அடங்கியபாடில்லை.&lt;br /&gt;புத்தன் வருவதுபோல தெரிந்தது. இயல்பான சூழல் இல்லை என்பதை மட்டும் அவரால் யூகிக்க முடிந்தது. நடந்ததை எங்களுக்குத் தெரிந்த மொழியில் உளறிக்கொட்டினோம். வழக்கத்துக்கு மாறாக அவர் முகத்தில் பதற்றமும் சங்கடமும் பரவத் தொடங்கின.&lt;br /&gt;"இருங்கள் வருகிறேன்" என மேல்தளத்துக்குப் போனார்.&lt;br /&gt;விடுதியின் காப்பாளர் போத்திராஜா அறைக்கு எங்களைக் கூட்டிப் போனார். போத்திராஜ் என்பதுதான் அவர் பெயரா என்பது சரியாக நினைவில்லை. அவரோடு பெரிய பரிச்சயமும் ஏற்படவில்லை. பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஃபில் சேரும் திட்டம் சரவணனுக்கு இருந்தது. படித்துக் கொண்டே தனது சினிமா கனவுகளை ஈடேற்றிக் கொள்ளும் எண்ணத்தில் இருந்தான்.&lt;br /&gt;புத்தன் மிகுந்த சாதுரியத்தோடும் சகஜமாகவும் போத்திராஜனிடம் சில நாட்கள் தங்கிக் கொள்ள அனுமதி வாங்கினார்.&lt;br /&gt;போத்திராஜனுக்கு புத்தன் மேல் பிரியமும் அளவு கடந்த மரியாதையும் இருந்தது.&lt;br /&gt;'தங்கமணி', ஒரு அரசியல் பிரமுகருக்கு வேண்டப்பட்டவர் என்பதாலும் அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் சம்பந்தப்பட்ட பிரமுகர் இருப்பதாலும் போத்திராஜுக்கு பயம்கலந்த மரியாதை இருந்திருக்கலாம்.&lt;br /&gt;எம்.ஃபில் வகுப்பை பச்சையப்பன் கல்லூரியில் தொடங்குவதற்கு போத்திராஜ் ஏற்பாடு செய்வதாகவும் புத்தனிடம் வாக்களித்து அவ்விதமே மறுமூன்று தினங்களும் தங்கிக் கொள்ளவும் அனுமதி அளித்தார்.&lt;br /&gt;பத்து நாட்கள் எப்படியோ கழிந்துவிட்டன.&lt;br /&gt;ரயில்வே ஸ்ரீனிவாசன், கடற்கரை, சென்னை நகர வீதிகள், பாவாணர் நூலகம், பச்சையப்பன் கல்லூரி எம்.ஃபில் மாணவர்கள் தொடர்பினால் பத்தாவது நாள் சென்னை கொஞ்சம் நம்பிக்கை அளித்தது.&lt;br /&gt;சரவணன் மாலைநேர வகுப்பில் சேர்ந்திருந்தபடியால் பகல் முழுவதும் என்னோடு இருந்துவிட்டு, கல்லூரிக்குப் போகும்போது என்னை நூலகத்திற்குள் உட்கார்த்திவிடுவான்.&lt;br /&gt;பத்திரிகை வேலைக்காக பத்து நாளும் அலைந்ததுதான் மிச்சம். புத்தனுக்குப் பட்டயப் பொறியியல் படித்த நான் பத்திரிக்கை வேலை தேடுவதை விட்டுவிட்டு வேறு ஏதாவது பொறியியல் நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாமே என்று யோசனை.&lt;br /&gt;கவிதை ஆல்பத்தை கையில் வைத்துக் கொண்டு பத்திரிகையில் வேலை தேடுவதை போல அவமானமான விஷயம் ஒன்று இருக்க முடியாது என்று எனக்கும் விளங்கிப் போனது.&lt;br /&gt;பத்திரிகை துறைக்கும் கவிதைத் துறைக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது.&lt;br /&gt;பத்திரிகையாளனாக வரவேண்டும் என்றால் பத்திரிகை அறிவை பயின்றிருக்க வேண்டுமே அல்லாது கவிதை தெரிந்து பிரயோசனமில்லை. மேலும் பத்திரிகை துறைக்கு தேவையான சுறுசுறுப்பு கவிதை இயற்றுபவர்களுக்கு இருப்பதில்லை. எதையும் சற்றே மிதமான மனநிலையோடு அணுகும் போக்கு பத்திரிகைக்கு உதவாது.&lt;br /&gt;பத்திரிகைகள் என்னைப் புறக்கணிக்கும்வரை பத்திரிகையின் மீது அவ்வளவு காதல் எனக்கு இருக்கவில்லை. புறக்கணிப்பு கூடக்கூட பத்திரிகையில் சேரும் வெறி கூடிக்கொண்டே இருந்தது.&lt;br /&gt;தினத்தந்தி தொடங்கி தினத்தூது வரை அத்தனை பத்திரிகை அலுவலகங்களும் அங்கு பணியாற்றுபவர்களின் முகவரிகளும் எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் வேலை இல்லாமல் உழளும் வாழ்க்கை கசந்துவிட்டது. கையில் வைத்திருந்த காசும் பெருமளவு கரைந்துபோனது.&lt;br /&gt;மேலும் மேலும் கடத்த வேண்டிய நாட்கள் மீது குவிய வேண்டிய நம்பிக்கை கேள்விக்குறியானது. விடுதியிலிருந்தும் வெளியேற வேண்டிய நிலை.&lt;br /&gt;அப்போதுதான் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சரவணனுக்கு உதவ முன்வந்தார்கள். கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கார் அரசு மாணவர் விடுதியில் சில நாள் தங்கிக்கொள்ள முடியும் என்றார்கள்.&lt;br /&gt;சரவணன் என்மீது செலுத்திய அன்பிற்கு குறைவில்லாமல் அவர்களும் என்னைத் தூக்கிச் சுமக்க துணிந்தார்கள். காலம், நம்மை இக்கட்டுகளிலிருந்து மீட்பதற்காகவே அப்படியான நண்பர்களை அறிமுகப்படுத்துகிறதுபோல!&lt;br /&gt;பாலா, எட்வின், பழினியாபிள்ளை, ரகுபதி ஆகியோரை என்னால் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறந்துவிட முடியாது. நால்வருக்கும் வேறுவேறு கனவு இருந்தது. வறுமை அவர்களைக் கசக்கிப் பிழிந்திருந்தது.&lt;br /&gt;வீட்டின் உதவியில்லாமல் தாங்களாகவே வாழ்வின் இருண்ட பிரதேசத்தில் உருண்டு கொண்டிருந்தார்கள். என்றாலும் அவர்கள் இதயம் நிரம்ப அன்பு இருந்தது. வழிய வழிய பிறர்க்கு அன்பு செலுத்தும் இயல்பைக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;அவர்கள் அறைக்கு வந்து சேர்ந்தபோது சரவணனும் நானும் முழு பராரிகள் ஆகிவிட்டோம். விடுதி உணவில் வயிறு கழுவி, விடுதியின் அழுக்குத் திட்டுக்களில் பதுங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.&lt;br /&gt;விடுதியில் சகலரும் தங்கியிருப்பார்கள். திரையரங்கில் பிளாக் டிக்கெட் விற்பவர், கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு அதிலிருந்து தப்பிக்க தலைமறைவாகியிருப்பவர், கல்யாண மண்டபத்தில் பணியாற்றுகிறவர், கொத்தனார் வேலைக்குப் போகிறவர், ஒயின் ஷோப்பில் மது ஊற்றிக் கொடுப்பவர் என விடுதியில் மாணவர்கள் அல்லாத பேரும் தங்கியிருந்தார்கள். எங்களுக்குத் தெரிந்த நான்கு நபர்களைத் தவிர, ஏனையோரின் அறைகள் இப்படியான மனிதர்களால் நிரம்பி வழிந்தது.&lt;br /&gt;அருகில்தான் 'ராகவேந்திரா திருமண மண்டபம்'. நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான மண்டபம் என்பதால் முக்கியமான திருமண நாளில் அந்தத் தெருவே அல்லோகலப்படும்.&lt;br /&gt;திருமண மண்டபத்தின் சமையல் அறை விடுதியின் பின்கட்டுக்கு அருகில் இருக்கும். சாப்பாட்டு வாசம் மூக்கை துளைக்கும்.&lt;br /&gt;விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் திருமண நாட்களில் கல்லூரிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு, உணவைப் பரிமாறும் பணி செய்ய போவார்கள். வறிய நிலையில் கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் மாணவர்களுக்கு இன்னும் திருமண மண்டபங்களே உதவிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;ஸ்காலர் ஆக ஆசைப்படும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஸ்காலர்ஷ’ப்பையும், இம்மாதிரியான கல்யாண மண்டபங்களையும் நம்ப வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;விடுதி மொட்டை மாடியிலிருந்து எட்டிப் பார்த்தால், திருமண மண்டபத்தின் சமையற்கட்டில் மாணவர்கள் உழைத்துக் கொண்டிருப்பது தெரியும். மாலை மங்கும்போது திடீரென்று சமையற்கட்டிலிருந்து பொட்டலங்களை விடுதிக்குள் வீசுவார்கள். சூடான வடை அல்லது இனிப்பு வகையறாக்கள் அப்பொட்டலத்தில் அடங்கியிருக்கும்.&lt;br /&gt;பொட்டலம் கைக்கு கிடைப்பவரே அன்றைய அதிர்ஷ்டக்காரர்.&lt;br /&gt;யார் கையில் கிடைத்தாலும் பாலாவுக்கும் எட்வினுக்கும் அவர்களோடு இருப்பதால் எங்களுக்கும் பங்கு கிடைக்கும். பாலாவும் எட்வினும் அந்த மாணவர்கள் மத்தியில் தலைவர்கள்போல செயல்படுவார்கள்.&lt;br /&gt;விடுதியின் காப்பாளர் செய்து வரும் அட்டூழியங்களைத் தட்டிக்கேட்கும் வீரர்களாக அறியப்பட்டார்கள். சரவணனோடு அவர்கள் புகைக்கும்போது அதுகுறித்தெல்லாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.&lt;br /&gt;விளிம்பு நிலை வாழ்க்கையின் முழுமையும் எங்களுக்கு விளங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!&lt;br /&gt;இரண்டே ரூபாயில் ஒரு நாளை துரத்தும் அளவுக்கு தேறிவிட்டோம்.&lt;br /&gt;சரவலணனுக்கு சிகரெட் பழக்கம் போய் பீடி புகைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு ரூபாய்க்கு பத்து பீடியை 1998ஆம் வருடம் வாங்க முடியும் என்பது புரிந்தது.&lt;br /&gt;திருமண மண்டபத்தில் பாட்டுக் கச்சேரிக்கு குறைவிருக்காது. அப்போதெல்லாம் மாடியில் மல்லாந்து கொண்டு 'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்' என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருப்போம்.&lt;br /&gt;- பயணம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-5472538076384209263?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/5472538076384209263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=5472538076384209263&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/5472538076384209263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/5472538076384209263'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_10.html' title='நடைவண்டி நாட்கள்: ஏழு'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-2053942696488587657</id><published>2008-06-08T00:25:00.000-07:00</published><updated>2008-06-08T00:33:21.292-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: ஆறு</title><content type='html'>&lt;strong&gt;                                              ப&lt;/strong&gt;த்திரிகைக்கு அனுப்பிய கவிதை திரும்பி வந்தது பெரிய துக்கமாக இருந்தது. என்னைவிட அம்மாவுக்கு இரட்டிப்பு துக்கம்.&lt;br /&gt;கவிதை திரும்பிய காரணத்தைக் காட்டிலும் என்னைத் தேற்றுவதற்கு அம்மா கூறிய பொய்க் காரணங்கள் என்னை மேலும் நோகடித்தது.&lt;br /&gt;பொதுவாக சீனு அண்ணன் மாலை வேளைகளில் வீட்டுக்கு வருவதுதான் வழக்கம். ஆனால் அன்று மட்டுமேனும் அவர் சீக்கிரமாய் வந்தால் தேவலாம் போலிருந்தது. வேறொரு நண்பர் மூலம் சீனு அண்ணனை அப்பா வரச்சொல்லி அனுப்பினார்.&lt;br /&gt;பத்திரிகைக்கு இரண்டு அலுவலகம் இருந்தது. தலைமை அலுவலகம் சென்னையிலும் படைப்புகளைப் பரிசீலிக்கும் அலுவலகம் சிதம்பரம் என்பதையும் கவனிக்காமல் சென்னை முகவரிக்கு படைப்பை அனுப்பியதால்தான் திரும்பி வந்திருக்கிறது என்று சீனு அண்ணன் சமாதானம் சொன்னார்.&lt;br /&gt;என்றாலும் என் ஆர்வம் அல்லது கோளாறு இந்தக் காரணத்தை நம்ப மறுத்தது.&lt;br /&gt;நாம் நிராகரிக்கப்பட்டுவிட்டோம் என்ற ஆழமான துயரை அடிநெஞ்சில் அனுமதித்துவிட்டோமேயானால் பிறகு எதனாலும் அதை சரிசெய்ய முடியாது.&lt;br /&gt;மறுபடியும் கவிதை அனுப்பப்பட்டது. மாதக்கடைசியில் பத்திரிகை ஆசிரியரிடமிருந்து வாழ்த்துபோல ஒரு கடிதம் வந்தது. கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், என் படைப்புகளை தொடர்ந்து நான் அனுப்பி பத்திரிக்கைக்கு ஆதரவு தரவேண்டுமெனவும் கடிதத்தில் ஆசிரியர் கேட்டிருந்தார்.&lt;br /&gt;வானுக்கும் பூமிக்கும் கால்மாற்றி கால்மாற்றி ஆடத் தொடங்கினேன்.&lt;br /&gt;தரையில் கால்பாவாமல் தோள்களில் சிறகு சூடிக் கொண்டேன்.&lt;br /&gt;சீனு அண்ணன் என்னைக் கர்வமாய் பார்த்தார். அம்மாவுக்கும் உதட்டிலும் கண்ணிலும் உற்சாகம் பெருகி வழிந்தது. இரண்டு மூன்று கவளம் உணவை அதிகமாய் பரிமாறியதிலிருந்து அம்மாவின் பெருமிதத்தை உணர முடிந்தது.&lt;br /&gt;வீடு முழுக்க சந்தோஷம் பரவி, தெருக்கோடியிலிருந்த கடைக்காரர் வரை விசாரிக்கத் தொடங்கிவிட்டார்.&lt;br /&gt;அந்த மாத பத்திரிகை அப்பாவின் நண்பர்களால் அதிகமாய் விற்பனை ஆனது. மாதந்தோறும் என் கவிதை பத்திரிகையில் வெளிவந்தால் விற்பனை கூடிவிடும் என்று நானே நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;தன்னால்தான் பூமியே சூழல்வதுபோல நினைத்துக்கொள்வது எத்தனை இன்பம் உடையது என அனுபவிப்பவர்க்கே தெரியக்கூடும்.&lt;br /&gt;ஒருமாத காலமாய் பத்திரிகையைப் பார்ப்பவர்கள் எல்லாம் வாழ்த்துச் சொன்னார்கள்.&lt;br /&gt;என்னை வாழ்த்துவதற்கு அவர்களுக்குக் கிடைத்த ஒரே செய்தி அப்போது கவிதையாய் இருந்தது.&lt;br /&gt;தோழரின் மகன் என்பதால் மட்டுமல்ல, என்னையும் அவர்கள் தோழராகவே மதிக்கத் தொடங்கினார்கள். தோழர் மகன் கவிதை எழுதுவார் என்பதுபோல அவர்களாகப் பேசிக் கொள்வதை காதில் விழாததுபோல கேட்டுக் கொள்வேன்.&lt;br /&gt;வீட்டுக்கு யார் வந்தாலும் இரண்டு வேலை தொடங்கிவிடும். ஒன்று பத்திரிகையை எடுத்துக் காட்டுவது, அடுத்தது காபி தருவது.&lt;br /&gt;பத்திரிகையை வாசித்து வாழ்த்து தெரிவிக்காதவர்களுக்கு காபி தரமாட்டாளோ என்று சந்தேகிக்கும் அளவு அம்மா நடந்து கொள்வாள்.&lt;br /&gt;அம்மாக்கள் பிரியத்தின் பிரதிநிதிகள்.&lt;br /&gt;அவர்களுக்கு என்று தனி உலகம் கிடையாது. ஆயிரம் செல்வம், அன்பான கணவன் கிடைத்தாலும்கூட, அவர்களுக்குத் தங்கள் பிள்ளைகளே பெரிதாகப் படுவார்கள். அதிலும் என் அம்மா கூடுதல் விசேஷம்.&lt;br /&gt;கவிதை வெளியான செய்தி எங்கள் வீட்டுக்கு வருகிற அத்தனை பேருக்கும் தெரிந்துவிட்டது. வெளிவந்த கவிதையின் தரம் குறித்துப் புகழ, žனு அண்ணன் மாதிரி விவரித்துச் சொல்ல கிடைத்தவர் செல்லகணேசன்.&lt;br /&gt;புலவர் என்றுதான் அவரை எல்லோரும் அடையாளப்படுத்துவார்கள். மரபுக்கவிதை ஆர்வலர்.&lt;br /&gt;ஆர்வலர் என்று சொல்வதைக் காட்டிலும் மரபுக்கவிதைக்காக தன்னை முழுமையாக தயாரித்துக் கொண்டவர் எனலாம்.&lt;br /&gt;யாப்பிலக்கண மேதையாகவே அவரை நான் கருதுவேன். எழுத்து,சீர், அடி, தொடை, தளை என்பதெல்லாம் அவருக்கு வாய்திறந்தால் கொட்டிவிடும் வசத்தில் இருக்கும்.&lt;br /&gt;அவர்தான் என்னைக் கவிதையின் நுண்மையை உணரப் பழக்கியவர். மரபுக்கவிதையைப் பயின்று கொண்டாலன்றி எழுத்து செம்மையுராது என்று அறிவுறுத்தியவர்.&lt;br /&gt;யாப்பு என்றால் என்னவென்று நான் கேட்க, "திருக்குறள் இருக்கிறது இல்லையா... அதை ஒரு அளவில் வள்ளுவர் எழுதியிருக்கிறார். அதாவது குறள் வெண்பா என்ற வடிவத்தில்...! அதை எழுதுவதற்கு கவிதை மனது மட்டும் போகாது. கணக்கும் தெரியவேண்டும். நேர் நேர் தேமா என்று வாய்ப்பாடு இருக்கிறது. அதைப் பயின்றால் மேலும் கவிதையை எளிதாகக் கையாளலாம்" என விளக்கப்படுத்தினார்.&lt;br /&gt;"நானும் திருவள்ளுவர் ஆகிவிடுவேனா?" என்று கேட்டேன்.&lt;br /&gt;சிரித்துக் கொண்டார்.&lt;br /&gt;சீனு அண்ணன் சொல்லாத ஆனால் தெரிந்து வைத்திருந்த புலவரின் வார்த்தைகள் எங்கள் அனைவரையும் வேறொரு முற்றத்திற்குக் கூட்டிப் போனது.&lt;br /&gt;ஓராசிரியர் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த புலவர், மாலை வேளையில் அவர் வீட்டுக்கு என்னை வரும்படி கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;புலவரின் வீடு எங்கள் வீட்டிலிருந்து சற்றே மூன்று மைல் தொலைவில் இருந்தது. பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததும், உடனே கிளம்பி புலவர் வீட்டுக்குப் போய்விடுவேன். அவர் வீட்டுக்குப் போவதற்காகவே எனக்கொரு மிதிவண்டி அப்பாவால் வாங்கித் தரப்பட்டது.&lt;br /&gt;பள்ளிப் பாடங்களைப் படிப்பதைவிடவும், கவிதை நூல்களை வாசிக்கும் ஆர்வமே மேலோங்கி நின்றது. புலவரின் வீடு பெரிய பாடசாலை!&lt;br /&gt;ஒரு பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நூல்களை தன் சின்னஞ்சிறிய வீட்டில் சேமித்து வைத்திருந்தார். ஓராசிரியர் பள்ளி புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருந்தது. பள்ளி முடித்து அவர் வீடு வந்து சேர தாமதமாகிவிடும். அதுவரை நூல்களை குறித்துக் கொண்டு அத்தையிடம் பேசிக் கொண்டிருப்பேன்.&lt;br /&gt;புலவரின் மனைவியை அத்தை என்றுதான் அழைக்கப் பழகியிருந்தேன். அத்தைக்கு என் மீது அலாதி பிரியம். கவிதையை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பதால், கவிதையின் இண்டு இடுக்கெல்லாம் அவருக்கும் அத்துப்படி.&lt;br /&gt;முதல்நாள் படிக்கக் கொடுத்த நூலைப் பற்றி மறுநாள் பேசி, பாராட்டும் விளக்கமும் பெறுவேன். அங்குதான் வைரமுத்துவும் மேத்தாவும் எனக்கு அறிமுகமானார்கள்.&lt;br /&gt;நூல்களின் வாயிகாக இன்குலாப்பும் கலாபிரியாவும் கல்யாண்ஜியும் என்னை வசீகரித்தார்கள்.&lt;br /&gt;மரபு பயிற்சியின் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் முழுதாக கழிந்தன.&lt;br /&gt;பத்தாம் வகுப்பை எட்டிவிட்டதால் பொதுத்தேர்வு பயம் ஒருபுறம் கவ்வியது. இருந்தாலும் வீடும் என்னைச் சுற்றியிருந்தவர்களும் கவிதையில் நான் கொண்டிருந்த ஆர்வத்தினால், அந்த ஆர்வத்தைக் கெடுத்துவிட வேண்டாமென, என் போக்கை மேலும் ருசிப்படுத்தினார்கள்.&lt;br /&gt;ஓரளவு மரபில் நான் தேறியிருக்கிறேன் என அப்பாவிடம் புலவர் பெருமையோடு கூறுவார்.&lt;br /&gt;வெண்பாவில் வீட்டு முகவரியை எழுதிக்காட்டுமளவுக்கு வளர்ந்திருந்தேன். எதையும் ஓசையோடு எழுதிப் பழகிக் கொண்டேன்.&lt;br /&gt;கடிதம் எழுதுதென்றால் கூட ஆசிரியப்பாவை தேடுமளவுக்கு எனது மரபுக்கிறுக்கு தலைக்கேறியது.&lt;br /&gt;புதுக்கவிதை மட்டுமே கவிதை இல்லை. மரபை அறியாமல் புதிது எழுதுவது அவ்வளவு உயர்வில்லை என்று பேசித் திரிந்தேன்.&lt;br /&gt;புலவர் என்னுள் முழுதாக வியாபிக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;'திசாதா' எனும் புனைப்பெயரில் அவர் எழுதி வந்த கவிதைகளையெல்லாம் மனனம் செய்து ஒப்புவித்தேன். 'என் கவிதைகளைவிட பாரதி, பாரதிதாசன் கவிதைகளை மனனம் செய்துகொள்' என்பார்.&lt;br /&gt;'மனனம் செய்வதற்கு ஏற்றன மரபுக் கவிதைகளே! ஒருமுறை மனனம் செய்துவிட்டால் பிறகு நாமே மறக்க முயன்றாலும் அக்கவிதைகள் ஓசை நயத்தால் நம்மிடமிருந்து ஒருபோதும் தொலையாது' என்பார்.&lt;br /&gt;'மரபுக்கவிதைகளின் பயிற்சியே சாலச்சிறந்த புதுக்கவிதை இயற்றுவதற்கான பயிற்சியைக் கொடுக்கும்' என்பார்.&lt;br /&gt;உண்மையை எளிமையாகவும் இன்பமாகவும் வெளிப்படுத்தி உணர்த்துவதற்கு புலவர் போல் சிலர் இன்னமும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;பள்ளிக்கூடத்தில் என் நண்பர்கள் என்னை வேறு மாதிரி பார்ப்பார்கள். அவர்களைவிட நான் சற்று கூடுதல் பலம் உள்ளவன் என்பதாகப் பாவிப்பார்கள். ஆசிரியர்களிடமும் எனக்கான தகுதி மதிக்கத்தக்கதாய் இருந்தது. காரணம் படிப்பிலும் நான் கவனம் சிதறாவதனாக என்னை உருவாக்கிக் கொண்டேன்.&lt;br /&gt;ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் கட்டுப்பாடுகளை ஏற்காத, ஆனால் மீறிவிடாத பக்குவம் எனக்கு இருந்தது. என் கவிதைகளை வகுப்பறையில் வாசிக்கச் சொல்லி ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். அப்படியொரு நாள் பாராட்டிக் கொண்டிருக்கையில் பள்ளியின் தாளாளர் என்னை அழைத்து, 'உன் அப்பாவை வந்து என்னைப் பார்க்கச் சொல்' என்றார்.&lt;br /&gt;பாராட்டு அடங்கி பயம் தொற்றிற்று. சக மாணவர்கள் என் பயத்தைக் கவனித்து அவர்களும் சோர்ந்து போனார்கள்.&lt;br /&gt;அந்தச் சம்பவம் கணக்கு வகுப்பில் நடந்தபடியால், ஆசிரியர் மணிசேகரனுக்கு 'மெமோ'வோ வேலை ·க்கமோ உறுதி என்றார்கள்.&lt;br /&gt;- பயணம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-2053942696488587657?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/2053942696488587657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=2053942696488587657&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/2053942696488587657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/2053942696488587657'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_08.html' title='நடைவண்டி நாட்கள்: ஆறு'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-8158767621263454036</id><published>2008-06-05T00:03:00.000-07:00</published><updated>2008-06-05T00:05:29.717-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: ஐந்து</title><content type='html'>&lt;strong&gt;                                                 கொ&lt;/strong&gt;ளுத்தும் வெயிலுக்கு நடுவே குளிர்காற்றை வாரி இறைத்தபடி பேருந்து மெரீனாவை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்கரையைப் பார்க்க போகிறோம்.&lt;br /&gt;கடல், சமயத்தில் அலை கொலுசைக் கட்டிக் கொண்டு ஆடும் ·ர்ப்பெண் போல எனக்குத் தோன்றும்.&lt;br /&gt;கடல் பார்ப்பது ஒன்றுதான் சென்னை நகர மக்களின் ஒரே ஆறுதல். அன்றாடப் புழுக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள, கடல் உதவுகிறது போல!&lt;br /&gt;ஒரு குழந்தைக்குச் சொல்வதுபோல, கடல் குறித்த சிலாகிப்புகளை சரவணன் எனக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;நடத்துனரோடு பேசிக்கொண்டிருந்த பெண்ணின் சிரிப்பொலி, கடலையும் எங்களையும் உதாžனப்படுத்தியது.&lt;br /&gt;காதலிக்கும் காலங்களில் வாயும் காதும் உலகை மறந்துவிடுகின்றன. என்னதான் பேசுவார்களோ?&lt;br /&gt;பேசிக்கொண்டே வந்த நடத்துனரும் மாணவியும் குழைந்த குழைவு பின் இருக்கையில் அமர்ந்திருந்த எங்களைப் பெருமூச்சிட வைத்தது.&lt;br /&gt;எதிர்பாராமல்தான் யாவும் நடக்கின்றன!&lt;br /&gt;புது இடத்தில் சிலர் கண்முன்னே தயக்கமோ வெட்கமோ இல்லாது, நடத்துனரின் உதடை அப்பெண்ணின் உதடு முத்தமிட்டது. அதிர்ச்சி அப்பிக் கொள்ள நானும் சரவணனும் பேயறைந்ததுபோல பார்க்க வேண்டி வந்தது.&lt;br /&gt;நகரத்தின் கலாச்சார மாண்புகள் எங்களை ஓங்கி அறைந்த முதல் அறை அது!&lt;br /&gt;ஆணும் பெண்ணும் சிநேகிக்கும் அரிய சந்தர்ப்பங்கள் எங்கள் இருவருக்கும் வாய்த்ததில்லை. இரண்டாவது நிறுத்தத்தில் நாங்களே இறங்கிக் கொண்டோம். கடல் தெரிந்தது.&lt;br /&gt;கடற்கரை நெடுக அங்குமிங்குமாக குடைக்குள் இரண்டிரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். குடை இல்லால் சிலரும், துணை இல்லாமல் பலரும் கடலை வெறித்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;"சென்னையில் பிறந்து வளர்ந்திருப்போமேயானால் நமக்கும் குடையோ, துணையோ கிடைத்திருக்கும் இல்லையா" என்றான் சரவணன்.&lt;br /&gt;இதைப் பற்றியெல்லாம் எதற்குப் பிதற்றிக் கொண்டோம் எனத் தெரியவில்லை.&lt;br /&gt;தங்குவதற்கு இடமில்லாமல் தவித்துத் திரிகிற முதல் நாள் சென்னை - காதல் நிரம்பிய பூமியாகக் காட்சியளித்ததை என்னவென்று சொல்வது?&lt;br /&gt;'கண்ணதாசன் முதன் முதலில் சென்னை வந்து நம்மைப் போலவே தங்க இடமில்லாமல் கடற்கரையில்தான் வந்து அமர்ந்திருந்ததாக வனவாசத்தில் எழுதியிருக்கிறார் தெரியுமா?' என்றேன்.&lt;br /&gt;நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலோ எதிரிலோ அமர்ந்திருக்கக் கூடும்.&lt;br /&gt;வருடங்களைப் பின்னோக்கிப் பார்ப்பதில் உள்ள சுகம் முன்னோக்கிப் பார்ப்பதில் இல்லை. நடவாததை நினைப்பதைவிட, நடந்ததை நினைத்துப் பார்ப்பது சிலிர்ப்பூட்டுகிறது. அது, யாருக்கு நடந்திருந்தாலும் நமக்கு நடந்ததுபோல பாவித்துக் கொள்வது மேலும் சுகம்.&lt;br /&gt;கைக்கு கிடைத்ததைக் கொறிப்பதுபோலவே, வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருந்தோம். பூமியில் இருந்து நாங்கள் மட்டும் துண்டாக விலக்கப்பட்டு, வேடிக்கை பார்க்கும் நிலையில் இருந்தோம்.&lt;br /&gt;இல்லை! எங்கள் மனதும் சூழலும் அப்படி கற்பனை செய்து கொண்டது.&lt;br /&gt;இருட்டத் தொடங்கியது. சுருள் சுருளாக மேகமூட்டம் 'இங்கிருந்து கிளம்புங்கள்' என்றது.&lt;br /&gt;இருட்டு நெருங்க நெருங்க தண்டிக்கப்பட்ட பிராணிகள்போல எங்கள் முகம் மாறிக் கொண்டிருந்தது. சுந்தரபுத்தன் தந்திருந்த விடுதி முகவரி நோக்கி நகர்ந்தோம். வாசலைத் தொட்டதும் முகப்பில் 'வேர்ல்ட் யூனிவர்சிடி ஆர்கனைசேஷன்' என்ற பலகை தென்பட்டது.&lt;br /&gt;விடுதியின் அமைப்பு, சுந்தரபுத்தன் பத்திரிகை செல்வாக்கை காட்டுவதாகப்பட்டது.&lt;br /&gt;பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்கும் உயர்தரமான இடத்தில் நமக்கு யார் இடம் தரப்போகிறார்களோ?&lt;br /&gt;விடுதியில் மேற்படிப்பு மாணவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். 'தங்கமணி' என்ற மாணவரின் அறையில்தான் சுந்தரபுத்தன் தங்கியிருந்தார். வாசலில் வெகுநேரமாகக் காத்துக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;'புத்தனுக்கு தொலைபேசுவோமா?' என்றேன்.&lt;br /&gt;'அலுவலகத்திலிருந்து கிளம்பியிருப்பாரே' என்றான்.&lt;br /&gt;கைத்தொலைபேசி அன்றைக்கு இன்றுபோல் எல்லோரிடமும் இல்லாத காலம். வசதி மிகுந்தோர் மட்டுமே வைத்துக் கொள்ள இயலும். விடுதிக்கு எதிரே நெடுஞ்சாலை. பேருந்துகள் மனிதர்களைச் சுமக்கும் கழுதைகளைப்போல நடந்தன!&lt;br /&gt;பேருந்துகள் அத்தனையிலும் நெரிசல் பிதுங்கின. கடைகோடி மனிதர்களின் ஒரே போக்கிடம் பேருந்துதான் என்பதை கூட்டம் கூட்டமாய் படிக்கட்டுகளில் தொங்கியவர்கள் உணர்த்தினார்கள்.&lt;br /&gt;இரவு பத்துமணி வாக்கில்தான் சுந்தரபுத்தனின் தரிசனம் கிடைத்தது. திடீரென்று அலுவலக வேலை நிமித்தம் ஒருவரைப் பார்க்க நேர்ந்ததாகவும் தவறாகக் கருத வேண்டாம் எனவும் பேச்சைத் தொடங்கினார்.&lt;br /&gt;அசதி அவர் முகத்தில் கொப்பளித்தது. வேலை மனிதனைக் கசக்கிப் பிழிகிறது.&lt;br /&gt;வெறுமனே காத்திருந்த சோர்வை அவரிடம் நாங்கள் வெளிப்படுத்த விரும்பாமல், பொய்ச்சிரிப்பை முகத்தில் உமிழ்ந்தோம்.&lt;br /&gt;'இங்கேயே இருங்கள். வந்து அழைத்துப் போகிறேன்' என்று மேல்தளத்திற்குப் போனார்.&lt;br /&gt;எங்களைவிட புத்தன் எல்லா விதத்திலும் ஒருபடி மேலேயே இருப்பதாக நினைத்துக் கொண்டோம்.&lt;br /&gt;'வாருங்கள்' என்று அழைத்துப்போய், இரண்டாம் தளத்தில் உள்ள அறையைக் காட்டினார்.&lt;br /&gt;'இரண்டொரு நாளில் வேறு ஏற்பாடு செய்து கொள்வோம்' என்றார்.&lt;br /&gt;அந்த அறைக்கு எவ்விதத்திலும் எங்கள் முகமும் உடையும் பொருத்தமில்லாமல் இருந்தது. காத்திருந்த நேரத்தில் சாப்பிட்டிருக்கலாம். வந்துவிடுவார் என்ற எண்ணத்தில் முடியாமல் போனது.&lt;br /&gt;'லட்சிய வெறியில் உள்ளவர்கள் சாப்பாட்டுக்குப் பெரிய மதிப்பு கொடுப்பதில்லை' என்றான் சரவணன்.&lt;br /&gt;என்ன லட்சிய வெறியோ?&lt;br /&gt;'எனக்குப் பசிக்கிறது' என்றாலும் எதுவும் கிடைக்கப் போவதில்லை. சரிதான் என்பதுபோல மையமாக தலையசைத்து மௌனமானேன்.&lt;br /&gt;நல்ல அறை. கைப்பைகளை கிடத்திவிட்டு ஆயாசமாக மல்லாந்தோம்.&lt;br /&gt;அடித்துப் போட்டது மாதிரி உடல் வலியெடுத்தது. பசி தூக்கத்தை தின்னத் தொடங்க, புரண்டு புரண்டு தேகத்தை சுருக்கிக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;புது இடம், தூக்கம் பிடிக்கவில்லை. புத்தனின் கருணையை மெச்சி மெச்சி நேரத்தைப் போக்கத் துணிந்தோம். பிறகு இருவருமே தூங்கியதுபோல நடிக்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;நன்றாக விடிவதற்கு முன்பாகவே எங்கள் அறைக்கதவு தட்டப்பட்டது. புத்தன் நின்றிருந்தார்.&lt;br /&gt;'நான் அலுவலகம் கிளம்ப வேண்டும். உங்கள் பைகளை என் அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அறையை வாட்ச்மேனிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த அறையில் மாணவரோ ஆசிரியரோ அல்லாத வெளி நபர்கள் தங்க அனுமதிக்கமாட்டார்கள். விருந்தினர்கள் என்றால் காப்பாளரிடம் அனுமதி கேட்டு இரண்டொரு நாட்கள் தங்கலாம். இப்போதைக்கு குளித்துவிட்டு ஏதாவது வேலை இருந்தால் கவனியுங்கள். மாலை சந்திப்போம்' என்று விடைபெற்றார்.&lt;br /&gt;புத்தன் கடந்துபோகவும், வாட்ச்மேன் எதிரே வரவும் சரியாக இருந்தது.&lt;br /&gt;வாட்ச்மேனை கும்பிட்டோம். இதற்கு முன் இப்படியொரு வணக்கத்தை யாருமே அவருக்கு வைக்காததுபோல வளைந்து நெளிந்து தலைசொறிந்தார்.&lt;br /&gt;போக்கிடம் எதுவும் இல்லாது இப்பெரும் நகரத்தில் யாரைப் போய்ப் பார்ப்பது?&lt;br /&gt;ரயில்வே žனிவாசனுக்கு தொலைபேசி சந்திக்க விரும்புவதாகச் சொன்னதும், அவர் தந்த அலுவலக முகவரிக்குப் புறப்ப்டோம்.&lt;br /&gt;சென்னையின் நெருக்கடியை பழகிக் கொள்ள தானும் ஆரம்பத்தில் அல்லலுற்றதாகத் தெரிவித்தார். பேச்சு கவிதை நோக்கியும், கனவு குறித்தும் போனது.&lt;br /&gt;žனிவாசனுக்கு கவிதை சிகரத்தை எட்டிப் பிடிக்கும் வெறி இருந்தது. குடும்ப சூழல் காரணமாகவே தான் கைதி போல வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பொருமினார்.&lt;br /&gt;சரவணனுக்கு இப்போதெல்லாம் புகைக்கும் ஆசை பெருமளவு குறைந்து போயிருக்க வேண்டும். நொடிக்கொரு சிகரெட் தேடும் சரவணனின் விரலும் உதடும் விட்டேத்தியாயின!&lt;br /&gt;அவரை ·ண்ட நேரம் தொந்தரவு செய்யாமல், வேலை இருப்பதுபோல பொய்யாகக் காட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம்.&lt;br /&gt;சென்னை நகரின் முட்டுச்சந்துகள், மூத்திரச் சந்துகள் என எங்களின் கால்கள் ஒரு நாள் முழுக்க இலக்கில்லாமல் நடந்து ஓய்ந்தன.&lt;br /&gt;மர நிழலைக் கண்டால் அமர்வதும், மனிதர்கள் வந்தால் நகர்வதுமாக பொழுது முழுக்க அலைந்தோம்.&lt;br /&gt;தே·ருக்கும் அவ்வப்போது சிகரெட்டுக்குமாக அவ்வப்போது இருந்த பணத்தை இழந்து கொண்டிருந்தோம்.&lt;br /&gt;காலை ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டது. மாலை நான்கு மணி வாக்கில் மீண்டும் பசியெடுக்க, டீக்கடை பன்னுக்குள் இரைப்பையை நிரப்பினோம்.&lt;br /&gt;'செல்வம் சித்தப்பா மாதிரியான பேர்வழிகளை இனியொரு தரம் நம்பி மோசம் போகக்கூடாது' என்றான் சரவணன்.&lt;br /&gt;பாவம் அவருக்கு என்ன சிக்கலோ?&lt;br /&gt;சித்தப்பா நேர்த்தியான ஓவியர். பத்திரிகை துறையில் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிவதாகச் சொல்லியிருந்தார். நிச்சயம் பத்திரிகை வட்டத்திற்குள்தான் இருக்க வேண்டும்.&lt;br /&gt;புத்தன் உதவியோடு ஒவ்வொரு பத்திரிகையின் தொலைபேசி எண்ணையும் வாங்கி தொடர்பு கொள்வோமே? என்றேன்.&lt;br /&gt;சரவணனுக்குப் பெரிய ஆர்வமில்லை. என் பிடுங்கல் தாங்காமல் ஒப்புக் கொண்டான்.&lt;br /&gt;இறுதிவரை சித்தப்பா பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கையில் வைத்திருந்த கவிதை ஆல்பத்தை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக வேலை கேட்கத் தொடங்கினோம்.&lt;br /&gt;பத்திரிகை அலுவலகத்திற்குள் பிரவேசிக்க முடியாத விசேஷ ஜந்துக்களாக நாங்கள் நடத்தப்பட்டோம்.&lt;br /&gt;இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. விடுதி வளைவுக்குள் நுழையும்போது வாட்ச்மேனை யாரோ சிலபேர் கூடி நின்று அடித்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;-  தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-8158767621263454036?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/8158767621263454036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=8158767621263454036&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8158767621263454036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8158767621263454036'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_05.html' title='நடைவண்டி நாட்கள்: ஐந்து'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-6590304197693548606</id><published>2008-06-04T23:59:00.000-07:00</published><updated>2008-06-05T00:00:48.662-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: நான்கு</title><content type='html'>&lt;strong&gt;'ஈ&lt;/strong&gt;ழ ஏக்கம்' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பி, அக்கவிதை இதழில் பிரசுரமாக வேண்டும் என்று அம்மாவுக்கு ஆசை.&lt;br /&gt;உண்மையில் அக்கவிதை பிரசுரத் தகுதி உடையதுதானா என்றெல்லாம் யோசிக்காமல் என் பெயரை அச்சில் பார்க்கும் அதீத ஆர்வம் அம்மாவை ஆட்டிப்படைத்தது.&lt;br /&gt;எந்தப் பத்திரிகைக்கு அனுப்புவது?&lt;br /&gt;எப்போதும் எங்கள் வீட்டில் இம்மாதிரியான பிரச்னைகளுக்கு žனு அண்ணன்தான் முடிவு சொல்வார். žனு அண்ணன் என் வளர்ச்சியில் மிகுந்த கவனம் கொண்டவர்.&lt;br /&gt;எங்கள் வீடு அமைந்திருந்த கலைஞர் நகர் பகுதியில்தான் அவர் வீடும் இருந்தது. அப்பாவுக்கு நல்ல தோழர். என்னால் கொண்டாடப்படுபவரும் கூட.&lt;br /&gt;தீவிர சாஸ்திர சம்பிரதாயங்களில் ஈடுபாடு கொண்ட வைதீக குடும்பத்தில் பிறந்திருந்த போதும், அப்பாவின் இடதுசாரிச் சிந்தனைகளின் மீது அண்ணனுக்கு அலாதியான பற்று இருந்தது.&lt;br /&gt;தன் மேனியின் குறுக்கே கிடந்த நூலையும் அறுத்து கடாசிவிட்டு அப்பழுக்கற்ற மார்க்சிய வாதியாக தன்னை நிறுவிக் கொண்டவர். படிப்புதான் அவரது முழுநேர தொழில் போல இருக்கும். எப்போதும் தன்னுடைய சைக்கிள் கேரியரில் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை வைத்திருப்பார். எங்கு போனாலும் கிடைக்கிற கொஞ்ச நேரத்தை ஓய்வுக்கு விட்டுத் தராமல் வாசிப்பை தொடங்கிவிடுவார்.&lt;br /&gt;வாசித்த நூலைப் பற்றி அப்பாவோடு விவாதிக்கவும் செய்வார். அப்பா அறியாத பல நவீன எழுத்தாளர்கள் பற்றியெல்லாம் இனிக்க இனிக்க பிரமிப்பூட்டுவார்.&lt;br /&gt;'இவர் படிக்காத நூல்களே இல்லை' என்பதுபோல பலரும் அவரைப் புகழ்வார்கள். அலமாரி நிரம்ப புத்தகங்களை அட்டைபோட்டு அடுக்கி வைத்திருப்பார்.&lt;br /&gt;அலமாரியின் இடதுபக்கத்தின் ஓரமாக சில நூல்கள் அட்டை இல்லாமல் அடுக்கப்பட்டிருக்கும். 'எதனால் இப்படிப் பிரித்து வைத்திருக்கிறீர்கள்?' என்று யாராவது கேட்டால், உடனே அட்டை போட்ட நூல்கள் படித்தவை என்றும் போடாதவை படிக்க இருப்பவை என்றும் விளக்கி விட்டு மெலிதாகச் சிரிப்பார்.&lt;br /&gt;மீசை வைக்காத, நெட்டையான, பாக்யராஜ் கண்ணாடி அணிந்த அவரை கே.கே. நகர் ரகுவரன் என்று தம்பி செல்லமாய் žண்டுவான்.&lt;br /&gt;படிப்பு ஒரு மனிதனை எந்தளவு பக்குவப்படுத்தும் என்பதற்கு நல்ல உதாரணம் அவர். அசைவப் பிரியர். கடல் நண்டை எப்படி ஓடு விலக்கிச் சாப்பிடுவது என்று எனக்கு வகுப்பெடுத்தவரே அவர்தான்.&lt;br /&gt;வைதீக குடும்பத்தில் பிறந்து இப்படியெல்லாம் பேதம் களைந்து பழகும் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுவோம்.&lt;br /&gt;வயதில் அம்மாவைவிட அதிகம் என்றபோதும், அம்மாவை 'வசந்தி அக்கா' என்றே கூப்பிடுவார்.&lt;br /&gt;'காரிய சமர்த்தர்' என்று அப்பாவால் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவார். தமிழகத்தின் அத்தனை நகரங்களுக்கும் அவரே என்னை அழைத்துப் போனவர். ஒரு பெரிய வட்டமடித்து ஒவ்வொரு ஊரின் சிறப்புகளையும் அவ்வூரில் உள்ள உணவகங்களையும், எழுத்தாளர்களையும் அவரால் விவரிக்க முடியும்.&lt;br /&gt;'ஈழ ஏக்கம்' கவிதை முதலில் அவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கவலையாக இருந்தது. ஏனெனில் மனதில் பட்டதை 'டொப்' பென்று உடைத்துவிடுபவர் ஆயிற்றே!&lt;br /&gt;எதிரில் இருப்பவரின் இதயம் எத்தனை சுக்கு நூறானாலும் அதுபற்றி வருத்தப்படாமல் சொல்வார். சொல்வது எதிராளிக்குப் பிரயோசனமாய் இருக்க வேண்டும் என்பதில்தான் அவர் குறியாக இருப்பார்.&lt;br /&gt;அறிவு எதை உத்தேசித்தும் பேசாது. அறிவுக்குத் தெரிந்த ஒரே பாதை உண்மை.&lt;br /&gt;கபடு இல்லாத அறிவு கம்பீரமானது. வாய்ப்பையும் வசதியையும் கூட உதறிவிட்டு, நிராயுதபாணியாக நின்று எதிர்வரும் சவால்களை ஜெயிக்கும்.&lt;br /&gt;எழுத்தின் கனத்தையும் எழுத்தாளர்களின் தெளிவையும் வாசிப்பு மூலமே கண்டறிந்தவர் என்பதால் žனு அண்ணன் கைக்கு அக்கவிதை போனபோது எனக்கு உதறல் எடுத்தது. அடுக்களைக்குள் போய் பதுங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;வீட்டு முற்றத்தில் அப்பாவுடன் அமர்ந்துதான் அதை வாசிக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;'·ங்க படிச்žங்களா?' என்று அப்பாவைக் கேட்டார்.&lt;br /&gt;'ம்...' என்றதோடு அப்பாவும் நிறுத்திக் கொண்டார்.&lt;br /&gt;மதிப்பெண் அட்டையைக் கொண்டு வந்து காட்டும்போது கூட இப்படி வியர்த்தது இல்லை. ஒரே மூச்சில் வாசித்துவிட்டு 'எங்கே அவன்?' என்று நிமிர்ந்தார்.&lt;br /&gt;அப்பாவுக்கும் அதே பயம் போல. 'எப்படி இருக்கு?' என்றார்.&lt;br /&gt;'வசந்தி அக்கா' என்று பெரும் குரலெடுத்து 'கவிஞரை வரச்சொல்லுங்க' என்றார்.&lt;br /&gt;அப்பாவுக்குப் பெருமிதம் கண்ணிலும் முகத்திலும் வழிந்தது.&lt;br /&gt;அம்மா பதுங்கிக் கொண்டிருந்த என்னை இழுத்த இழுப்பில், உற்சாகமும் கர்வமும் ஒரே நேரத்தில் தலைக்கேறி இருக்க வேண்டும்.&lt;br /&gt;'போ... அண்ணன் கூப்பிடுறான் இல்ல...' என்ற அதட்டல் இப்பவும் என் காதில் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.&lt;br /&gt;நான் கவிஞனாவதற்கான சகல தகுதிகளையும் ஏற்படுத்தி, கருத்து ரீதியாக என்னை ஆட்கொண்டவர் žனு அண்ணன். அம்மா பெயரை பாரதியோடு இணைத்து 'பாரதி வசந்தன்' என்று எழுதியிருந்த புனைப்பெயரும் நன்றாக இருக்கிறது என்றார்.&lt;br /&gt;புனைப்பெயருக்காக அம்மாவும் நானும் பல பெயர்களைப் பட்டியலிட்டுத் தேர்ந்தெடுத்தோம். 'பாரதி வசந்தன்' என்றொருவர் எழுதிக் கொண்டிருக்கும் தகவல் எங்களுக்கு அப்போது தெரியாது.&lt;br /&gt;அவரும் பெரிய பிரபலம் இல்லை ஆதலால் அப்பெயர் புதிதாக எங்களுக்குத் தோன்றியதாகவே அப்போது நினைத்திருந்தோம்.&lt;br /&gt;கவிதையை அப்பா சார்ந்திருந்த கட்சிப் பத்திரிகையான 'தமிழர் கண்ணோட்டம்' இதழுக்கு அனுப்பலாம் என்று சொல்லியது அண்ணன்தான். முதல் பக்கத்தில் என்னைப் பற்றிய விவரம் முழுக்க எழுதப்பட்டது. விபரம் என்றால் வயது, முகவரி, படிப்பு போன்ற குறிப்புகள்.&lt;br /&gt;அப்பாவின் பெயரோ, அப்பாவின் பார்வைக்கு கவிதை பட்டதாகவோ அதில் குறிக்கப்படவில்லை. காரணம் கட்சிப் பத்திரிகை என்பதால் உண்மையான தகுதி அப்பாவின் பெயரால் அறியப்படாது போகலாம் இல்லையா?&lt;br /&gt;அல்லது கட்சித் தோழரின் மகன் என்பதால் கவிதையை மீறி கரிசனம் மேலோங்கிவிடக் கூடும் அல்லவா?&lt;br /&gt;žனு அண்ணன் தன் கைப்பட எழுதி அக்கவிதையை அனுப்புவதாக எடுத்துப் போனார்.&lt;br /&gt;அம்மாவுக்கு, 'žனுவே நல்லா இருக்குன்டாண்டா' என்று நாள் முழுவதும் பேசியதோடு நில்லாமல், வீட்டுக்கு வருகிற எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;எழுதியதற்கே கொண்டாடும் என் வீடு அக்கவிதை பிரசுரமானால் எப்படிக் கொண்டாடும் என யோசித்து, சாமி மாடத்திற்குப் போய் திரு·று பூசிக் கொண்டேன்.&lt;br /&gt;இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அறிவு சூழ்ந்த பிரதேசத்தில் என் ஆன்மா எதையோ தேடத் தொடங்கிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;தரையில் கால் பாவாமல் நடக்கவும், கண்களை வான்நோக்கி விரிக்கவும், நடு வகிடு எடுத்து žவிப்பார்க்கவும் ஆசையாய் இருந்தது.&lt;br /&gt;ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டு யாருமில்லாத வெளியை, வெறிகொண்டு காதலிக்கத் தோன்றியது.&lt;br /&gt;'மந்திரச் சக்தி' வாய்த்துவிட்ட ஒருவரின் மனநிலைக்கு முற்றிலும் நான் இடம்பெயர்ந்திருந்தேன்.&lt;br /&gt;இன்றைக்கு என்னால் விவரித்துக் கூற முடிகிற அத்தனை விஷயங்களையும் 'அந்தக் கணமே' எனக்குள் ஊற்றியது என்றால் தவறாகாது.&lt;br /&gt;žனு அண்ணன் மேலும் என் மீது பிரியமானார். இம்முறை கூடுதலாக எனக்குக் கவிதைப் புத்தகங்களை சிபாரிசு செய்யத் தொடங்கினார்.&lt;br /&gt;பத்திரிகைகளில் வெளிவரும் கவிதைகளைக் கத்தரித்து எனக்காக எடுத்து வருவார்.&lt;br /&gt;கவிதைக்கு எதுஎது முக்கியம் என்பதுபோல அவரது பேச்சு அமைந்திருக்கும். பிச்சுமூர்த்தி தொடங்கி ஈரோடு தமிழன்பன் வரை எனக்காக மீளவும் ஒருமுறை படிக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;நான் எத்தனை அதிர்ஷ்டக்காரனாக இருந்திருக்க வேண்டும்? எனக்காக எல்லோரும் சேர்ந்து உழைக்கத் துவங்கினார்கள்.&lt;br /&gt;அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அனுப்பிய கவிதை திரும்பி வந்தது.&lt;br /&gt;- பயணம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-6590304197693548606?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/6590304197693548606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=6590304197693548606&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/6590304197693548606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/6590304197693548606'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_5429.html' title='நடைவண்டி நாட்கள்: நான்கு'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-8706120828125190484</id><published>2008-06-04T23:57:00.000-07:00</published><updated>2008-06-04T23:58:26.043-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: மூன்று</title><content type='html'>&lt;strong&gt;இ&lt;/strong&gt;ரண்டாவது சுற்று தேடலிலும் சித்தப்பா செல்வம் சிக்காமல் போனது பெரிய துக்கமாக இருந்தது.&lt;br /&gt;அது துக்கமல்ல, அச்சம்!&lt;br /&gt;அவருடைய ஒரு முகவரியைத் தவிர எங்களிடம் வேறு யாருடைய முகவரியும் இல்லாதது அச்சத்தை அதிகப்படுத்தியது.&lt;br /&gt;பெரிய பெரிய கட்டிடங்கள், ·ண்ட அகன்ற சாலைகள், நெரிசல் பிதுங்கும் கடைத்தெருக்கள்.&lt;br /&gt;பார்த்த, பழகிய முகங்கள் அற்றுப்போன கான்கிரீட் வனாந்திரத்தில் தோள்பைகள் சுமந்த இரண்டு நாட்டுப்புறத்து இளைஞர்களை ஏறிட்டு விசாரிக்க எவருமே இல்லை.&lt;br /&gt;žனிவாசனுக்கு தொலைபேசி செல்வம் வேறு எங்கேயாவது கிடைப்பாரா என்று வினவினோம். தெரியாது என்றும், தெரிந்த யாரிடமாவது விசாரிக்கிறேன் என்றும் அன்பு பொழிந்தார்.&lt;br /&gt;ஆனாலும், அகப்பட்ட ஒருவரை மேலும்மேலும் தொந்தரவுக்கு ஆளாக்குவதுபோல உணர்ந்தோம். கையறு நிலை.&lt;br /&gt;பயணக் களைப்பும், நடந்த சோர்வும் சேர்ந்து கொள்ள, எழும்பூர் ரயில்வே குடியிருப்பு வளாகத்தில் உள்ள தும்பை மர நிழலில் உட்கார்ந்து கொண்டோம்.&lt;br /&gt;மரத்தருகே கல்யாண மண்டபம். அன்று முகூர்த்த தேதியாய் இருந்திருக்க வேண்டும். மகிழ்ச்சியோடும் கையில் பரிசுப் பொருட்களோடும் நிறையபேர் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;சரணவனுக்கு வயிற்றைப் பசி கிள்ளுவதாகச் சொன்னபோது மணி பனிரெண்டு இருக்கலாம். உச்சி சூரியன் எங்கள் அறியாமையைக் குதறுவது மாதிரி அடித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;அவசரப்பட்டுவிட்டோமோ?&lt;br /&gt;žனிவாசன் மாதிரி மேலும் சிலரது அறிமுகங்கள் கிடைக்காமல் ஒரே ஒரு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு கிளம்பியது எத்தனை புத்தியற்ற செயல் எனப்பட்டது.&lt;br /&gt;வாழ்க்கை எளிதுதான். ஆனால், அதை நம்முடைய அறியாமையைதான் மாபெரிய சிக்கலாக்கி சிதைத்துவிடுகிறது.&lt;br /&gt;கதை, கவிதை, கட்டுரை - எதில் சிறந்து விளங்கினாலும் யதார்த்ததைப் படிக்க அல்லது பழகிக்கொள்ள தவறுவோமேயானால் அதோகதிதான்.&lt;br /&gt;நடப்பவற்றைப் பாடமாக எடுத்துக்கொள்வதா? இல்லை பகிரங்கமாக முட்டிக்கொள்வதா எனப் புரியவில்லை.&lt;br /&gt;காலை உணவை தெருவோரத்தில் இருந்த கையேந்திபவனில் முடித்துக் கொண்டோம். இருக்கும் சொற்பத் தொகையை எண்ணிஎண்ணி செலவழித்தாலன்றி, வேலை கிடைக்கும்வரை நாட்களை ஓட்ட முடியாது.&lt;br /&gt;ஆயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து ரயில் கட்டணம் போக மீதமிருப்பவற்றை டிக்கெட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியிருந்தேன். ரூபாயின் அருமையை சில்லறைக் காசுகளிலிருந்து முதன்முதலாக உணரத் தொடங்கினேன்.&lt;br /&gt;சரவணன் கொண்டு வந்த ரூபாயும் அவ்விதமே பாதுகாக்கப்பட்டது. புகைக்கும் ஆசையை வலுக்கட்டாயமாகத் தவிர்க்கத் தொடங்கிய சரவணன், விலைகுறைந்த சிகரெட்டுக்கு மாறிவிடுவதாக சபதம் ஏற்றான்.&lt;br /&gt;சூழல், இருக்கும் தைரியத்தை உடைப்பதுபோலவே இல்லாத தைரியத்தை வரவழைக்கும் சக்தியுடையது.&lt;br /&gt;நமக்காவது ஒரு முகவரி கையில் உள்ளது. இன்று இல்லையேல் நாளையோ, நாளை மறுநாளோ அதைக் கண்டுபிடித்துவிடலாம்.&lt;br /&gt;ஆனால் எந்த முகவரியும் இல்லாமல் எத்தனை பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?&lt;br /&gt;ஹாரிங்டன் சாலையின் நடைபாதையோர குடிசைகளைப் பராக்கு பார்த்துக் கொண்டே இரண்டு பேரும் பிதற்றிக் கொண்டோம்.&lt;br /&gt;வீதிகள் பிடித்ததுபோலவும், பிடிக்காதது போலவும் மாறி மாறி தோன்றின.&lt;br /&gt;யாரோ ஒருவருடைய வீட்டின் காம்பவுண்ட் நிழலில் கொஞ்ச நேரம் நின்றால் தேவலாம் போலிருந்தது.&lt;br /&gt;நின்றதும், சரவணனுக்கு தீப்பெட்டி தேவைப்பட, அருகே நின்றிருந்த ஆட்டோக்காரரிடம் வாங்கித் தந்தேன். ஆட்டோவின் முகப்பில் 'தமிழரசி' என்று விளம்பரக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.&lt;br /&gt;'தமிழரசி' - புதியபார்வை பதிப்பகத்திலிருந்து வெளிவரத் தொடங்கியிருந்த வார இதழ்.&lt;br /&gt;எனக்கும் சரவணனுக்கும் 'தமிழரசியில் சில கவிதைகள் பிரசுரமாகியிருந்தன. சரவணனுக்கு ஏற்கனவே அறிமுகமாயிருந்த சுந்தரபுத்தன் அங்குதான் பணியாற்றிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடைபெறும்போது, 'தஞ்சை மணி' என்ற பெயரில் இரா. செழியன் நடத்திய இதழில் பணிபுரிந்தவர்.&lt;br /&gt;'காவ்யா' எனும் பெயரில் கையெழுத்துப் பத்திரிகை மூலம் எங்கள் பகுதியில் பிரசித்தி பெற்றிருந்தவர். ஆட்டோக்காரரிடம் தீப்பெட்டியைக் கொடுத்துவிட்டு, 'தமிழரசி' அலுவலகம் எங்கிருக்கிறது என்று கேட்க, ஒட்டப்பட்டிருந்த பிட் நோட்டீஸைப் பார்த்து 'டிடிகே சாலை' என்றார்.&lt;br /&gt;அது ஆழ்வார்பேட்டை பகுதியில் இருக்கிறது என்றும், 'வேண்டுமானால் வாருங்கள். இறக்கிவிட்டுப் போகிறேனே?' என்றார்.&lt;br /&gt;சரவணனுக்கு ஆட்டோவுக்குச் செலவழிக்க விருப்பமில்லை. 'நடந்தே போகலாம்' என்றான்.&lt;br /&gt;'ரொம்ப தொலைவு' என்ற ஆட்டோக்காரர் கண்கள் சுளித்து, மிதமாக முறைத்தது 'ஐயேய்' என அருவெறுப்பாக இருந்தது.&lt;br /&gt;தீப்பெட்டி இலவசமாகக் கொடுத்ததே தவறுபோல பார்த்து, விருட்டென்று கிளம்பிவிட்டார். நடக்கத் தொடங்கினோம்.&lt;br /&gt;செல்வத்தை மறந்தேவிட்டோம். நடக்கப் பிடித்தது.&lt;br /&gt;கூடுதல் உற்சாகமும் புதிய நபரை சந்திக்கப் போகும் துறுதுறுப்பும் எங்கள் கால்களைக் கவ்விக் கொண்டன.&lt;br /&gt;பத்திரிகை அலுவலகம் எப்படி இருக்கும் என்று எனக்குள் இருந்த கற்பனைக்கு பொருத்தமாக 'தமிழரசி' அலுவலகம் அமைந்திருந்தது. இரண்டாவது தளத்தில் உள்ள வரவேற்பு வளாகத்தில் அமரும்வரை என் கண்கள் வியப்பில் இருந்து மீளவே இல்லை.&lt;br /&gt;சுந்தரபுத்தன் அச்சுப்பிரிவில் இருப்பதாகவும், வரும்வரை காத்திருக்கும்படியும் சொன்னார்கள். 'சஸ்பென்ஸ்' அலுவலகத்தை விடவும் 'தமிழரசி' அலுவலகம் வரவேற்பு நல்கிய விதம் எங்களுக்குப் பிடித்துப் போனது.&lt;br /&gt;இரண்டு பேருக்கும் முகத்தில் சிரிப்பு தவழ்ந்தது. காத்திருக்கத் தகுந்த இடமாகப் பட்டது. காலையிலிருந்து நடந்த நடைக்கு ஓய்வுகொள்ள அந்தக் காத்திருப்பை முழுதாக அனுபவிக்க கண்கள் தூக்கத்தை துழாவின.&lt;br /&gt;மெய்மறந்து இங்கேயே தூங்கிவிட்டால் கூட பரவாயில்லை போலிருந்தது. சோபாவில் சரிந்து கொண்டோம்.&lt;br /&gt;"வாங்க" என்ற குரல் கேட்டு இமை பிரிக்கையில் சுந்தரபுத்தன் எதிரே நின்றிருந்தார்.&lt;br /&gt;"நலமா?" என்று ஆரம்பித்து, வந்த விபரம், செய்ய வேண்டிய உதவி குறித்து எல்லாம் கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;செல்வத்தை தேடிய கதையைக் கேட்டதும், "நல்லது செல்வத்தை தேடித்தான் நானும் சென்னைக்கு வந்தேன்" என்றார்.&lt;br /&gt;"எதைத் தேடுகிறோமோ, அது கிடைக்க காத்திருக்க வேண்டும். நான் தேடிய செல்வம் மாதச் சம்பளமாகக் கிடைக்கிறது. ·ங்கள் தேடும் செல்வம் žக்கிரம் கிடைத்துவிடுவார்" என்றார்.&lt;br /&gt;தே·ர் வரவழைத்துக் கொடுத்தார். உபசரிக்க கொடுத்த தே·ர், விலைகொடுத்து நாங்கள் குடித்த தே·ரைப்போல மோசமாக இல்லை.&lt;br /&gt;இனாமாக எது கிடைத்தாலும், அது அன்றைக்கு இருந்த நிலைக்கு பிடித்தே போயிருக்கும்.&lt;br /&gt;"தங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?" என்ற கேள்வியை சுந்தரபுத்தன் எதிர்பார்த்திருக்க மாட்டார்.&lt;br /&gt;"வேறு வழியில்லை" என்றோம். சுந்தரபுத்தன் முகத்தில் மாற்றம் தென்படவில்லை.&lt;br /&gt;"நான் எழும்பூரில் தங்கியிருக்கிறேன். அது ஆய்வு மாணவர்கள் தங்கும் விடுதி. இன்னொருவர் தயவில்தான் நானே தங்கியிருக்கிறேன்" என்ற பிறகுதான் கேள்வியைத் தவிர்த்திருக்கலாமோ என எண்ணினோம்.&lt;br /&gt;"அலுவலகம் முடிய மாலை ஆறு மணியாவது ஆகிவிடும். அதுவரை விடுதி வாசலில் காத்திருங்கள். வந்த பிறகு வேறு யாருடைய அறையிலாவது தங்க முடியுமா? எனக் கேட்போம்" என்றார்.&lt;br /&gt;ஆறுதலாய் இருந்தது. உதவிகூட வேண்டியதில்லை. உதவி செய்வதாகச் சொல்லிய அவரது மனோபாவத்தை அலுவலகத்தின் வெளியே வந்தது முதல் புகழத் தொடங்கினோம்.&lt;br /&gt;"இனி நடக்க இயலாது. பேரூந்தில்போய் விடுதி வாசலில் காத்திருப்போம்" என்றேன்.&lt;br /&gt;"அவர் வரும்வரை ஒரே இடத்தில் காத்திருக்க முடியாதே? ஒன்று செய்யலாம், மெரீனாவுக்குப் போய் கடலை தரிசித்துவிட்டு பிறகு விடுதிக்குப் போகலாம்" என்றான் சரவணன்.&lt;br /&gt;பேரூந்தில் கூட்டமில்லை. படிக்கப்பட்டுப் பக்கவாட்டில் அமர்ந்திருந்த நடத்துனரிடம் மெரீனாவுக்கு இரண்டு டிக்கெட் என்றேன்.&lt;br /&gt;"மெரீனாவில் எங்கே?" என்றார்.&lt;br /&gt;மெரீனா சாலையில் மூன்று நிறுத்தம் உள்ளது புரியாமல், மீண்டும் மெரீனாவுக்கு என்றேன்.&lt;br /&gt;ஆட்டோக்காரரின் தம்பிபோல, நடத்துனரும் அதேமாதிரி முறைத்தார்.&lt;br /&gt;அவர்கள் முறைத்தது சென்னை எங்களைப் பார்த்து முறைப்பதுபோல் இருந்தது.&lt;br /&gt;"கண்ணகி சிலை" என்றேன்.&lt;br /&gt;இருவருக்கும் மெரீனாவில் தெரிந்த ஒரே இடம், கடலுக்கு அப்புறம் கண்ணகி சிலைதான்.&lt;br /&gt;"ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொள்" என்று சரவணன் ஒதுங்கினான்.&lt;br /&gt;நடத்துனரின் இருக்கைக்கு முன்பு ஒரு கல்லூரி மாணவி அமர்ந்திருந்தாள். நடத்துனரும் மாணவியும் பேசிக்கொண்டே வந்தார்கள்.&lt;br /&gt;அந்தப் பெண் அழகாய் இருந்தாள். அழகாய் இருப்பது பெண்களுக்கு வாய்த்திருக்கும் இயல்புகளில் ஒன்று.&lt;br /&gt;நடத்துனரோடு பேசும்போது மிக அழகாய் இருந்தாள்.&lt;br /&gt;மஞ்சள் நிற சுடிதாருக்கு ஏற்ப, மஞ்சள் கம்மல், மஞ்சள் வளையல், மஞ்சள் கைக்குட்டை என சகலமும் மஞ்சளாய் அப்பெண் தோற்றமளித்தாள்.&lt;br /&gt;மஞ்சளின் மகிமையை எங்களைவிட நடத்துனர் நன்கு அறிந்தவராய் இருந்தார்.&lt;br /&gt;மஞ்சள் வெயில் குளிரத் தொடங்கியது.&lt;br /&gt;- பயணம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-8706120828125190484?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/8706120828125190484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=8706120828125190484&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8706120828125190484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/8706120828125190484'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_5454.html' title='நடைவண்டி நாட்கள்: மூன்று'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-6003960171342558499</id><published>2008-06-04T23:55:00.000-07:00</published><updated>2008-06-04T23:56:37.359-07:00</updated><title type='text'>நடைவண்டடி நாட்கள்: இரண்டு</title><content type='html'>&lt;strong&gt;எ&lt;/strong&gt;ன் பயணம் மிகச்சாதாரண ஒருவன் தன் அடிப்படை ஜ“வாதாரத் தேவைகளுக்காக நடத்திய சமரே அன்றி அதைச் சிலாகித்துப் புகழ ஒன்றுமில்லை.&lt;br /&gt;ஆயினும் இந்தச் சமருக்காக என்னை நான் இழந்தும், சிற்சில இடங்களில் தொலைந்தும் போயிருக்கிறேன்.&lt;br /&gt;யார் ஒருவரையும் சூழ்நிலையே உருவாக்குகிறது. கெட்டவனாக சமூகம் சுட்டுகிற நபரைக் கூட!&lt;br /&gt;என் சூழல் வெகு இலகுவாக என்னை உயரம் ஏற உதவியிருக்கிறது. எனக்குக் கிடைத்த சூழலும் வாய்ப்புகளும் இன்னொருவருக்கு கிடைத்திருக்குமேயானால் அவரும் என் போலவே ஆகியிருக்கக்கூடும் என்று சொல்வதில் தவறில்லை.&lt;br /&gt;நினைத்தால் வேடிக்கையாகவும் குருட்டு தைரியமாகவும் தோன்றுகிறது; எழுத்தை முழு நேரத் தொழிலாக வைத்துக் கொண்டு பொருள் ஈட்டி, என் பெற்றோரை அவர்கள் பட்டுக் கொண்டிருந்த கஷ்டங்களிலிருந்து முற்றாக வெளிவிக்க இயலும் என்று நான் நம்பியது!&lt;br /&gt;இங்குதான் நம்பிக்கையின் பிரதிபலனை உணர வேண்டியிருக்கிறது. நம்பிக்கை எந்த வடிவத்தில் உருக்கொண்டாலும் அது ஒருபோதும் பொய்ப்பதே இல்லை.&lt;br /&gt;அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி (பத்தாம் வகுப்பு) மட்டுமே படித்த தாய், தகப்பனின் மூத்த மகனான என்னாலும் ஓடிக்கொண்டிருக்கும் பெருநகரத்து நெரிசலிலிருந்து மீண்டுவர முடிந்திருக்கிறது.&lt;br /&gt;வசந்தகுமாரி என்பதுதான் அம்மாவின் பெயர். ஆனால், வசந்தம் என்ற சொல் அம்மாவின் அகராதியில் வறுமையாகவும் அழுகையாகவும் அமைந்திருந்தன.&lt;br /&gt;பரமசிவம் என்ற பெயருடைய ஒருவர் நாத்திகத்தை நம்புகிறவராகவும் எனக்கு அப்பாவாகவும் இருக்க நேர்ந்தது.&lt;br /&gt;அப்பா அம்மாவின் முன்கதை சுருக்கங்கள் எந்த வகையிலும் என் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை. அவர்கள் அடைந்த சங்கடங்கள் முழுக்கவும் என் சகாப்தத்திற்கான படிக்கட்டுகளாக மாறிவிட்டன. ஆரம்பத்தில் பஞ்சாலைத் தொழிலாளியாக இருந்த அப்பா படிப்படியாக தொழிற்சங்கவாதியாகி, பொதுவுடமைக் கட்சிக்கு தன்னை ஒப்படைத்திருந்தார்.&lt;br /&gt;என் பிறப்புக்கு சில வருடங்கள் பின்பாக, அவர் முழு நேரக் கட்சி ஊழியராக மாறிப்போனதால், வருமானமில்லாத வாழ்வை நகர்த்த அம்மா பெரும்பாடு பட்டிருக்கிறார். உலகம் முழுமைக்கும் சமத்துவம் என்ற கோஷத்தை முன்வைக்கும் அவருடன் இல்லத்துணைவியாக மாத்திரமே அம்மா இருந்திருக்கிறார்.&lt;br /&gt;உள்ளத் துணைவியாக அப்பாவுக்கு கட்சியும், கட்சி நடவடிக்கைகளும் என்றாகிவிட்டது. எனவே சதா அலமாரியிலிருக்கும் கம்யூனிஸ நூல்களில் அவர் காலம் விரயமானது. படிப்பது, படித்ததை மற்றவர்க்கு விளக்கமாக உரைப்பது, என்பதோடு அவரது செயல்பாடுகள் அத்தனையும் பொதுச்சேவைக்கானவை, மக்களுக்கானவை!&lt;br /&gt;1980-களில் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாக இருந்தது ஈழப்பிரச்னை. சில மைல்களுக்கு அப்பால் உள்ள இலங்கைத் தீவில் தமிழர்கள் இனப்படு கொலைக்கு ஆளாகி, இன்னலில் உழல்வதை, இங்கிருக்கும் அத்தனை இயக்கங்களும் வன்மையோடு கண்டித்து ஊர்வலும் ஆர்ப்பாட்டமும் நடத்தின. தமிழ் இன உணர்வு பொங்கிப் பிரவகித்த வருடம் அது!&lt;br /&gt;பள்ளிக்கூடங்களில் கூட அந்தப் பிரச்னையின் எதிரொலியைக் கேட்க முடிந்தது. ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் உடுப்பும் சேகரித்துக் கொடுத்தார்கள். மருந்து மாத்திரைகள் வசூலித்து அனுப்பப்பட்டன.&lt;br /&gt;பிரச்னையின் முழு வீரியம் தெரியாவிடினும், ஏதோ அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் என் வயது சிறார்களுக்குத் தெரியவந்தது.&lt;br /&gt;பத்திரிகையை, அதாவது வார  தின பத்திரிகையை தவறாமல் வாசிக்கும் பழக்கம் அப்பா மூலம் எனக்கும் தொற்றிக் கொண்டது. பத்தி, பத்தியாகப் புகைப்படங்களோடு வரும் அச்செய்திகள் மூலம் இலங்கையில் நடக்கும் இனப்பிரச்னையைப் பற்றி என்னாலும் யூகிக்க முடிந்தது.&lt;br /&gt;மேலதிக தகவல்களை அப்பா ஏதோ ஒரு சமயத்தில் விளக்கப்படுத்தினார். என் வீட்டின் சின்ன ஜன்னல் வழியே, உலகத்தின் சகல திசைகளையும் உணர அப்பாவே உதவினார்.&lt;br /&gt;அப்பாவின் நண்பர்கள் பலரும் சிவப்பு சிந்தனைகளால் பழுத்தவர்கள். பொதுவுடைமைக் கட்சிக்கு தம் பங்களிப்பை செலுத்த அப்பாவால் பணிக்கப்பட்டவர்கள். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்றும் பொதுவுடமைகைக் கட்சியே தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றிருப்பதற்கு இவர்களே காரணம் என்றால் அது மிகையில்லை.&lt;br /&gt;பத்திரிகைகளைப் போலவே பலதரப்பட்ட இயக்கத் தோழர்கள் எங்கள் வீட்டில் புழங்குவார்கள். கட்சிப் பாகுபாடு இல்லாமல் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் ஜனநாயக மரபுக்கு, அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் பழகியிருந்தார்கள்.&lt;br /&gt;வாசித்த நூல்கள் தொடங்கி, வரப்போகும் மாற்றங்கள் வரை எங்கள் வீட்டு முற்றத்தில் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;அவ்வப்போது தே·ர் கொண்டுபோகும் சாக்கில் நானும் அம்மாவும் அந்த உரையாடல்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.&lt;br /&gt;ஈர்ப்பின் எதிர்வினையை விடவும் அந்த உரையாடல்கள் நடத்தும் பாடங்கள் ருசிகரமானவை.&lt;br /&gt;எதைத்தான் அவர்கள் பேசவில்லை?&lt;br /&gt;இலக்கியம் என்றால் சங்கம் தொடங்கி சமகாலம் வரை அலசுவார்கள். அரசியல் என்றால் மார்க்ஸ் தொடங்கி பெரியார் வரை உசாசுவார்கள்.&lt;br /&gt;இந்தப் பூமியின் அத்தனை புதிர்களையும் அவிழ்த்துவிடும் ஆவேசப் பேச்சில் தன்னை இழந்து கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;சமயத்தில் வாதங்கள் விதண்டவாதங்களாகிவிடுவதும் உண்டுதான். தோழர்கள் இரண்டு பேர் காட்டமாக பிரச்னையின் நுட்பம் புரியாமல் விவாதித்துக் கொண்டிருக்கையில் அப்பா சொல்வார்: "வாதங்கள் பிரச்னையை அலசுவதாக அமையவேண்டுமே தவிர, நட்பை பிரச்னையாக்கிவிடக் கூடாது."&lt;br /&gt;தெளிவுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தும் ஒருவர் எனக்கு அப்பாவாகக் கிடைத்தது நான் செய்த புண்ணியம்.&lt;br /&gt;வீடுதான் நம்மை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரமான பாடசாலை.&lt;br /&gt;பரீட்சை பயமில்லாமல் தன் இஷ்டப்படி விரும்பும்போது படித்து தேறும் இடம்.&lt;br /&gt;ஒழுங்குகளை உடன் வரப்போகும் தைரியங்களை இயல்பாக்கிக் கொள்ளும் இடம்.&lt;br /&gt;வசதிகுறைந்த வீடு என்றாலும்கூட, எங்கள் வீட்டின் விசாலமும் நிறைந்தே இருக்கும் நட்புறவுகளும் என்னை வளப்படுத்திய வரங்கள்.&lt;br /&gt;வீட்டுக்கு வந்து அப்பாவோடு விவாதிப்பவர்களின் முகங்களை அவர்களின் வாயசைப்புகளை கவனிக்கும் இடத்தில் இருந்த நான், நாளடைவில் அந்த விவாதங்களில் பங்கேற்கவும் கூடுதலான தெளிவு பெறவும் வாய்ப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;சின்னச்சின்ன வாக்கியங்களைச் சேர்த்து கவிதைபோல் கிறுக்கி அம்மாவிடம் காண்பிக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;அரசுப் பள்ளிகள் எங்கள் பகுதியில் இல்லாததால், ஆங்கில வழிப் பள்ளியில் சேர்ப்பிக்கப்பட்டிருந்தேன்.&lt;br /&gt;வீடு முழுக்க தமிழ். ஆனால் என் கல்வி ஆங்கில வழியில் நடந்தது!&lt;br /&gt;மெக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாவது தேறியபோது, எப்படியோ எனக்குள் கவிதைகளும், கவிதை மீதான பிரியமும் குவிந்துவிட்டன.&lt;br /&gt;இன்றும் நான் நம்புவது; என் கவிதைக்கான காரணப் பொருள்கள் வீட்டில் நடந்த விவாதங்களே!&lt;br /&gt;சமூகத்தின் மீது அவ்விவாதங்கள் வைத்த விமர்சனமும், எதிர்வினையுமே என்னைக் கவிதை எழுதத் தூண்டின.&lt;br /&gt;அப்பா தீவிரமான நாத்திகர், அம்மா மிகத் தீவிரமான பக்தை!&lt;br /&gt;இரண்டொரு சந்திப்பிலேயே எவரையும் தன் கருத்துக்கு மாற்றிவிடக்கூடிய வல்லமை பொருந்திய அப்பா, இன்றுவரை அம்மாவின் நம்பிக்கைக்கு குறுக்கே நின்றதில்லை.&lt;br /&gt;போலவே, அப்பாவின் புரட்சிகர நம்பிக்கைக்கு அம்மாவும் ஊறு செய்யத் துணிந்ததில்லை.&lt;br /&gt;இரண்டு துருவங்களாக அவர்களது நம்பிக்கைகள் இருந்தபோதிலும் கூட, தனித்தனி கொள்கைகளோடு இல்லற நெருக்கத்தில் அவர்களால் இயங்க முடிந்தது.&lt;br /&gt;அம்மாவுக்கு எல்லா பிள்ளைகளையும் போல நான் இருப்பதில் விருப்பமில்லை. நான் தனித்து தெரிய வேண்டும். தரமும் ஒழுங்கும் கூடின அதே சமயம் தனித்துவமான பிள்ளையாக என்னை வளர்த்திருப்பதில் அம்மா காட்டிய அக்கறையும், அதற்காக அடைந்த அவஸ்தையும் கொஞ்ச நஞ்சமல்ல.&lt;br /&gt;பாடப் புத்தகங்களைத் தவிரவும், நான் படிப்பதற்கென்றே தன் தேவைக்கு வைத்திருக்கும் செருவாட்டுக் காசுகளைச் செலவழிப்பாள்.&lt;br /&gt;படிப்பதைப் பற்றியும் படித்த பிறகு அவ்விஷயங்கள் குறித்து பேசவும் அம்மாவுக்குப் பிடிக்கும்.&lt;br /&gt;அப்பாவுக்குப் பெரியார் என்றால், அம்மாவுக்கு பெரியாழ்வார்!&lt;br /&gt;முரண்கள் உருவாக்கிய முழுமை என்னைக் கவிதைப் பக்கம் திருப்பியது.&lt;br /&gt;இலங்கை இனப்பிரச்னை பற்றி 'ஈழ இயக்கம்' என்றொரு கவிதை எழுதி அம்மாவிடம் காட்டினேன்.&lt;br /&gt;கவிதை என்று நான் சொல்வது என் வசதிக்காக!&lt;br /&gt;ஒற்றுப் பிழைகள் நிறைந்த அந்தக் கவிதைக் கிறுக்கலை அம்மா திருத்திக் கொடுத்தாள். அதுவரை என் இயற்பெயர் பிரேம்குமார் என்றிருந்தது. அம்மாவுக்கு அப்பெயர் கவிதை எழுதுவதற்கான பெயராகத் தோன்றவில்லை.&lt;br /&gt;'புனைப்பெயர் வைத்துக் கொள்' என்றார்.&lt;br /&gt;'பெயரில் என்ன இருக்கிறது?' என்றேன்.&lt;br /&gt;'பெயரில்தான் எல்லாம் இருக்கிறது' என்றார்.&lt;br /&gt;இன்றும் அம்மா அப்படிச் சொன்னதற்கான பொருள் விளங்கவே இல்லை.&lt;br /&gt;பெயரில் ஏதாவது இருக்கிறதா என்ன?&lt;br /&gt;- பயணம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-6003960171342558499?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/6003960171342558499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=6003960171342558499&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/6003960171342558499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/6003960171342558499'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_8871.html' title='நடைவண்டடி நாட்கள்: இரண்டு'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-6762899393265515394</id><published>2008-06-04T23:53:00.000-07:00</published><updated>2008-06-04T23:54:54.504-07:00</updated><title type='text'>நடைவண்டி நாட்கள்: ஒன்று</title><content type='html'>&lt;strong&gt;எ&lt;/strong&gt;த்தனையோ பேர் வந்திறங்கிய சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நானும் சரவணனும் வந்திறங்கிய அந்த அதிகாலை மார்கழியை நினைத்துப் பார்க்க, நெகிழ்வு கூடி, நெஞ்சு கனக்கிறது.&lt;br /&gt;நோக்கமும் ஏக்கமும் கூடின மனநிலையில் கவிழ்ந்திருந்த பனி இரவு மெல்ல விடியும் வரை எதிரே இருந்த தே·ர்க் கடையில் பேசிக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;பேசுவதற்கு வார்த்தைகள் தவிர வேறு எதையும் நாங்கள் கொண்டு வரவில்லை. இரண்டு கருத்த இளைஞர்கள் தன் கடையில் தேநீர் பருகியதை விசேஷ விஷயமாக அக்கடைக்காரர் கருதவும் இல்லை.&lt;br /&gt;யாரோ இரண்டு பேர் நான்கு ரூபாய் வியாபாரத்திற்கு உதவினார்கள் என்பதற்காக அவர் சிரித்தபோது, நாங்களும் பதிலுக்குச் சிரித்து வைத்தோம்.&lt;br /&gt;ரயில் நிலையத்தை ஒட்டிய காலனியில் சரவணனின் சித்தப்பா இருப்பதாக எப்போதோ ஒருமுறை தஞ்சாவூருக்கு வந்திருந்தபோது கொடுத்திருந்த முகவரிச் சீட்டை நைந்து போன தோல்பையின் அடிப்பகுதியிலிருந்து சரவணன் எடுத்துக் காட்டினான்.&lt;br /&gt;காலனிக்கு இடதுபுறத்தில் அந்த வீடு இருக்கிறதா, அல்லது வலதுபுறத்தில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.&lt;br /&gt;தேநீர்க் கடைக்காரரிடம் கேட்டிருக்கலாமே என பத்து சுற்று சுற்றிவிட்டு முடிவெடுத்தோம். எப்போதும் முடிவுகளை தாமதமாக எடுப்பதே எனக்கும் சரவணனுக்கும் வேலையாகிவிட்டது.&lt;br /&gt;நான் பட்டயப் பொறியியல் படித்துவிட்டு சென்னை வருவதாக இருந்த முடிவு தாமதப்பட்டுப் போயிருந்தது. ஏறக்குறைய இரண்டு வருடம் குடும்பத்தின் சூழலை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அலைக்கழிப்புக்கு ஆளாகியிருந்தேன். சரவணனும் கூட முதுகலை படித்து வருடங்கள் ஓடியிருந்தது.&lt;br /&gt;சென்னைக்குப் போய் என்ன செய்ய்ப போகிறீர்கள்? என்ற கேள்விக்கு இருவரிடமும் அப்போது பதில் இல்லை.&lt;br /&gt;சரவணனுக்கு சினிமாவும் எனக்குப் பத்திரிகை துறையும் கனவாக இருந்தன. கனவுகளைச் சுமந்து தஞ்சை தெருக்களில் நடந்த நாட்கள் இன்னும்கூட ஒளிர்கின்றன.&lt;br /&gt;ஜெயித்த மனிதர்களின் கதைகளையும் வரலாறுகளையும் பேசிப்பேசி உருவேற்றிக் கொள்வோம்.&lt;br /&gt;முடியும், நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை சில சமயம் 'நமக்கு யாருமில்லையே தடுக்கி விழுந்தால் தூக்கிவிட' என்பதுபோல தோன்றும்.&lt;br /&gt;உண்மையில், ஜெயித்தவர்கள் எல்லாம் இரட்டை மனநிலையை சாமர்த்தியமாகக் கையான்டவர்கள். இல்லாத தைரியத்தை இயல்பாக்கிக் கொண்டு அல்லது இருப்பதாக நினைத்துக் கொண்டு முயன்றவர்கள்தான்.&lt;br /&gt;முயல்வது ஒன்றே நம் வசம். மற்றபடி வெற்றியும் தோல்வியும் தகுதியும் காலம் வழங்குவன.&lt;br /&gt;முடிவு எதுவாயினும் சின்னதாகவேனும் முயன்று பார்ப்போம் என்று துணியவே தொடங்கியது எங்கள் பயணம்.&lt;br /&gt;கையில் இருந்த முகவரிச் சீட்டை கடந்து போன கண்களிடம் காட்டிக் காட்டி ஒருவழியாக அந்த வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம். அந்த வீடு, நிறைய இளைஞர்களால் சூழப்பட்டிருந்தது. எந்த முகமும் எங்களை விரட்டவில்லை.&lt;br /&gt;போலவே, எந்த முகமும் எங்களை நெருங்கி வந்து சிரிப்பை உதிர்க்கவில்லை. தே·ர்க் கடைக்காரர் சிரித்து சென்னைக்கு வந்ததை வரவேற்றாரே, அதுபோல கூட!&lt;br /&gt;சரவணன் தனது சித்தப்பா இங்கே வசிப்பதாக சொல்லிய தகவலை, ஒரே ஒருவர் செவியில் வாங்கிக் கொண்டு 'ஓ அவரா!' என்று இழுத்தார்.&lt;br /&gt;சித்தப்பா பெயர் செல்வம்.&lt;br /&gt;'செல்வமா, இங்கேதான் இருந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு வேறு எங்கேயோ தங்கிக் கொள்வதாகக் கூறி கிளம்பிவிட்டாரே' எனப் பேச்சை முடிக்க.... எனக்குப் பெருநகரத்து அச்சம் தொற்றிக் கொண்டது.&lt;br /&gt;'உங்களிடம் சித்தப்பாவின் தற்போதைய முகவர இருக்கிறதா?' என சரவணன் கேட்க, 'இல்லையே' எனப் பொட்டில் அறைந்தது போல முடித்துக் கொண்டார்.&lt;br /&gt;அந்த வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தோம்.&lt;br /&gt;இருந்த ஒரு முகவரியும் இல்லாத கணக்காகிவிட்டது. அதிகாலைப் பனி அறவே மறைந்து, சூரிய வெப்பம் உடலில் பரவியது.&lt;br /&gt;மீண்டும் ஒரு தேநீர்ப் பருகித்தான் இந்த தீர்க்க முடியாத சிக்கலை ஆலோசிக்க வேண்டும்போல் தோன்றிற்று.&lt;br /&gt;சிக்கல் என்றால் எதிர்பார்த்து நடப்பதில்லை. எதிர்பாராமல் நடந்து என்ன செய்வதென்றே தெரியாமல் போவதுதானே!&lt;br /&gt;தமிழர்கள் தங்களின் பெரும்பாலான சிக்கல்களுக்கு தே·ரில் தீர்வு கிட்டுவதாக நினைக்கிறார்கள். தேநீரில்தான் வாழ்வின் கசப்பும், இனிப்பும் சூடும் கலந்திருக்கின்றன.&lt;br /&gt;சரவணனுக்கு கூடுதலாகப் புகைக்க ஆசை.&lt;br /&gt;இழுத்து மெல்ல வெளிவிட்ட புகைக்குப் பின் சரவணனுக்கு சித்தப்பா மீது கோபம் கோபமாக வந்தது. கொடுத்த முகவரி மாறிவிட்டதைக் கூட சொல்லத் தவறிய அவரது உறவு அலட்சியத்தைப் பொருமித் தீர்த்தான்.&lt;br /&gt;வழியற்று நிற்கையில் வார்த்தைகளின் வெம்மையை மனதும் உதடும் ஏனோ வாரி இறைக்கின்றன.&lt;br /&gt;'சித்தப்பா எங்கே வேலை பார்க்கிறார்?' என்றேன்.&lt;br /&gt;"'சஸ்பென்ஸ்' என்ற மாத நாவல் வெளியீட்டகத்தில்" என்றான்.&lt;br /&gt;'அங்கே போய் விசாரிப்போமே' என்றேன்.&lt;br /&gt;விண்வெளி ஆராய்ச்சிக்கு விடை கண்டுபிடித்தது போல 'சரி' என்று சிரித்தான்.&lt;br /&gt;குளித்தால் தேவலாம் போலிருந்தது. எங்கே குளிப்பது?&lt;br /&gt;வீட்டு வாசலிலேயே நின்றிருந்தோம். சித்தப்பா வீடாக இல்லாமல் யாரோ சிலரின் வீடாக இருந்ததால் அங்கே குளிக்க வழியில்லை.&lt;br /&gt;ஹோட்டல் அறையெடுத்து காலைக்கடனை முடிக்கும் அளவுக்கு எங்களிடம் பணமும் இல்லை.&lt;br /&gt;'கொஞ்சம் தூரம் நடந்து வருவோமே? எழும்பூரில் நம்மைப் போன்ற நிராதரவு பிராணிகளுக்கு ஒரு இடம் கூடவா கிடைக்காது?' என்பதுபோல நடந்தோம்.&lt;br /&gt;பத்தடி நடந்ததும், எங்களைப் போல பையோடும், பார்வையில் பரிவோடும் ஒருவர் எதிர்பட்டார். அவரும் அந்த அறையில் வசிப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னைக் கவிஞனாக சரவணன் அறிமுகப்படுத்தினான்.&lt;br /&gt;சரவணனுக்கு நான் கவிஞன் என்பதில் சின்னதாய் கர்வம் உண்டு. என் நண்பன் மிகச்சிறந்த கவிஞன் என்று கொண்டாடும் பாங்கு சிலசமயம் என்னையும் மகிழ்ச்சிப்படுத்தும். என்னை அறிமுகப்படுத்தியதும் எதிர்பட்டவர் என் பெயரை பத்திரிகையில் பார்த்திருப்பதாகப் பெருமிதத்தோடு கூறிக்கொண்டார்.&lt;br /&gt;அந்த வார குமுதம் இதழில் கூட என் கவிதை பிரசுரமாகி இருந்ததால் அவர் முகம் மலர பேசத் தொடங்கி, தானும் கவிஞன் என்பதைத் தெரிவித்துக் கொண்டார்.&lt;br /&gt;பெயர் சீனிவாசன். ரயில்வேயில் பணிபுரிவதாகவும் சித்தப்பாவின் நெருங்கிய நண்பர் எனவும் பெருமைபட நெருக்கமானார்.&lt;br /&gt;சரவணனுக்கு மெல்ல சிரிப்பு வந்தது. சித்தப்பா மீது கொண்டிருந்த பொருமலை மாற்றிக் கொள்ளத் தொடங்கினான்.&lt;br /&gt;பத்திரிகையில் எழுதியதால் கிடைத்த அறிமுகம் முதல் நாள் குளியலுக்குப் பயன்பட்டது.&lt;br /&gt;குளித்து முடித்து அறையில் தலைவாரிக் கொள்ளும்போதுதான் சீனிவாசனிடம் என் கவிதை ஆல்பத்தை சரவணன் காட்டினான். பத்திரிகையில் வெளிவந்த கவிதைகளைக் கத்தரித்து அம்மா வடிவமைத்திருந்த ஆல்பம். இந்த ஆல்பத்தையும் தனது காதுக் கம்மலை அடகுவைத்துக் கொடுத்த ஆயிரத்து ஐநூறு ரூபாயையும்,  இரண்டு பழைய உடுப்புகளையும் தவிர நான் கொண்டு வந்தது எதுவுமில்லை.&lt;br /&gt;இன்னும் சொல்லப்போனால், நடைவண்டியில் நடைபழகிய அனுபவம் எனக்கு இல்லவே இல்லை.&lt;br /&gt;எப்படிச் சொல்வது?&lt;br /&gt;நடைவண்டி வாங்கித் தரும் அளவுக்குக் கூட வசதியற்ற வீடு என்னுடையது.&lt;br /&gt;இருவரும் கிளம்பி சீனிவாசனுக்கு நன்றியைத் தெரிவித்து அறையை விட்டுப் புறப்பட்டோம்.&lt;br /&gt;சென்னையின் கொளுத்தும் வெயிலுக்கு உடலை தயாரிக்கத் தொடங்கினோம். சித்தப்பா பணிபுரியும் அலுவலக முகவரியை žனு கொடுத்திருந்தார்.&lt;br /&gt;கண்டுபிடித்து அலுவலகத்தின் வாசலில் போய் நின்றோம்.&lt;br /&gt;சித்தப்பா வேலையை உதறிவிட்டுப் போய் பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது என்று சுரத்தே இல்லாமல் ஒரு பெண் பதில் அளித்தார்.&lt;br /&gt;சரவணன் அழுதே விடுவான் போல முகம் இறுகினான்.&lt;br /&gt;என் கவலை - இன்று இரவு எங்கே தூங்குவது?&lt;br /&gt;- தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-6762899393265515394?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/6762899393265515394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=6762899393265515394&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/6762899393265515394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/6762899393265515394'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2008/06/blog-post_9239.html' title='நடைவண்டி நாட்கள்: ஒன்று'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-73518851514685486</id><published>2007-06-04T11:01:00.000-07:00</published><updated>2007-06-04T11:03:05.834-07:00</updated><title type='text'>முந்தானைச் சிலந்தி</title><content type='html'>மாந்தளிர் மேனி இல்லை&lt;br /&gt;மகிழப்பூ வாசம் இல்லை&lt;br /&gt;கூந்தலில் வனப்பு இல்லை&lt;br /&gt;கொவ்வையா உதடு? இல்லை&lt;br /&gt;காந்தமா கண்கள்? இல்லை&lt;br /&gt;கைவிரல் பளிங்கு இல்லை&lt;br /&gt;ஏந்திநான் புகழ உன்னில்&lt;br /&gt;எதுவுமே இல்லை இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஓடையின் நடுவே வீழ்ந்த&lt;br /&gt;ஓரிலை போல உந்தன்&lt;br /&gt;தாடையில் சிறிய மச்சம்&lt;br /&gt;தங்கின இரண்டு பருக்கள்&lt;br /&gt;கூடையில் கிடக்கும் கனியின்&lt;br /&gt;கொழுந்திபோல் இடதும் வலதும்&lt;br /&gt;ஜாடையில் அழைப்ப தில்லை&lt;br /&gt;சச்சரவுக் கொடுப்ப தில்லை&lt;br /&gt;&lt;br /&gt;யோசனை செய்து பார்த்து&lt;br /&gt;யூகிக்கும் தோற்ற மில்லை&lt;br /&gt;வாசனை திரவி யங்கள்&lt;br /&gt;வார்த்திடும் தேவை இல்லை&lt;br /&gt;ஊசலை கொடுத்துப் போக&lt;br /&gt;உண்மையில் செழுமை இல்லை&lt;br /&gt;மாசறு பொன்னே என்று&lt;br /&gt;மகிழநான் வழியே இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;ராத்திரி அளந்து பார்க்கும்&lt;br /&gt;ரகசியம் இல்லை; நெஞ்சைக்&lt;br /&gt;காத்திரப் படுத்து கின்ற&lt;br /&gt;கற்பனை வருவ தில்லை&lt;br /&gt;நாத்திகம் போல கொஞ்சம்&lt;br /&gt;நம்பிக்கை விதைக்கும் உன்னில்&lt;br /&gt;மாத்திரை அளவுக் கேனும்&lt;br /&gt;மலினமாய் கவர்ச்சி இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;கிழிந்தயென் வீட்டுக் குள்ளே&lt;br /&gt;கிழமைபோல் நுழைந்தாய்; சின்ன&lt;br /&gt;குழந்தைபோல் சிரித்துக் கொல்லும்&lt;br /&gt;குறும்பிலே வளர்ந்தாய் ; அன்புச்&lt;br /&gt;சுழலிலே உருள வைக்கும்&lt;br /&gt;சுகங்களை குழைத்து குழைத்து&lt;br /&gt;நிழலிலே தடவு கின்றாய்&lt;br /&gt;நிம்மதியை குதறிச் சென்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;மூளையில் கூடு கட்டும்&lt;br /&gt;முந்தானைச் சிலந்தி; நீயென்&lt;br /&gt;நாளையை வெளிச்ச மாக்கும்&lt;br /&gt;நான்கடி விளக்கு; நேசச்&lt;br /&gt;சூளைக்கு ஏற்ற வெப்பம்&lt;br /&gt;சூரியனின் பெண்பால் விகுதி&lt;br /&gt;வாளைப்போல் துளைத்தெ டுக்கும்&lt;br /&gt;வைகறையின் வசந்த லிபிகள்&lt;br /&gt;&lt;br /&gt;உடைகளை சூடிக் கொண்டு&lt;br /&gt;உலவுகின்ற அமுதக் கோப்பை&lt;br /&gt;நடைபெறும் கனிவுத் தேர்வில்&lt;br /&gt;நரம்புகள் போடும் மதிப்பெண்&lt;br /&gt;குடைகளை தவிர்க்கப் பெய்யும்&lt;br /&gt;குறுந்தொகை தூறல்; முத்த&lt;br /&gt;கடைகளை நடத்து கின்ற&lt;br /&gt;காப்பியச் சந்தை; நகர&lt;br /&gt;&lt;br /&gt;வீதியை அமைதி யாக்கும்&lt;br /&gt;வேர்வைப்பூ; கதறக் கதற&lt;br /&gt;சேதிகள் உரைத்துப் போகும்&lt;br /&gt;சித்தாந்தி; எனக்கும் சேர்த்து&lt;br /&gt;வேதியல் காயம் ஏற்கும்&lt;br /&gt;வெற்றிலை; மேலும் சொன்னால்&lt;br /&gt;ஆதியில் யாரோ உண்ட&lt;br /&gt;ஆப்பிளின் மிச்ச பாகம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-73518851514685486?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/73518851514685486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=73518851514685486&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/73518851514685486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/73518851514685486'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2007/06/blog-post_04.html' title='முந்தானைச் சிலந்தி'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-7269889616280011587</id><published>2007-06-04T10:52:00.000-07:00</published><updated>2007-06-04T10:58:16.941-07:00</updated><title type='text'>அத்வைதம்</title><content type='html'>முகம்மலர பேசும் வார்த்தை&lt;br /&gt;  முடிவின்றி தொடரும் நெகிழ்வு&lt;br /&gt;அகத்துக்குள் விளக்கு வைத்து&lt;br /&gt;  அணையாமல் பரவும் தெளிவு&lt;br /&gt;சுகதுக்கம் எதுவென் றாலும்&lt;br /&gt;  சொல்லுகின்ற அதீத அன்பு&lt;br /&gt;அகந்தையை இழந்து நிற்கும்&lt;br /&gt;  அந்தரங்கம்; என்ன சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;பித்தெல்லாம் பிடித்த நிலைமை&lt;br /&gt;  பிணக்கில்லாது நிகழும் தொல்லை&lt;br /&gt;அத்வைதம் போல என்னை&lt;br /&gt;  ஆட்கொண்ட கருப்பு திங்கள்&lt;br /&gt;செத்துவிட்ட மலரின் மீது&lt;br /&gt;  சிருஷ்டிக்க வைக்கும் முத்தம்&lt;br /&gt;கொத்தாக வழியும் கண்ணீர்&lt;br /&gt;  குழப்பத்தில் கரைந்தே னம்மா&lt;br /&gt;&lt;br /&gt;பாதையின் முடிவைத் தேடி&lt;br /&gt;  பாதங்கள் களைப்ப துண்டு&lt;br /&gt;காதைப்போய் முட்டும் போது&lt;br /&gt;  கானங்கள் முளைப்ப துண்டு&lt;br /&gt;வாதையில் வீழ்ந்து வீழ்ந்து&lt;br /&gt;  வாவென்று அணைக்கும் சொற்கள்&lt;br /&gt;போதைபோல் தோன்றும் ஆனால்&lt;br /&gt;  புரிந்துகொள் அதுவே மோட்சம்&lt;br /&gt;&lt;br /&gt;ஈர்ப்பென்று இதனைச் சொல்லி&lt;br /&gt;  இதயத்தை சபிக்க மாட்டேன்&lt;br /&gt;தீர்த்திடுக தாகம் என்று&lt;br /&gt;  தீர்த்தமுனை குடிக்க மாட்டேன்&lt;br /&gt;பார்ப்பதில் வேட்கை உண்டு&lt;br /&gt;  பத்தடிநான் விலகி நின்று&lt;br /&gt;கார்காலம் விரும்பா விட்டால்&lt;br /&gt;  காளான்கள் முளைப்ப தேது?&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டிடும் தாயா? என்னை&lt;br /&gt;  உலர்த்திடும் வெயிலா? ஊரை&lt;br /&gt;காட்டிடும் பொழுதா? பாசக்&lt;br /&gt;  கவிதையின் தொகுப்பா? வந்து&lt;br /&gt;மீட்டிடும் இசையா? இல்லை&lt;br /&gt;  மிதந்திடும் பனியா? உள்ளம்&lt;br /&gt;கேட்கிற கேள்விக் கெல்லாம்&lt;br /&gt;  கிடைக்காது பதில்கள்: முன்னம்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிநான் இனித்த தில்லை&lt;br /&gt;  இருமடங்கு குமைந்த தில்லை&lt;br /&gt;முப்புறமும் துளிர்த்த தீயில்&lt;br /&gt;  முனையளவு கசிந்த தில்லை&lt;br /&gt;அப்பழுக்கு எதுவும் இல்லா&lt;br /&gt;  அவஸ்தையில் விளைந்த தில்லை&lt;br /&gt;சப்பரத்தை சுற்றும் பிள்ளை&lt;br /&gt;  சாமிமுகம் எதிலே பார்க்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;நீசருடன் கொஞ்ச காலம்&lt;br /&gt;  நிம்மதியை தொலைத்தேன்; கட்டில்&lt;br /&gt;ஆசையுடன் பருக வந்த&lt;br /&gt;  அருவருப்பில் கலைத்தேன்; கொஞ்சிக்&lt;br /&gt;கூசுகின்ற பேச்சில் என்னை&lt;br /&gt;  கூப்பிட்டு குறுக வைத்த&lt;br /&gt;வாசகிகள் பலபேர் வாட்ட&lt;br /&gt;  வருந்தினேன் நேற்று வரையில்&lt;br /&gt;&lt;br /&gt;வாழவே பிடித்தி டாமல்&lt;br /&gt;  வாடிநான் சிதைந்த போது&lt;br /&gt;ஏழையாய் தெருக்கள் தோறும்&lt;br /&gt;  ஏங்கிநான் அலைந்த போது&lt;br /&gt;கோழைபோல் எனக்குள் நானே&lt;br /&gt;  கொடுமையால் சரிந்த போது&lt;br /&gt;தோழிநீ கிடைத்தி ருந்தால்&lt;br /&gt;  தொலைவுகள் குறைந்தி ருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டிலே கிடந்த பொன்னை&lt;br /&gt;  இயல்பிலே உருக்கி இன்ப&lt;br /&gt;நெருப்பிலே நகையாய் மாற்றும்&lt;br /&gt;  நிகழ்ச்சிக்கு என்ன பொருள்?&lt;br /&gt;உறுப்பிலே காமம் கொன்று&lt;br /&gt;  உணர்விலே யாவும் வென்று&lt;br /&gt;பிறப்பிலே கருணை காட்டும்&lt;br /&gt;  பிரியமுனை தொழுது நிற்பேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-7269889616280011587?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/7269889616280011587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=7269889616280011587&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/7269889616280011587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/7269889616280011587'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2007/06/blog-post.html' title='அத்வைதம்'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-117431144513614815</id><published>2007-03-19T07:32:00.000-07:00</published><updated>2007-03-19T07:37:25.146-07:00</updated><title type='text'>ஞானக்கீற்று</title><content type='html'>எண்ணிட கனவில்லாமல்&lt;br /&gt;  எப்படி இரவு போகும்?&lt;br /&gt;திண்ணிய மனமில்லாமல்&lt;br /&gt;   தீர்வுகள் குழப்ப மாகும்&lt;br /&gt;புண்ணிய தலமில்லாமல்&lt;br /&gt;  பூசைகள் நடப்ப தேது?&lt;br /&gt;நுண்ணிய அறிவில்லாமல்&lt;br /&gt;  நொறுங்கிடும் புதுமை யேது?&lt;br /&gt;&lt;br /&gt;பற்றிட நெருப்பில்லாமல்&lt;br /&gt;  பரவுமா உலையில் சூடு?&lt;br /&gt;கற்றிட நினைப்பில்லாமல்&lt;br /&gt;  கதறுதல் உலகின் கேடு&lt;br /&gt;சுற்றிட திசையில்லாமல்&lt;br /&gt;  சுருங்குதல் முடவர் பாடு&lt;br /&gt;வெற்றிடம் காற்றைச் சேரும்&lt;br /&gt;  விரக்தியே மனதின் ஊனம்&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிடம் இருக்கும் பூவை&lt;br /&gt;  முயற்சியே பறிக்கும்; புளித்த&lt;br /&gt;கள்ளிடம் இருக்கும் தீங்கை&lt;br /&gt;  கருணையே தடுக்கும்; நீரை&lt;br /&gt;கொள்ளிடம் தனக்குள் ஏந்தி&lt;br /&gt;  கொடுக்குமே வயலுக்கதுபோல்&lt;br /&gt;வள்ளுவம் நமக்கு நாளும்&lt;br /&gt;  வழங்கிடும் ஞானக் கீற்றை&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையின் வயிற்றுக் குள்ளே&lt;br /&gt;  அக்கினி முளைத்த போது&lt;br /&gt;புன்னகை தெறித்து மெல்ல&lt;br /&gt;  புடைக்குமே புடவை அதுபோல்&lt;br /&gt;தென்றலும் காடும் மலையும்&lt;br /&gt;  தென்படும் முன்னே,வாழும்&lt;br /&gt;அன்பினை வடித்துச் சென்ற&lt;br /&gt;  அய்யனே தேவ தூதன்&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை சுகங்களுண்டு&lt;br /&gt;  இப்பெரும் நானி லத்தில்&lt;br /&gt;அத்தனை பெறவும் நமக்கு&lt;br /&gt;  அவசியம் அறவோர் சுருதி;&lt;br /&gt;புத்தியில் கணிப்ப தெல்லாம்&lt;br /&gt;  பூமியில் பெரிதே இல்லை&lt;br /&gt;தத்துவம் வேறு வேண்டாம்:&lt;br /&gt;  தமிழனே குறளை ஓது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-117431144513614815?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/117431144513614815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=117431144513614815&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/117431144513614815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/117431144513614815'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2007/03/blog-post.html' title='ஞானக்கீற்று'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-116351801260014202</id><published>2006-11-14T07:26:00.000-08:00</published><updated>2006-11-14T07:26:52.610-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-116351801260014202?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/116351801260014202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=116351801260014202&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/116351801260014202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/116351801260014202'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2006/11/blog-post_116351801260014202.html' title=''/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-116321873314750984</id><published>2006-11-10T20:09:00.000-08:00</published><updated>2006-11-10T20:22:22.663-08:00</updated><title type='text'>ஸ்திரப்படுதல் அல்லது லட்சிய ஞானஸ்தர்</title><content type='html'>&lt;strong&gt;ச&lt;/strong&gt;மூக அரசியலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எந்தப் படைப்பாளியாலும் தனது இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள இயலாது. எனவே உன் அரசியல் என்னவென்று, எதைச் சார்ந்ததென்று முதலில் முடிவு செய். அது, சரியோ தவறோ காலம் தீர்மானிக்கும். முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது-இப்படியான வாக்கியங்களை அவர் என்னிடம் உதிர்க்கும்போது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.&lt;br /&gt;முதல் கவிதை 'தமிழர் கண்ணோட்டம்' என்னும் இதழில் பிரசுரமாகியிருக்க, அதற்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு என்னு டைய எதிர்கால ஆசைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் நிமித்தம் என்னுடைய அப்பாவால் மொழியப்பட்ட வார்த்தை களே அவை.&lt;br /&gt;அப்பாவுக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே பொதுவுடைமை கருத்துக்கள் மீது தீராத பற்றுயிருந்தது. பிறகு, தமிழ்த் தேசிய ஆர்வலராய் உருமாறியிருந்தார். அவர் என்னிடம் பரிமாறிக் கொண்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் வயதில்லை எனக்கு. பதிமூன்று வயது பள்ளி மாணவன். சமூக அரசியல் என்ற சொல் என்னை பயமுறுத்தியது. எழுத்துக்கு பின்னால் கிளர்ந்தெழும் சூட்சுமத்தை எப்படி புரிந்துகொள்ள முடியும்? ஆனால் அன்பாலும் அப்பா சொன்னதாலும் அது சரியென்றே பட்டது.&lt;br /&gt;உடுமலையைப் பற்றி எழுதும் போது ஒரு பாடலாசிரியன் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகள் எவ்வாறு அவனை அலைக்கழித்து முரணான கருத்துக்கு இட்டுச்செல்கிறது என்று பார்த்தோமோ அந்தப் புரிதலுக்கு மேலும் ஒரு சான்றாக அவரது பாடல் ஒன்று. 'இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள' என்னும் பாடல் சொல்லிய விஷயத்துக்கு மாற்றாக எப்படியெல்லாம் ஒரு பெண் தனது வாழ்வு சாத்தியத்திற்கு துன்பப்பட நேர்கிறது என்னும் பாடலின் பிரதியை தோழர் இளங்கோவன் அனுப்பியிருக்கிறார். படம்-ரங்கோன் ராதா. பாடியிருப்பவர்-சி.எஸ். ஜெயராமன்.&lt;br /&gt;'என்றுதான் திருந்துவதோ நன்றிகெட்ட ஆடவருலகம்' என ஆரம்பிக்கும் பாடலில்&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணான் சொன்ன சொல்&lt;br /&gt;வகையெனவே ராமன்&lt;br /&gt;மனைவியாம் சீதையை வனத்தில் விட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணாள் திரெளபதியை தருமன்&lt;br /&gt;பித்தினில் சூதிலே பணயம் வைத்தான்&lt;br /&gt;கண்ணாம் காதலியை ஒருத்தன்&lt;br /&gt;கடன் தீர்க்க காசிதனில் விலைக்கு விற்றான்&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணா? இரண்டா உபத்திரவம் இந்த&lt;br /&gt;உலகினில் தாய்க்குலம் பட்ட துன்பம்&lt;br /&gt;-ஒரு பாடலாசிரியன் சந்திக்க நேரும் இரண்டு சாளரத்தை இதன் மூலம் உணரலாம். எனினும், பாடலாசிரியனின் தனித்த இயல்பை அல்லது பண்பை எப்படி அறிந்து கொள்வது? அவனது புத்தகங்கள் வாயிலாகவோ நேர்காணல் மூலமாகவோ அறியக்கூடும் என்றாலும், உடுமலை போல அதிகம் உரைநடையில் கவனம் செலுத்தாதவர்களை துல்லி யமாய் விளங்கிக்கொள்வது கடினம். முன்பே, சொன்னதுபோல பாடலாசிரியனின் ரசனை மட்டம் சம்பந்தப்பட்ட இயக்குநர் அல்லது இசையமைப்பாளரின் அறிவு மட்டத்தைப் பொறுத்ததுதான்.&lt;br /&gt;பகுத்தறிவுக் கருத்துக்களைப் பாடல்களில் நுழைத்த உடுமலையைத் தொடர்ந்து பலரும் தன்னை பகுத்தறிவாளராகக் காட்டிக்கொள்ள நினைத்த காலமொன்றிருந்தது. குறிப்பாக, அந்தக் காலத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் திரைத்துறையில் வெகுவாகத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டது. மொழிப்பற்று உடைய அல்லது உடையவராக வெளி உலகிற்குப் பறைசாற்றிக்கொள்வ தில் கலைஞர்கள் பெருமிதம் கொண்டார்கள். அதன் விளைவே அடுக்குமொழி வசனத்தை ஒப்பிக்கும் போட்டிபோல ஒவ்வொரு நடிகரும் திரையில் தென்பட்டனர். யார் எழுதினாலும் ஒரே மாதிரிதான் எழுதுவார்கள் என்று யார் யாரோ இன்றைக்கும் கருத்து சொல்லும் நிலையை ஏற்படுத்தியது. இதை முற்றாகத் தவிர்க்கவோ முன்னெச்சரிக்கையோடு நடக்கவோ இயலாது. பெருவெள்ளம் பெருகி வருகிறபோது அதன் ஆழத்தில் கிடக்கும் கூழாங்கற்கள் அந்த ஆவேசப் பயணத்தில் உருண்டே ஆக வேண்டும்.&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு புறமென்றால் தமிழரசுக் கழகம் இன்னொரு புறம். இரண்டுக்கும் பலமாக, பாலமாக இருந்தவர்கள் கலைஞர்கள்தான். கலைஞர்கள் அன்றைய அரசியலை தனது எழுத்தில், தனது பங்களிப்பில் பிரதிபலித்தது புதிதாய் வருகிறவர்கள் புரிந்துகொள்ளத்தக்கவை. உடுமலையை அடுத்து என் நினைவைச் சட்டெனக் கவ்வியவர் கு.மா.பாலசுப்ரமணியம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன உலகமடா- இது&lt;br /&gt;ஏழைக்கு நரகமடா&lt;br /&gt;-முதல் படப் பாடல் (ஓர் இரவு) முழு ஆதரவு பெற்றதும் ஏ.வி.எம் நிறுவனத்தில் தான் பார்த்து வந்த கதை இலாகா வேலையை ராஜினாமா செய்தார். புது வேலை வந்துவிட்டால் பழைய வேலை புளித்துப் போவது சகஜம்தானே. 1949இல் திரைப்பாடலாசிரியராக அறிமுகமான கு.மா. பா.வுக்கு வயது அப்போது 29.&lt;br /&gt;திரைப்படப் பாடலைக்கூட யாப்பிலக்கணப்படி எழுத வேண்டும் என ஆர்வம் கொண்டவர். இவருடைய 'அமுதைப் பொழியும் நிலவே' மற்றும் 'சிங்காரவேலனே தேவா' இரண்டு பாடல்களும் இன்று வரை பிரசித்தி பெற்று விளங்கும் இரண்டு பாடகிகளுக்கு வாழ்வு தந்ததாகச் சொல்லுவார்கள். அட்சர சுத்தமாகப் பாடுவதைப் போல அட்சர சுத்தமாக எழுதுவதும் தனிக் கலை. அதில் தனித்து விளங்கியவர் கு.மா.பா. 800 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். ஒரு படத்தில் பல கவிஞர்கள் எழுதுவதையும் அதன்மூலம் ஏற்படும் போட்டி மனோபாவம் தமிழுக்கு வளம் சேர்க்கும் எனவும் நம்பியவர்.&lt;br /&gt;கு.மா.பா. நினைவில் நிற்பதற்கு வேறு ஒரு காரணம். அவர் திராவிட இயக்கம் தழைத்த நேரத்தில் தமிழரசுக் கழகத்தைச் சார்ந்து இயங்கியதும் ஒன்று. வேகமாக ஓடிய நதியில் இலை போல ஓடாமல் மிதமாக நடந்த ம.பொ.சி யின் தமிழரசுக் கழகத்தில் இடம்பெற்ற இன்னுமிரண்டு கவிஞர்களில் ஒருவர் கவி கா.மு.ஷெரீப். இன்னொருவர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி.&lt;br /&gt;இப்போது முதல் பத்தியை ஒட்டி விளங்கும் செய்தி புரிபடும். சரியோ தவறோ தனது நம்பிக்கையோடு சமரசம் கொள்ளாத் தன்மையே ஒரு படைப்பாளனின் ஆளுமை. தமிழரசுக் கழகம் பின்னாட்களில் என்னவானது என்பதை யாவரும் அறிவர். ஆனால், தொடக்கக் காலத்தில் அதன் அரும்பணியை, தமிழ் ஆர்வலர்களைக் கவர்ந்திழுத்த காட்சிகளை யாராலும் மறுக்க முடியாது.&lt;br /&gt;தமிழ்த் தேசியம், ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு, தமிழிசை, தமிழ் அர்ச்சனை போன்ற சிந்தனைகளின் தொடக்கக் காரணியாக இருந்தது தமிழரசுக் கழகம். சிலம்புச் செல்வர். ம.பொ.சி.யின் கனவாக இருந்த மாநில சுய ஆட்சிக் கோரிக்கை இன்று வரை பேசப்பட்டுவருகிறது. ஆனால், அதன் போராட்டக் காலமாக இருந்த நாற்பது ஐம்பதுகளில் கு.மா.பா. இணைந்து செயல்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கு.மா.பா தனது அம்மா மூலம் பக்தி இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்வி ஞானத்திலேயே பெரும் கவியாக உருவெடுத்தவர்.&lt;br /&gt;பரபரப்பு, ஆர்ப்பாட்டம், பெருங்கோபம் இவை எவற்றுக் கும் ஆட்படாமல் எண்ணிறைந்த பாடல்களை எழுதிச் சாதித்தவர். முதலில் முடிவு செய். சரியோ தவறோ காலம் தீர்மானிக்கும். முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது.&lt;br /&gt;உரிமைக்கு எல்லை வேங்கடம், உறவுக்கு எல்லை இமயம், நட்புக்கு எல்லை உலகம் என்று பேசிய தமிழரசுக் கழகம் இறுதியில் அண்ணா, இராஜாஜி, காயிதே மில்லத் ஆகியோருடன் கூட்டணி கொண்டது. அதன் மூலம். தி.மு.க. வின் சட்டசபை மேலவை உறுப்பினரானார் கு.மா.பா.&lt;br /&gt;ம.பொ.சியின் நூற்றாண்டு இது. அவர் கொண்டிருந்த கொள்கைகள். முன்வைத்த தீர்மானங்கள். சிலப்பதிகாரத்தைப் பரவலாக்கிய செயல் இவற்றோடு மட்டுமல்லாது தமிழ்நாட்டின் ஒரு காலத்திய பிரதிபலிப்பாக அவரைக் காண வேண்டும். பொங்கல் திருநாளைத் தமிழர் திரு நாளாகக் கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடுத்து செயல்படுத்தியவர் ம.பொ.சி. அவரது நிழலில் என்று சொல்லக் கூடாது. அவரது பாதையைப் பின்தொடர்ந்த கவிஞராக கு.மா.பா. இருந்ததால் செழுமையான தமிழ்ச் சொல்லாட்சி மீது அவர் காட்டிய அக்கறை ஆச்சர்ய மில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நெற்றியின் வேர்வையைச்&lt;br /&gt;சிந்தி-நீ&lt;br /&gt;நித்தம் உழைப்பதும் வீணோ?&lt;br /&gt;&lt;br /&gt;சூழ்ச்சி புரிந்திட்ட பாவி&lt;br /&gt;சுகமுடன் வாழ்ந்திடுவானோ?&lt;br /&gt;தொல்லைக் கொடுத்தவன்&lt;br /&gt;தன்னை&lt;br /&gt;பழி வாங்காமல் விடலாமா?&lt;br /&gt;பழிக்குப் பழி&lt;br /&gt;வாங்காமல் விடலாமா?&lt;br /&gt;-வேலைக்காரன் திரைப்படத்தில் வெளிவந்த இப்பாடலில் என்ன சிறப்பென்று கேட்பதை விட சிறப்பற்றுப்போன வாழ்வை கு.மா.பா. சித்திரிக்கும் விதத்தை ரசிக்க வேண்டும். கற்றை கற்றையாகத் தீருகின்றன காகிதங்கள். கருத்தொருமித்துச் செயல்பட வழியில்லா சேதத்தில் ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் ஆபத்துகளில் ஒன்று போல நாம் பலரையும் மறந்துவிடுகிறோம். இந்த மறதி காலம் கொடுத்ததல்ல. நமது கவனக்குறைவினால் ஏற்படுவது. தனது இடத்தை ஸ்திரப்படுத்துவதில் உள்ள சிக்கல் மட்டும் இல்லை என்றால் ஒவ்வொரு படைப்பாளனும் நெடுங்காலம் இருக்க முடியும். ஒவ்வொரு படைப்பும் உதிராமல் இருக்க இயலும்.&lt;br /&gt;திரைப்பாடல்கள் குறித்து எழுதிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் சங்கீத ரசனை குறித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. நினைத்ததைச் சொல்லாமல் விடுவது நினைவில் வந்த சம்பவத்திற்கு செய்யும் துரோகமல்லவா?&lt;br /&gt;ஒன்றை ரசிப்பதற்கு லட்சிய ஞானம் வேண்டுமா? இல்லை லட்சண ஞானம் வேண்டுமா? என்ற விவாதம் எழுந்தது. லட்சிய ஞானம் என்றால் வேறொன்றுமில்லை. கேட்கிறவர்கள் ஆனந்தப்படுகிற மாதிரி வாசிப்பது. இவ்வகை ரசிகர்களுக்கு லட்சிய ஞானஸ்தர்கள் என்று பெயர். இதே போல லட்சண ஞானஸ்தர்கள் என்றால் சங்கீத லட்சணத்தைத் தெரிந்து குற்றம் குறைகளை ஆராய்ந்து அதற்குப் பின் ரசிக்கிற ரகம். இரண்டு ஞானத்தில் எது சிறந்தது என்று திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களிடம் கேட்டார்கள். நாதஸ்வர சக்கரவர்த்தியாகப் போற்றப்படுகிற அவர் விவரித்த சம்பவம்தான் என் நினைவில் நுழைந்தது.&lt;br /&gt;ஒருமுறை திருச்சி மலைக்கோட்டையருகே கச்சேரி. மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுச்சாமிப்பிள்ளை வாசித்துக் கொண்டிருக்கிறார். நாட்டை, மல்லாரி வாசித்து முடித்து ராக ஆலாபனையை ஆரம்பிக்கும்போது 'பலே' என்றொரு குரல். அந்தப் பாராட்டு கியாஸ் லைட் தூக்குகிறவரிடமிருந்து வந்ததாம். ஒவ்வொரு கச்சேரிக்கும் கியாஸ் லைட் தூக்கிப் போனதில் லட்சிய ஞானஸ்தர் ஆகியிருக்கிறார் அவர். இதுதான் முக்கியம். லட்சண ஞானஸ்தர்களைவிட லட்சிய ஞானஸ்தர்களே திரைப் பாடலை விரும்புகிறவர்கள்.&lt;br /&gt;கு.மா.பா. லட்சிய ஞானஸ்தர்களை முன்வைத்து எழுதிய லட்சண ஞானஸ்தர். இது, மிகை என்பவர்கள் அவரது பாடல் கட்டுகளோடு ஒரு இரவு படுத்துக் கொண்டே கேட்டால் உண்மையென்று உணருவர். ஸ்திரப்படுத்துதல் சிரமம். ஸ்திரப்படுதல் இயல்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-116321873314750984?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/116321873314750984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=116321873314750984&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/116321873314750984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/116321873314750984'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2006/11/blog-post_116321873314750984.html' title='ஸ்திரப்படுதல் அல்லது லட்சிய ஞானஸ்தர்'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-116321787537318920</id><published>2006-11-10T19:51:00.000-08:00</published><updated>2006-11-10T20:04:35.386-08:00</updated><title type='text'>மொழியின் செளந்தர்ய வஸ்து</title><content type='html'>&lt;strong&gt;இ&lt;/strong&gt;னிவரும் திரைப்படங்களில் பாடல்களே இல்லாது போனால் என்ன செய்வீர்கள் என்றார் நண்பரொருவர். திரைப்பாடல் எழுதுகிற என்னைப் பார்த்து இக்கேள்வினை அவர் முன்வைத்தது ஆச்சரியமில்லை. திரைப்படங்களில் பாடல் இல்லையென்றால் மக்கள் என்ன செய்வார்களோ அதையே செய்வேன் என பதிலளித்தேன். உண்மையில், திரைப்பாடல் இல்லையென்றால் என்ன ஆகும்?&lt;br /&gt;நவீனம்-அதி நவீனம்-அதிஅதி நவீனம் எதுவாகக் காலம் தன்னை மாற்றியமைத்துக் கொண்டாலும் திரையிசை இல்லாமல் போய்விடாது என்பது என் எண்ணம். பாடல்கள் வேறெந்த சமூகத்தைக் காட்டிலும் தமிழ்ச்சமூகத்தில் தசையும் எலும்புமாக உயிரின் தேவையாகவும் இருந்துவருகிறது.&lt;br /&gt;இன்றும் சில கிராமங்களில் நாட்டார்பாடல் பாடும் வழக்கமிருப்பினும் திரையிசையின் ஆதிக்கம் சற்று தூக்கலாகவே தென்படுகிறது. இசையையும் நடனத்தையும் களைந்த சமூகம் கொண்டாடத் திராணியற்றுப் போகும். கொண்டாடத் திராணியில்லாத சமூகம் விடுதலையை அல்லது வாழ்வு மாற்றத்தை ஒருபோதும் விரும்பாது.&lt;br /&gt;திரைப்படப் பாடல்களின் தேவை குறிப்பிட்ட திரைப்படத்துப் பாத்திரங்களோடு முடிவடைவதாக மக்கள் நினைப்பதில்லை. மாறாக, தன்னையே பாவித்து அப்பாடல்களின் கதாநாயகர்களாகிவிடுகிறார்கள். எனவேதான், மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி இன்று எழுதவரும் புதுக்கவிஞர் வரை கவனிப்புக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகிறார்கள்.&lt;br /&gt;                இசைமரபு எப்படி தவிர்க்க முடியாத பங்கை வகிக்கிறதோ, அதே அளவு பங்கை திரையிசை பாடல்களும் வகிக்கின்றன. சமயத்தில், திரையிசை மரபே இசை மரபாகவும் எழுதிவிடுகிற அபாயமும் உண்டு.&lt;br /&gt;திரையிசைக்குமுன்பு மக்களின் உதடுகள் உச்சரித்த சொற்கள் எவை எவை? தொழிற்பாடல்களைப் போல, சடங்குப் பாடல்கள் போல, தாலாட்டுப் பாடல்கள் போல வகைக்கொன்றாகப் பார்த்தால் அவையும் வட்டாரத்திற்கு ஒரு முகமாக காட்சியளிக்கிறது. பொதுமைப்பண்புக்கு பாடலை நகர்த்திய பெருமை திரையிசைக்கே உரியது.&lt;br /&gt;திரையிசையின் இன்றைய போக்குகளைப்பற்றி பிரஸ்தாபிப்பதோ பெரியதொரு பாராட்டு பத்திரம் வாசிப்பதோ என் நோக்கமில்லை. வெகுசன ரசனைக்கேற்ப சின்னச் சின்ன இலக்கிய நெகிழ்வுகளோடு திரையிசையை மக்களின் தீவிர வேட்கைக்கு உட்படுத்திய சிலரையேனும் நினைத்துப்பார்க்கவேண்டும்.&lt;br /&gt;சமூக அரசியலோடு தன்னையும் தன் எழுத்துக்களையும் மிகச் சாதுர்யமாக பிணைத்த அவர்களின் நேர்த்தியை யாராலும் மறுக்கமுடியாது. முப்பதுகளில் தமிழ் சினிமா முகங்காட்டத் தொடங்கியதும் இன்றைய மக்களின் வரலாற்றுத் தேவையை, திரையிசை பதிக்கத் தவறவில்லை என்பது ஆறுதலான விஷயம் மட்டுமன்று.&lt;br /&gt;&lt;br /&gt;வெக்கங் கெட்ட&lt;br /&gt;வெள்ளைக் கொக்குகளா&lt;br /&gt;விரட்டி யடித்தாலும்&lt;br /&gt;வாரிகளா&lt;br /&gt;                             - என்றொரு பாடல். 1933இல் வள்ளித் திருமணம் படத்தில் வருகிறது. எழுதியவர், மதுரகவி. அதே படத்தில் வருகிற இன்னொரு பாடல்,&lt;br /&gt;&lt;br /&gt;வளையல் வாங்கலையோ&lt;br /&gt;அம்மம்மா&lt;br /&gt;வளையல் வாங்கலையோ&lt;br /&gt;மாசில்லாத&lt;br /&gt;இந்து சுதேசி வளையல்...&lt;br /&gt;                                   -சுதேசியமும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குக்கெதிரான ஆவேசக் குரலும் முதல் பாடலாசிரியரான மதுரகவியிலிருந்து தொடங்குகிறது. பாரதிக்கு அப்பால் தேசிய உணர்ச்சியை வெகுமக்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை இவருடையது.&lt;br /&gt;நாடகப்பாடல்கள் மூலம் பிரபலமாயிருந்த மதுரகவி திரையிசையைக் கைகொண்டதும் பாகவத் தமிழை பாமரரும் அறியலாயினர். இதன் மூலம் தமிழுக்கு என்ன வளம் கிடைத்ததோ தெரியவில்லை. தமிழ் மக்களுக்கு புதியதொரு சாளரம் திறந்தது. கொஞ்சம் தேசபக்தி; கொஞ்சம் தமிழ் என்றாலும் மிருதியும் சமஸ்கிருதமும் சாஸ்திரியமுமாகவே திரையிசை இருந்தது. பாடல்களின் தொனி மாற்றம் படிப்படியாக நிகழ்ந்திருக்கிறது. ஆனால், பாடல் மீது மக்கள் கொண்ட அபரிமிதமான பிரியம் கொஞ்சம் குறையவில்லை.&lt;br /&gt;கதாநாயக அந்தஸ்து ஒரு நடிகனுக்கு எப்படி சவாலாக அமைகிறதோ, அதே சவாலோடு மக்களின் கேட்பு ரசனையும் மிகுந்துவிட்டது. கதாநாயகர்களை தெய்வமாக தொழுவதும் அதீத பொய்மைகளின் அங்காடியாக அவர்களை போற்றுவதும் ஒரு தராசில் வைக்கப்படும் இரண்டு தட்டுகள். ஒன்றுக்கு ஒன்று கூடுவதும் குறைவதும் இயற்கை.&lt;br /&gt;மதுரகவியைத் தொடர்ந்து பாபநாசம் சிவன். இரண்டாவது உழவில் மேலும் குழைவுறும் மண்போல எளிய நடைக்கு திரையிசையை இட்டுச் செல்ல முனைந்தவர். சாஸ்திரியப் புலமையோடு இவர் இயற்றித் தந்த பாடல்கள் இன்றளவும் பிரசித்தி குறையாமல் விளங்குபவை. தானே மெட்டமைத்து தானே பாடியும் காட்டுகிற ஆற்றல் எத்தனை பேருக்கு இன்றுள்ளது.&lt;br /&gt;             'நான் நடிக்க வேண்டுமானால் சிவன் பாட்டும், இளங்கோவன் வசனமும் எழுத வேண்டும்' என தியாகராஜ பாகவதர் நிபந்தனை போடுமளவுக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றவர். தமிழ்ப் புலமையால் அந்தஸ்து பெறுவது அக்காலத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;'மன்மத லீலையை வென்றாருண்டோ' பாடலின் ஒற்றை வரிக்கு நிகர்த்த பொருளை வேறுயிசை இதுகாரும் பெற்றிருக்கிறதா? தீன கருணாகரனே நடராஜா நீல கண்டனே போல வேறொரு பாடலை விரல் சுட்ட முடியுமா? என்னுமளவுக்கு திரையிசையை பட்டிதொட்டியெல்லாம் பிரபலப்படுத்தியவர் சிவன்தான்.&lt;br /&gt;                              காதலையும் பக்தியையும் பாட்டுக் கோப்பையில் பழரசமாக்கியவர். இவரது பாட்டு பட்டியல் நீளமானது.  மதுரகவி, சிவன் இருவரின் உழைப்பும் சேவை என்றே கருதவேண்டும்.&lt;br /&gt;மெல்லென கவிந்த ஒரு மாலையில் என் குடியிருப்புக்கு அருகிலிருக்கும் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். என்னைக் கடந்து சென்ற ஒருவரின் கைபேசி ஒலித்தது. இதில் என் பாடல். கொஞ்சம் மலர்ச்சியோடு அவரைப் பார்த்தேன். என்னையோ, என் பாடல்தான் அது என்பதையோ அறியாத அவர் பதில் மலர்ச்சிக்கு இடமில்லாமல் விரைந்துவிட்டார்.&lt;br /&gt;இன்னும் கொஞ்சதூரம் நடந்தேன். எதிரே நின்றிருந்த காரை பின்நோக்கி ஓட்டியவர் எச்சரிக்கை ஒலியாக வேறொரு பாடலை பயன்படுத்தினார். அப்புறம் தேநீரகம், தெருமுக்குகள், திருவிழாக்கள், திருமணக்கூடங்கள், எங்கெங்கும் நீக்கமற ஒலிக்கின்றன பாடல்கள்.&lt;br /&gt;காற்றோடு நாம் வசிக்கிறோம் என்பதை நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறது பாடல்கள். தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் அமர்கிற யாரொருவரும் திரையிசையின் வளர்ச்சியை உணரக் கடவர்.&lt;br /&gt;புதியதோ பழையதோ கேட்பதற்கு தேவை பாடல்கள். வானொலியின் ஆகப்பெரும் பயனாக அறிக்கையும் விளம்பரங்களின் அசட்டையும் தவிர்த்து ஒரேயொரு நல்ல விஷயம் பாடல்தான். அதிலும் தொகுப்பாளிகளின் தொண்டை கரைச்சல் செருமல்களில் தொலைந்துவிடுகிறது நேரம்.&lt;br /&gt;ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் திரைப்பாடல் எழுதிய பாபநாசம் சிவன் எண்ணூறு பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பத்மபூஷன் பெற்றவர். பஜனைப் பாடல்களாக கீர்த்தனைகளாக இருந்த சாஸ்திரிய இசையை, சமஸ்கிருத பண்டிதராய் இருந்த அவர் 'வதனமோ சுந்தர பிம்பமோ' என வார்த்ததில் விஷேசமில்லை.&lt;br /&gt;                                       தஞ்சை மாவட்டதில்(மோளகம்) பிறந்த இவர் வறுமை காரணமாக தேசாந்திரம் தேசாந்திரமாக சுற்றித் திரிந்து இறுதியில் திருவனந்தபுரத்திற்குப் போய் சேர்ந்திருக்கிறார். 'ராமசர்மன்' என்ற தன் இயற்பெயரும் அங்குதான் சிவனாக மாறியது. சரமனை நீலகண்ட சிவனை குருவாகக் கொண்டு தினசரி அவர் பின்னே வீதிதோறும் பஜனை பாடியவர், அவர் நினைவாக ராமசர்மன் தன் பேரை சிவனாக்கிக் கொண்டதாக காவ்யா சண்முகசுந்தரம் எழுதியிருக்கிறார். சிறிதுகாலம் பாபநாசத்தில் தங்கியதால் சிவனோடு பாபநாசம் சேர்ந்துகொண்டது.&lt;br /&gt;பாடலாசிரியனாக ஜீவிக்க முடியுமென்று நம்பிக்கை வளர்த்த சிவனின் பெருமைகள் அநேகம். படக் கம்பெனிகள் அப்போது பெட்டிப் பெட்டியாக பணத்தோடு குவியாத காலம். கூத்தாடிப் பிழைப்பென்று குனியவைத்து குட்டிய காலம், இதிலும் சாஸ்திரிய சமஸ்கிருத ஞானம் கொண்டு ஒருவர் எப்படி சமாளித்திருக்க முடியும்?; முடிந்தது.&lt;br /&gt;திண்ணையும் நெட்டுகட்டும் ஊஞ்சல் பலகைகளும் மட்டும் மக்களுக்குப் போதாது. விவசாயமும் வேறுபல கலைகளும் அவர்களின் தேவை. இரண்டுபேர் சந்திக்கையில் குடும்பம் தவிர்த்து குலம் தவிர்த்து பேசுவதற்கு ஏதாகிலும் வேண்டும். தனித்திருக்கும் வேளையில் தன்னோடு துணையாயிருக்க தோழிபோல, தோழன்போல, பாடல்களைக் கருதுகிறார்கள்.&lt;br /&gt;செளந்தர்ய மீட்பர்கள் ஒருவாறாக பாடல்களை உள்வாங்கினாலும் உழைக்கும் மக்களின் பொழுது முகிழ்வதே அவற்றோடுதான். மொழியின் குரூர வஸ்துக்களை உணராமல் இசையின் மிரட்சியை எதிர்கொள்ளாமல் தன்னியல்போடு அவர்கள் உடலில் இரத்தத்தில் கலந்திருக்கிறது.&lt;br /&gt;எத்தனை பெருமை தமிழுக்கு இருப்பினும் திரைத்தமிழ் செழுமைகளை புறக்கணித்துவிட முடியாது. திரைப்படத்துக்கு பாடல் எழுதுகிறவனாக இல்லாமல் திரைப்பாடலை விரும்புபவனாக இதைச் சொல்வதில் சந்தோசம். வேறு தளத்துக்கு தமிழ் சினிமா செல்லவேண்டும்தான். அதற்காக பாடல் மரபே அற்ற வேறு நாட்டுப் படங்களை உதாரணமாகக் கொண்டு செயல்படுதலாகாது.&lt;br /&gt;விளைச்சலே இல்லாத நாட்களில் என்ன செய்வது? வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் உணவுகளைத்தான் புசிக்கவேண்டும். பெட்ரோல் கிணறில்லாத பூமி போல இறக்குமதிகளால் நம்மால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆனால், மரபைத் தொலைத்துவிட்டு இன்னொரு மரபை கைக்கொள்ள இயலாது. உதடு அசைத்து பாடாவிட்டாலும் பாட்டுகள் நம் தனிச்சொத்து. அதை கலைப்படமென்கிற கனவுக்கு காவு கொடுத்துவிடக்கூடாது. திரைப்பாடல்களில் பாடல் இல்லையென்றால் செத்துவிட மாட்டார்கள்தான். ஆனால் மேலும் துயருறுவர்.&lt;br /&gt;இதை எழுதத் தொடங்கும்போது என் பக்கத்துவீட்டு இசுலாமியத் தாத்தா பாடிக் கொண்டிருந்தார், 'தீன கருணாகரனே நடராஜா நீல கண்டனே'. இசைக்கு மொழி மட்டுமல்ல மதமும் கிடையாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-116321787537318920?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/116321787537318920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=116321787537318920&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/116321787537318920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/116321787537318920'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2006/11/blog-post_116321787537318920.html' title='மொழியின் செளந்தர்ய வஸ்து'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-116318585951680967</id><published>2006-11-10T11:10:00.001-08:00</published><updated>2006-11-10T11:10:59.516-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-116318585951680967?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/116318585951680967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=116318585951680967&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/116318585951680967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/116318585951680967'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2006/11/blog-post_116318585951680967.html' title=''/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-116318565086398124</id><published>2006-11-10T10:51:00.000-08:00</published><updated>2006-11-10T11:12:08.750-08:00</updated><title type='text'>கவிதையும் நெகிழ்வும்</title><content type='html'>&lt;strong&gt;த&lt;/strong&gt;மிழ்த் திரைப்பாடல்களின் ரசனை மட்டம் குறிப்பிட்ட இயக்குனரின், இசையமைப்பாளரின் ரசனை மட்டத்தைச் சார்ந்தது - அதிகமாகவோ, குறைவாகவோ தான் கொண்டிருக்கும் படிநிலையை ஒட்டுமொத்த கவிதைகளின், பாடல்களின் தரமாகக் கருதிவிடுவது அவர்களுடைய இயல்பு.&lt;br /&gt;தொடக்க கால திரைப்படத்தில் இருந்து இன்று வரை இந்த இயல்புகளே பிரதானமான அளவு கோலாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வார்த்தையளவில் மட்டுமல்ல கருத்து ரீதியாகவும்.திராவிடச் சார்புடைய இயக்குநரால் அவரது திரைப்படங்களில் சூசகமாக அக்கருத்தை நுழைக்கும் முயற்சியும், அல்லாதவராயின் புராதனச் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டும் வந்துள்ளதற்கானச் சான்றுகளை நம்மால் உணர முடியும்.&lt;br /&gt;அது சரியா? தவறா? என்பதல்ல. படைப்பின் தரத்தை, தலைமையைத் தீர்மானிப்பவரின் ஆளுமையாகவே அதைக் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;மாறிவருகிற அரசியல் நடப்புகளுக்கேற்ப திரைப்பாடல்கள் தங்கள் முகத்தை மாற்றிக் கொண்டு வந்துள்ளன. பாபநாசம் சிவன், பாஸ்கர தாஸ் இருவரை அடுத்து கவனிக்க வேண்டிய வர் பாரதிதாசன். பாவேந்தரின் கொள்கை மாண்புகளும் தனிப்பட்ட எழுத்து வேட்கையும் யாவரும் அறிந்ததே. எனினும், அவரது திரைப் பாடல் அனுபவங்கள் இன்றுவரை எல்லாக் கவிஞர்களுக்கும் அச்சமூட்டுபவையாக இருக்கிறது.&lt;br /&gt;பாடலாசிரியனுக்கும் கவிஞனுக்கும் உள்ள இடைவெளியை இதன் மூலம் புரிந்துகொள்ள லாம். பாடலாசிரியனாக உள்ள ஒருவருக்கு இத்தகைய இக்கட்டுகள் நேர்வதே இல்லை. ஆனால், கவிஞனாகவும் அறியப்பட்ட கருத்தியல் ரீதியாக முனைப்புடையவராகவும் உள்ள ஒருவருக்கு சினிமாப்பாடல் மரியாதைக் குறைச்சலான விஷயமாகயிருக்கிறது. எழுத்தின் தராசு இன்னொருவரின் கையில் இருப்பதை எந்த படைப்பாளியாலும் ஏற்க முடியாது. தன்னியல்பாக முகிழ்க்கும் அவனது சிந்தனை ஓட்டத்திற்கு போடப்படும் முட்டுக்கட்டை களை அவன் பொறுப்பதில்லை. சுய அடையாளத் தோடு இயங்க நினைக்கிற கவிஞன் இன்னொருவரின் அடையாளத்தை தன் அடையாளமாகக் கைக்கொள்வது எளிதல்ல.&lt;br /&gt;'வளையாபதி' எனும் திரைப்படத்தில் 'குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்' என்றொரு பாடல். இந்தப் பாடலில் 'குலுங்கிடும்' என்ற வார்த்தைக்கு கமழ்ந்திடும் என்றே பாரதிதாசன் எழுதியிருக்கிறார். 'கமழ்ந்திடும்' என்ற வார்த்தை ஒலிப்பதிவில் தெளிவாக இல்லை. எனவே அதை மாற்றித் தரும்படி இசையமைப்பாளர் கேட்க, இந்த வார்த்தை தெளிவாகக் கேட்க வேண்டுமானால் பட அதிபர் சுந்தரத்திடம் 'ஒலிப்பதிவு கருவியை மாற்றுங்கள்' என்றாராம் பாரதிதாசன். இது சொல்லப்படுகிற சம்பவம். பாரதிதாசனின் தன் பாடல் வரிகள்மீது கொண்டுள்ள அபரிமிதமானத் தெளிவைப் பிறிதொருவர் மாற்ற முயலுகையில் கவிஞனுக்கே உரிய கோபம் அவரிடம் வெளிப்பட்டது ஆச்சரியமில்லை. பிறகு அவ்வார்த்தை கண்ணதாச னால் 'குலுங்கிடும்' என்பதாக மாற்றப்பட்டுள்ளது.&lt;br /&gt;ஒரு வார்த்தைதானே அதை மாற்றினால் என்ன... மூழ்கியா போகிறது? பிறரது விருப்பங்களை, பிறரது ஆலோசனைகளைக் கேட்க மனமில்லாத ஒருவரால் வெற்றிகரமான பாடலாசிரியனாக ஜீவிக்க முடியாது என்று எண்ணுபவர்களுக்கு பாரதிதாசனின் செயல் மூர்க்கத்தனமானதாகப் படலாம். உண்மையில், அதுதான் படைப்பு மனம். அந்த மூர்க்கம்தான் பாவேந்தர் போன்றோருக்கு சொத்து.&lt;br /&gt;உச்சரிக்கும் விதத்தில் இசையமைக்கும் உத்திகளில் இன்று எவ்வளவோ மாறிவிட்டன. தமிழ்க்கொலைகள் சகல தமிழன்பர்களின் ஆதரவோடும் நிகழ்ந்து வருகின்றன. இந்தக் கால கட்டத்தில் பாவேந்தர் போன்ற இயல்புடைய அரசியல் சார்புடைய ஒருவரைக் காண்பதும் அவர்கள் வெகுஜன ஊடகத்தில் பங்களிப்பு செலுத்தும் நிலையும் அறவே இல்லை எனலாமா? தெரியவில்லை. இனி திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதில்லை என அறிவித்துவிட்ட அறிவுமதி அண்ணனுக்கும் இக்கருத்தியல் மனமே காரணம். வார்த்தை மாறுவதை ஏற்க முடியாத மனமுடையவர்கள் கருத்தியல் மாற்றத்தை ஒப்புக் கொள்ள இயலாது.&lt;br /&gt;தான் சார்ந்திருக்கும் கட்சி அல்லது கொள்கைக்கு முரணான விஷயங்களைத் தீர்மானிக்கும் பொறுப்பிலுள்ள இயக்குநர் அல்லது இசையமைப்பாளர் சேர்க்க முயலும்போது அவர்களது படைப்பு மனம் சிதறுண்டு விடுகிறது. போதாமைகளால் நிகழும் இத்தவறுகளைப் பொறுத்துக்கொண்டு இயங்க வேண்டிய நிலை பாடலாசிரியனுக்குண்டு. கவிஞனுக்கில்லை.&lt;br /&gt;அச்சுப்பிழையோடு தன் கவிதைகள் வெளிவந்தாலே தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் ஒருக்காலும் திரைத்துறையில் நீடித்த ஆயுளைப் பெற்றதில்லை. எனில், நீடித்து நிலைப்பவர்கள் எல்லோரும் பிழை பொறுப்பவர்கள் என்றும் அர்த்தமில்லை. தன்னளவில் வைத்திருக்கும் குறைந்த பட்ச சமரங்களைச் செய்து கொள்கிறவர்கள் எனலாம்.&lt;br /&gt;இசை மாறிவிட்டது, திரைக் கதையின் முறைமை மாறிவிட்டது. நடிப்புக் கலைஞர்களின் திறனும் வரையறையும் மாறிவிட்டது. ஆனாலும், பாடல்களின் வடிவம் மாறவில்லை. வடிவம் என்று நான் சொல்வது, ஒரு பல்லவி இரண்டு சரணம் என்கிற வடிவம். இந்த வடிவம் பன்னெடுங்காலமாக இருந்து வருவது. தனிக் கவிதைகளை இசையமைக்கும் போது கூட இந்த வடிவத்தை இசையமைப்பாளரும் இயக்குநரும் மாற்ற முயற்சிப்பதில்லை.&lt;br /&gt;மூன்று அல்லது நான்கு முறை பல்லவி எதற்காக வரவேண்டும். ஒரே முறையோடு சரணத்திற்குப் போனால் என்ன? என்ற யோசனையும் வரவில்லை. காரணம் மக்களுக்கு பழக்கப்பட்ட முறையை மாற்றுவ தில்லை. நமக்குள்ள தயக்கம், பழக்கப்பட்ட என்பதை விட பழக்கப்படுத்தின முறையை என்பதே சரி.&lt;br /&gt;பாரதிதாசன் பாடல் முயற்சிகள் மட்டுமல்ல, வசனத்திலும் அவருக்கு நேர்ந்த அனுபவம் சங்கடத் துக்குரியதுதான். தாங்களாக எழுதப்பட்ட வசனத்தில் சிலவற்றை மாற்றியும் நீக்கியும் பாவேந்தரின் அனுமதி யில்லாமல் இயக்குநர் படப்பிடிப்பு நடத்தியதை பொறுக்க முடியாமல், மீதுள்ள காகிதங்களை வீசி யெறிந்துவிட்டு வந்திருக்கிறார். அதன் பின் வெகுகாலம் சினிமா வாடையே இல்லாது இருந்திருக்கிறார்.&lt;br /&gt;நாற்பதுகளின் பின்பகுதி. திராவிட இயக்கங்கள் தமிழ் மண்ணில் வீறுகொண்டு தளைத்த காலம். துறைதோறும் திராவிடக்காரர்கள் கைப்பற்றும் நிலையில் மறுபடியும் பாவேந்தரின் பாடல்கள் வெளிவரத் துவங்கின. எனினும், அவை ஏற்கனவே அவரது தொகுப்புகளில் இருந்து எடுத்தாளப்பட்டன.&lt;br /&gt;குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் 'பணம்'(1952) திரைப்படத்திலுள்ள 'பசியென்று வந்தால் ஒரு படி சோறு' எனும் பாடல். அத்திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் மு.கருணாநிதி. பாடல்கள் கண்ண தாசன். திராவிடக் கருத்துக்களின் பிரச்சாரப்படம் என்று சொல்லுமளவிற்குத் தணிக்கைக் குழுவின் கண்களிலிருந்து தப்பிய படம். திராவிட இயக்கங்களின் தலைமை கவியாக அறியப்பட்ட பாவேந்தர், இயக்கச் சார்புடைய திரைத்துறையினர் இடம்பெறும் படத்தி லெல்லாம் பிறகு காணப்படுகிறார். கருத்தியலுக்கு முதன்மை என்கிற அவரது சிந்தனைச் சிதைவுறாமல், வேண்டுமானால் அவரே சில வரிகளை நீக்கியும் மாற்றவும் ஒப்புதல் தந்திருக்கிறார்.&lt;br /&gt;இன்னொரு சம்பவத்தை நினைவு கொள்ள வேண்டும். பராசக்தி திரைப்படத்தில் வருகிற 'வாழ்க வாழ்க வாழ்கவே' பாடல். பராசக்தியை விட்டு விட்டு திராவிட இயக்கங்களின் திரை முயற்சியை எழுத முடியாது என்றான திரைப்படம். அந்தப் படத்தில் தலைப்புப் பாடலாக பாவேந்தரின் வரிகளைப் பயன்படுத்த படக்குழுவினர் திட்டமிடு கிறார்கள். பாவேந்தரிடம் அனுமதி பெறும் பொறுப்பு மு.கருணாநிதி அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் கள். வசனங்களின் இடையிடையே திராவிட எழுத் தாளர்களின் நூல்கள் மேற்கோள்கள் கையாளப்பட்டி ருப்பது சான்று.&lt;br /&gt;அனுமதி பெற கருணாநிதி அவர்கள் பாவேந்தரை சந்திக்கிறார். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறார் பாவேந்தர். என்றாலும் படக்குழுவினருக்கு ஒரு தயக்கம். பயன்படுத்தப் போகிற பாடலுக்கு எவ்வளவு தொகை தரவேண்டும் என்பதை எப்படிக் கேட்பது? தயங்கித் தயங்கி கேட்கையில் தொகை அதிகமாயிருந்தால் என்ன செய்வதென்று தயக்கத்தோடு தொடங்குகையில் 'திராவிட நாடு' பாட்டுப் படத்தில் பயன்படும் என் பாடலுக்கு பணமா? இதன் மூலம் திராவிட மக்களுக்கு என் கருத்துகள் பரவிடப் போகிறது அது போதாதா...' எனறு பெருந்தன்மையோடு பணம் பெற மறுத்திருக்கிறார்.&lt;br /&gt;கட்டுரைத் தொடக்கத்தில் சொன்னது போல, திரைப்படத்தின் அல்லது திரைப்பாடல்களின் ரசனை மட்டம் இயக்குநரைச் சார்ந்தது. எந்தக் கருத்திய லோடு அவர்கள் இயங்குகிறார்களோ அந்தக் கருத்துச் சார்புடையவர்கள் இடம் பெறுவதிலும் மக்களிடத் தில் வெற்றி பெறுவதும் தவிர்க்கமுடியாது.&lt;br /&gt;இன்றைய திரைப்பாடல்களில் இப்படியானதொரு கருத்தியல் நிலவுகிறதா? என்பதை யோசிக்க வேண்டும். எந்தக் கருத்தியலுக்குள்ளும் சிக்காத பொதுத்தன்மையை அவை கைக்கொண்டுள்ளன. முழுநீள அரசியல் படமாக எடுக்கப்பட்டாலும், அதில் வருகிற பாடல்கள் அரசியலைப் பிரதிபலிப்ப னவாக இல்லை. எதிர்கட்சி என்று காட்டப்படுவது வில்லத் தன்மையை பறைசாற்றுவதற்காக என்றே அமைந்துவிடுகிறது. தொன்னூறுகளுக்குப் பின்னுள்ள திரைப்படங்கள் முழுவதுமாக வணிக நோக்கமுடைய வனாக அமைந்துவிட்டதை கவலையோடுப் பதிவு செய்யவேண்டும்.&lt;br /&gt;ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் இவ்விரு படத்தில் தலா ஒரு பாடலை சுட்டலாம். அதிலும் பொதுவான கருத்துக்களே முதன்மைக் கொள்கின்றன. 'விடைகொடு எங்கள் நாடே' என்ற பாடலில் புலம்பெயர்வுச் சோகங்கள் பிரதானப்பட்டாலும் அரசியல் காத்திரங்கள் வந்துவிடாதவாறு அமைந்துள்ளன. சூழலுக்கேற்ப பாடல்கள் என்கிறபோது அச்சூழலே தவிர்க்கப்படும் நிலையில் சிறந்த பாடல்களுக்கான வாசல் அடைபட்டுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'எத்தனை எத்தனை&lt;br /&gt;நீண்ட இரவுகள்&lt;br /&gt;என்றைக்காவது விடியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை எத்தனை&lt;br /&gt;கோடி கனவுகள்&lt;br /&gt;இன்றைக்காவது முடியாதா?'&lt;br /&gt;-என்று 'ஜி' திரைப்படத்தில் என்னால் எழுதப்பட்ட போதும் அந்தக் கருத்துக்களின் சாயல் படத்தில் இல்லாததால் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது. இதுபோலவே, கார்மேகம் திரைப்படத்தில் 'காசா படியளந்தா' எனும் பாடல்.&lt;br /&gt;திரைப்பாடல்கள் வெறும் கவிதைகளல்ல. அவற்றுக்கு போதிய இசையும் கருத்தும் சூழலும் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;'சித்திரச் சோலைகளே-உமை நன்கு&lt;br /&gt;திருத்த இப்பாரினிலே - முன்னர்&lt;br /&gt;எத்தனை தோழர்கள் ரத்தம் சொறிந்தனரே&lt;br /&gt;உங்கள் வேரினிலே.'&lt;br /&gt;-இசை, கருத்து, சூழல் தவிர்த்துப் பாடப்படுகிற நடிகரின் செல்வாக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது. இன்றைக்கு முன்னணி கதாநாயர்கள் இப்படியான கருத்துக்களை முன்மொழிபவர்களாகவோ, வழிமொழிபவர்களாகவோ இல்லாதது அரசியல் இயக்கங்களின் தொய்வு என்றே சொல்ல வேண்டும். மக்களை ஈர்ப்பதற்கான சக்தி இனி அரசியலுக்கு இல்லை எனக் கருதுகிறார்களோ என்னவோ?&lt;br /&gt;ஆட்சியைப் பிடிப்பது; நாற்காலி கனவு காண்பது என்பதுகூட வரப்போகிற தனது திரைப்படத்துக்கான விளம்பர உத்தியாக சிறுத்துவிட்டது. அழகியலைத் தாண்டி கருத்தியலை கைகொள்ள துணியாத கலை இலக்கியம் ஒருபோதும் மக்களுக்கானதல்ல.&lt;br /&gt;வேறு எப்போதையும்விட நவீன கவிதைகளின் சாளரங்கள் தொண்ணூறுகளில் கூடுதலாகவே திறக்கப்பட்டுள்ளன. வானம்பாடி இயக்கத்தின் காட்சிகள் எப்படி நா.காமராசனால் 'நுரை பூவை அள்ளி அலை சிந்த வேண்டும்' என்று எழுதப்பட் டதோ அப்படி தற்கால அடையாளங்கள் திரைப் பாடல்களில் தென்படத் துவங்கியுள்ளன. இது, வெறும் வாக்கிய அழகாக மட்டுமல்லாது தேசிய அடையாளங்களை கொள்ளவேண்டும். தேக அடையாளமல்ல. தேசிய அடையாளம், வாழ்நிலைச் சார்ந்த பதிவுகள். வட்டார இலக்கியத்தின் கவி நிரம்பிய சொல்லாடல்கள். வடிகட்டின தமிழ்க் கவிதைச் சாறுகளைப் பாட்டுக்கோப்பையில் ஊற்ற வேண்டும்.&lt;br /&gt;கவிஞனுக்குரிய படைப்பு மனமும், பாடலாசிரியனுக்குரிய நெகிழ்வு மனமும் கலக்கிற இடத்தில் புதிய ஆக்கங்கள் முகிழ்க்கக்கூடும்.&lt;br /&gt;சமீபத்தில் தக்கலை ஞானமேதை பீர் முகமதப்பா அவர்களின் தேர்வுசெய்யப்பட்ட பாடல்களை இசைத் தொகுப்பாக கீற்று வெளியீட்டகம் வெளியிட்டார்கள். தமிழின் முதல் சூஃபி என்று போற்றப்படுகிற அவருடைய பாடல்களின் தொனி ஏகத்துவத்தைச் சொன்னாலும் இசையின் நெகிழ்வை ஏற்கும் ஓசை மரபைக் கொண்டிருக்கிறது. ஓசை மரபுதான் திரைப்பாடல்களின் உள்ளீடு.அவ்விழாவில் பங்குகொண்டமை மகிழ்வைத் தந்தது.இப்படியான தனிமுயற்சிகள் வரவேற்கப் படவேண்டும்.&lt;br /&gt;'கமிழ்ந்திடும்' என்பதை 'குலுங்கிடும்' எனும்போது அரை மாத்திரை குறைந்து ஒலிப்பதே ஓசை மரபின் அடிப்படை. இந்த ஓசை மரபை தன்னிச்சையாகக் கொண்டிருந்தவர் பட்டுக்கோட்டையார். இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும்தான் பட்டுக்கோட்டை யார் மெட்டுக்கு எழுதினார் என்பதும் பிற யாவும் எழுதிய பாட்டுக்கு மெட்டமைக்கப்பட்டன என்பதும் சொல்லப்பட்டு வருகிற செய்தி, இதில் எந்த அளவு உண்மையோ?&lt;br /&gt;பாவேந்தரின் கருத்தியலோடு சற்றும் விலகாத உடுமலை நாராயண கவியும், அக்காலத்திய அரசியல் நிகழ்வுகளும் பாடல்களில் எங்ஙனம் வெளிப்பட்டன என்பதை வேறொரு கட்டத்தில் விரிவாக பார்க்க வேண்டும்.&lt;br /&gt;ரசனை மட்டம் எப்படி உருவாகிறது? தனி மனிதனின் ரசனை தனிமனிதனால் உருவாக்கப்படுவதல்ல. சமூக விழுமியங்களின் சாயல்களால் அவனறிந்த ரசனை உருவாகிறது. அப்படியானால், இன்றைய ரசனை மக்களுக்கு ஏற்புடையதா? காட்டுக்கத்தலாய் ஒலிக்கிற அந்த ஒலிப்பெட்டியைக் கொஞ்சம் அணைத்தாலென்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32554211-116318565086398124?l=yugabharathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yugabharathi.blogspot.com/feeds/116318565086398124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32554211&amp;postID=116318565086398124&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/116318565086398124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32554211/posts/default/116318565086398124'/><link rel='alternate' type='text/html' href='http://yugabharathi.blogspot.com/2006/11/blog-post_116318565086398124.html' title='கவிதையும் நெகிழ்வும்'/><author><name>யுகபாரதி</name><uri>http://www.blogger.com/profile/00618204559022080668</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_MvPSILX_9Go/SE9oF9x8NEI/AAAAAAAAAAM/fiiuTTUsn3Y/S220/IMG_0037.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32554211.post-116318454958195243</id><published>2006-11-10T10:30:00.000-08:00</published><updated>2006-11-10T10:49:09.603-08:00</updated><title type='text'>நித்தியத்தன்மை</title><content type='html'>(கம்பதாசன்:தமிழ்த்திரைப் பாடலாசியர்களில் முக்கியமானவர்.தோய்ந்த இலக்கியச்செழுமைக்குச் சொந்தக்காரர்.அவரைப் பற்றி குறும்பட இயக்குநரும் எனது தோழரும் "திரை" பத்திரிகை ஆசிரியருமான லீனாமணிமேகலை தனது திரை இதழுக்காக என்னிடம் கேட்டுப்பெற்ற கட்டுரை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தா&lt;/strong&gt;ன் ரசித்த ஒரு கருத்தையோ படைப்பையோ அதே ருசியோடு இன்னொருவருக்குக் கடத்துவது சாதாரணமல்ல. சொல்லத் தொடங்கியதும் கூடவோ குறைத்தோ நம்மையறியாமல் வார்த்தைகள் பின்னிக்கொள்ளும். சொல்ல நினைத்
